Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மாநகராட்சி பள்ளிகளுக்கு வந்தாச்சு நல்ல காலம்! ஆசிரியர் மனநிலையும் மாறணும்

Print PDF

தினமலர் 23.03.2010

மாநகராட்சி பள்ளிகளுக்கு வந்தாச்சு நல்ல காலம்! ஆசிரியர் மனநிலையும் மாறணும்

கோவை: கோவை மாநகராட்சி பட்ஜெட்டில், மாநகராட்சிப் பள்ளி மாணவர்களின் கல்வி மேம்பாட்டுக்கு சிறப்பு கவனம் அளிக்கப்பட்டுள்ளது. பல சிறப்பு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. பள்ளியின் உள்கட்டமைப்பு வசதிகளில் மட்டுமல்லாமல், கற்பிக்கும் ஆசிரியரின் மனநிலையிலும் மாற்றம் கொண்டு வர மாநகராட்சி கல்விக்குழு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆய்வகம் நவீனம்: மாநகராட்சியின் 18 மேல்நிலை, உயர்நிலைப்பள்ளிகளின் ஆய்வகங்கள் 50 லட்சம் ரூபாய் செலவில் மேம்படுத்தப்படவுள்ளன. வரும் கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கும் செய்முறை தேர்வுகள் அறிமுகம் செய்யப்படவுள்ளது. கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட 18 மேல்நிலை, உயர்நிலைப்பள்ளிகளில் 50 லட்சம் ரூபாய் செலவில் அறிவியல் மற்றும் கம்ப்யூட்டர் லேப், உள்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படவுள்ளன. மாநகராட்சி காதுகேளாதோர், வாய் பேசாதோர் பள்ளி தரம் உயர்த்தப்படவுள்ளது. இப்பள்ளியின் மாணவர் விடுதிக்கு இரண்டு அடுக்கு படுக்கை வசதி, சமையல் பாத்திரங்கள், மாணவர்களுக்கு சீருடைகள், பயிற் சிக்குத் தேவையான 'ஹியரிங் எய்டு', விளையாட்டு உபகரணங்கள், ஆகிய வசதிகள் இந்த நிதியாண்டில் 25 லட்சம் ரூபாயில் நிறைவேற்றப்பட வுள்ளன. அவுட்சோர்சிங் முறையில் சிறப்பு பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு பயிற்சி வழங்கப்படவுள்ளது.

வாழ்வியல் பயிற்சிகள்: மாநகராட்சிப் பள்ளிகளில் 8 முதல் 12ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களை அனைத்து துறைகளிலும் திறமையானவர்களாக மாற்ற, வாழ்வியல் பயிற்சிகள் அளிக்கப்பட வுள்ளது. படைப்பாற்றல், தலைமை பண்பு வளர்த்தல், பாடி லாங்குவேஜ், தன்னம்பிக்கை, மேடைப் பேச்சு, குறிக்கோள் அமைத்தல் உள்ளிட்ட தனித்திறன்களை வளர்க்கும் பயிற்சிகளுக்காக ரூ.10 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் இயக்கம்: மாநகராட்சிப் பள்ளிகளில் சுற்றுச்சூழல் இயக்கம்(இக்கோ கிளப்) துவங்கி, மாணவர்களுக்கு இயற்கை, சுற்றுச்சூழல் சார்ந்த கல்வி வழங்கவும், சுற்றுச்சூழலை பாதுகாப்பதின் அவசியத்தை அறிந்து கொள்ளவும் ஏற்பாடு செய்யப்படவுள்ளது. இதற்காக நடப்பு நிதியாண்டில் ரூ.50 லட்சம் ஒதுக்கப்பட் டுள்ளது.

யோகா பயிற்சி: மாநகராட்சிப் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்களுக்கு யோகா பயிற்சி அளிக்க ரூ.30 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் நினைவாற் றலை ஒருமுகப்படுத்த திட்ட மிடப்பட்டுள்ளது.

கல்விச் சுற்றுலா: மாநகராட்சிப் பள்ளி மாணவர்களின் பொது அறிவுத் திறனை மேம் படுத்தவும், அறிவியல் அறிவை வளர்க்கவும், வரலாற்று சிறப்புமிக்க இடங்கள், அறிவியல் ஆராய்ச்சி மையங்கள் மற்றும் சிறப்பு வாய்ந்த இடங்களுக்கு மாணவர்கள் கல்விச் சுற்றுலா அழைத்து செல்லப்படவுள்ளனர். இத்திட்டத்துக்கு, இந்த நிதியாண்டில் ரூ.10 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. மாநகராட்சிப் பள்ளி மாணவர்கள் விளையாட்டில் சிறந்து விளங்க வசதியாக, 85 பள்ளிகளிலும் ரூ.25 லட்சம் செலவில் விளையாட்டு உபகரணங்கள் வாங்கி பயிற்சி அளிக்கப்படவுள்ளது.

இது மட்டும் போதாது: பள்ளியின் உள்கட்டமைப்பு, மாணவர்களின் தனித்திறன் வளர்ப்பு ஆகியவற்றை விட, தங்களை நம்பி வந்துள்ள ஏழை மாணவர்களுக்கு அர்ப்பணிப்பு உணர்வுடன் பாடம் கற்பிக்க வேண்டும் என்ற எண்ணம் ஆசிரியர்களுக்கு வரும்வரை இத்திட்டங்களால் பலனில்லை. ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட ஐந்தாறு பள்ளிகளைத் தவிர, மீதமுள்ள மாநகராட்சிப் பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் கடந்த சில ஆண்டுகளாக உயரவே இல்லை. ஆசிரியர்கள்தான் இதற்கு காரணம் என்பதை உணர்ந்து, அவர்களை ஈடுபாட்டுடன் பாடம் கற்பிக்க செய்யவும் மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழுக்கு 'குட்பை' : மாநகராட்சிப் பள்ளி மாணவர்களின் வாசிப்புத் திறனை மேம்படுத்த ரூ.8 லட்சம் செலவில் ஆங்கில நாளிதழ்கள், அறிவியல், பொது அறிவு சார்ந்த இதழ்கள் வழங்கப்படும்' என, பட்ஜெட்டில் அறிவிக்கப்பட் டுள்ளது. அரசு, மாநகராட்சிப் பள்ளிகளில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் பல மாணவர்கள் தமிழ் படிக்கத் தெரியாத அவலநிலை உள்ளது. தமிழுக்கு முக்கியத்துவம் தரும் ஆட்சியில், தமிழை உதா சீனப்படுத்தி விட்டு, ஆங்கில நாளிதழ்கள் மட்டுமே வாங்குவதால், மாணவர்களுக்கு எந்த பயனும் ஏற்படப் போவதில்லை.

Last Updated on Tuesday, 23 March 2010 07:49