தினமலர் 26.04.2010
பழைய பள்ளி கட்டடங்களை இடிக்க மாநகராட்சி முடிவு
திருப்பூர் : திருப்பூர் மாநகராட்சிக்கு சொந்தமான பள்ளி களில் உள்ள பழைய கட்டடங்கள், பள்ளிக்கு அருகில் உள்ள பழைய கட்டடங்களை இடிக்க மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.ஜெய்வாபாய் பள்ளியில், புதிதாக 33 வகுப் பறைகள் கொண்ட கட்டடம் கட்டப்பட்டு வரு கிறது. இப்பள்ளி வளாகத்தில் 50 ஆண்டு கட்ட டங்களும் உள்ளன. ஆறு வகுப்பறைகள் கொண்ட ஓட்டுக்கூரை கட்டடம்; மூன்று வகுப்பறைகளும், ஒரு ஆசிரியர் அறையும் கொண்ட ஓட்டுக்கூரை கட்டடம்; ஏழு வகுப்பறைகள் கொண்ட கட்டடம் என மூன்று கட்டடங்கள் மிகவும் மோசமான நிலை யில் உள்ளன. இவற்றை இடித்து அப்புறப்படுத்த மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
நஞ்சப்பா பள்ளியில் இரண்டு கைத்தறி அறை கள், ஒரு சத்துணவு மைய கட்டடம்; ஒரு வாகன நிறுத்துமிடம் என நான்கு கட்டடங்கள் பழுத டைந்து, மோசமான நிலையில் உள்ளன. 16வது வார்டுக்கு உட்பட்ட வெங்கடாசலபதி மாநகராட்சி பள்ளிக்கு அருகில் மாநகராட்சிக்கு சொந்தமான ஓட்டுக்கூரை கட்டடம் உள்ளது. இக்கட்டடங் களையும் இடித்து அப்புறப் படுத்த மாநகராட்சி நிர் வாகம் முடிவு செய்துள்ளது. இது குறித்த தீர்மானம், வரும் 29ம் தேதி நடக்கும் மாநகராட்சி கூட்டத்தில் மன்ற ஒப்புதலுக்காக வைக்கப்படுகிறது.