தினமணி 28.04.2010
நகராட்சி பள்ளிக் கட்டடம் திறப்பு
ஆம்பூர், ஏப்.27:ஆம்பூர் பெத்லகேம் பகுதி நகராட்சி நடுநிலைப் பள்ளியில் ரூ.9.75 லட்சம் செலவில் கட்டப்பட்ட புதிய கட்டடத்தை ஆம்பூர் நகர்மன்றத் தலைவர் வாவூர் நஜீர் அஹமத் திங்கள்கிழமை திறந்து வைத்தார்.
மாதனூர் உதவி தொடக்கக் கல்வி அலுவலர்கள் திருப்பதி, கருணாகரன் ஆகியோர் தலைமை வகித்தனர். பள்ளி ஆசிரியர் என். சுப்பிரமணி, நகராட்சி ஆணையர் தா. உதயராணி, கல்விக்குழுத் தலைவர் கே. யுவராஜ் மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.