Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

புதிய வகுப்பறை திறப்பு விழா

Print PDF

தினமலர் 29.04.2010

புதிய வகுப்பறை திறப்பு விழா

ஆம்பூர்: ஆம்பூர் நகராட்சி பள்ளியில் புதிய வகுப்பறைகள் திறப்பு விழா நடந்தது. ஆம்பூர் பெத்லகேம் நகராட்சி நடுநிலைப்பள்ளியில் எஸ்.எஸ்.., மூலம் மூன்று வகுப்பறைகள் கட்டப்பட்டன. இதற்கான திறப்பு விழா நடந்தது. மாதனூர் உதவி தொடக்கக்கல்வி அலுவலர் திருப்பதி தலைமை வகித்தார். உதவி தொடக்க கல்வி அலுவலர் கருணாகரன், கல்வி குழு தலைவர் யுவராஜ், கவுன்சிலர்கள் சுரேஷ்பாபு, தட்சிணாமூர்த்தி, நூர்ஜகான், ராஜன், சாம் செல்லபாண்டியன், ரபீக்அகமது ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆசிரியர் சுப்பிரமணி வரவேற்றார்.நகராட்சி தலைவர் நசீர்அகமது, வகுப்பறைகளை திறந்து வைத்தார். விழாவில் நகராட்சி கமிஷனர் உதயராணி, நகராட்சி பொறியாளர் இளங்குமரன், கல்வி குழு உறுப்பினர்கள் கணேசபாண்டியன், எசுடையான், ஜாகிர்உசேன், சாவித்திரி, தலைமையாசிரியர்கள் ரவிச்சந்திரன், ஜோதியம்மாள் உட்பட பலர் கலந்துகொண்டனர். தலைமையாசிரியை சரஸ்வதி நன்றி கூறினார்.

Last Updated on Thursday, 29 April 2010 06:41