தினமலர் 04.05.2010
பள்ளி கட்டட திறப்பு விழா
செய்யாறு: செய்யாறு நகராட்சி முஸ்லிம் பள்ளி கட்டட திறப்பு விழா நடந்தது.இந்நிகழ்ச்சியில், திருவண்ணாமலை மாவட்ட அனைவருக்கும் கல்வி திட்ட முதன்மை கல்வி அலுவலர் அசோகன் பங்கேற்றார். மாவட்ட உதவி திட்ட ஒருங்கிணைப்பாளர் மதியழகன் மற்றும் பள்ளி கல்விக்குழு ஆலோசகர் ஆரிப்பாஷா முன்னிலை வகித்தனர்.3 வகுப்பறைகள் கொண்ட புதிய கட்டடத்தை முதன்மை கல்வி அலுவலர் அசோகன் திறந்து வைத்தார். நகராட்சி தலைவர் சம்பத், வட்டார வள மைய மேற்பார்வையாளர் மணி, உதவி தொடக்கக் கல்வி அலுவலர் சரளா அறிவழகி ஜெயராமன், நகராட்சி பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் பயிற்றுனர்கள் பங்கேற்றனர்.முன்னதாக, தலைமை ஆசிரியர் குமார் வரவேற்றார், ஆசிரியை ஜெயந்தி நன்றி கூறினார்.