Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Education

மாநகராட்சி பள்ளிக்கு ரூ. 8 லட்சத்தில் கட்டடம்: செம்மலை எம்.பி.​ திறந்து வைத்தார்

Print PDF

தினமணி 08.10.2010

மாநகராட்சி பள்ளிக்கு ரூ. 8 லட்சத்தில் கட்டடம்: செம்மலை எம்.பி.​ திறந்து வைத்தார்

சேலம்,​​ அக்.​ 7: ​ ​ சேலம் மாநகராட்சி தாதகாப்பட்டியில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளிக்கு ரூ. 8 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட கூடுதல் கட்டடத்தை சேலம் எம்.பி.​ எஸ்.செம்மலை திறந்து வைத்தார்.

சேலம் மக்களவைத் தொகுதி உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் தாதகாப்பட்டி மேட்டுத் தெருவில் உள்ள நடுநிலைப் பள்ளிக்கு கூடுதல் வகுப்பறைகள் கட்ட ரூ. 8 லட்சம் நிதியை செம்மலை ஒதுக்கியிருந்தார்.​ கட்டி முடிக்கப்பட்ட புதிய வகுப்பறைகளின் திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு அதிமுக பகுதிச் செயலர் சண்முகம் தலைமை தாங்கினார்.​ மாநகர் மாவட்டச் செயலர் எம்.கே.செல்வராஜ்,​​ முன்னாள் எம்.எல்..​ எஸ்..​ வெங்கடாசலம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

​ புதிய வகுப்பறைகளை செம்மலை எம்.பி.​ திறந்து வைத்துப் பேசினார்.​ நிகழ்ச்சியில் அவர் கூறும்போது,​​ சேலம் மாநகர்,​​ மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இதுவரை ரூ. 2 கோடி மதிப்பீட்டில் பள்ளிக் கட்டடங்கள்,​​ ஆரம்ப சுகாதார நிலைய கட்டடங்கள்,​​ ஆழ்துளை கிணறுகள்,​​ சின்டெக்ஸ் குடிநீர் தொட்டிகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளன.​ மேலும் பல லட்சம் மதிப்பில் பணிகள் நடைபெற்று வருகின்றன என்றார். ​ முன்னாள் எம்.எல்.ஏ.​ நடேசன்,​​ முன்னாள் துணை மேயர் செüண்டப்பன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 

மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு பயிற்சி

Print PDF

தினமணி 08.10.2010

மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு பயிற்சி

கோவை,​​ அக்.​ 7: கோவை மாநகராட்சி பள்ளிகளில் பயிலும் 5 ஆயிரம் மாணவர்களுக்கு உயர் கல்வி மற்றும் வேலை வாய்ப்புப் பயிற்சி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

​ கோவை மாநகராட்சி சார்பில் ரூ. 20 லட்சம் செலவில் உயர்கல்வி மையம் ஆகஸ்ட் ​ மாதம் அமைக்கப்பட்டது.​ மாநகராட்சி பள்ளி மாணவ,​​ மாணவியருக்கு உயர் கல்வி மற்றும் வேலை வாய்ப்பு பயிற்சி வழங்க கோவை அரசு கலைக் கல்லூரி குடிமைப்பணி ​ பயிற்சி மையத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டது.

​ இதன்படி மாநகராட்சி பள்ளிகளில் பயிலும் 5 ஆயிரம் மாணவர்களுக்கு உயர் கல்வி மற்றும் வேலை வாய்ப்பு பயிற்சி வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.​ முதல் பயிற்சி முகாம் செப்.​ 29ம் தேதி நடந்தது.​ இதில் மாநகர காவல் ஆணையர் சைலேந்திபாபு பங்கேற்றார்.​ இரண்டாம் நிகழ்வு வரும் சனிக்கிழமை(அக்.9) நடக்கிறது.​

இனி வாரம் தோறும் சனிக்கிழமைகளில் 100 மாணவர்கள் வீதம் சிறப்புப் பயிற்சி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.​ முதல் கட்டமாக பிளஸ் 2 மாணவர்களுக்கும்,​​ அடுத்த கட்டமாக பிளஸ் 1 மாணவர்களுக்கும் பயிற்சி வழங்கப்படுகிறது.

​ மேல்நிலை படிப்பு பயிலும் மாணவர்களுக்கான உயர் கல்வி வாய்ப்புகள்,​​ ​ஆர்வமுள்ள துறைகளைக் கண்டறிதல்,​​ அதற்கான படிப்புகளை தெரிவு செய்தல்,​​ அந்த ​ படிப்புகள் உள்ள கல்வி நிறுவனங்கள்,சேர்க்கை விதிமுறைகள்,​​ உள்ளிட்டவை கற்றுத்தரப்பட உள்ளது.​ படிப்பிற்கான வேலை வாய்ப்பு உள்ள துறைகள்,​​ அதற்கானபோட்டித் தேர்வுகள்,​​ போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் முறைகள் ​கற்றுத்தரப்படுகிறது.​ எளிதில் வேலை வாய்ப்பு பெறத் தேவையான மென்திறன் ​பயிற்சிகள்,​​ உரையாடும் திறன்,​​ சூழ்நிலையை திறம்பட கையாளுதல்,​​ குழு செயல்பாடு,​​ பொது அறிவு,தமிழ் ​ மற்றும் ஆங்கில மொழிகளை சிறப்பாகக் ​ கையாளும் திறன் கற்றுத்தரப்பட உள்ளது.​​ இது தவிர,​​ அடிப்படை வாழ்க்கைக்கு தேவையான சுத்தம்,சுகாதாரம் ​ பேணுதல்,சுற்றுச்சூழல் பாதுகாப்பு,​​ பிளாஸ்டிக் ஒழிப்பு,போக்குவரத்து விதிகளை ​ அறிதல் உள்ளிட்ட பயிற்சிகள் வழங்கப்பட உள்ளது.​ ​

​ கல்வியாளர்கள்,​​ துறை ​ நிபுணர்கள்,​​ அரசு அதிகாரிகள்,சாதனையாளர்களின் சொற்பொழிவுகள் இடம்பெறுகின்றன.​ உயர் கல்வி மற்றும் வேலை வாய்ப்பு குறிப்புகள் அடங்கிய வழிகாட்டி கையேடு தயாரித்து மாணவர்களுக்கு வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.​

இது தவிர மாநகராட்சி உயர்கல்வி மையத்தின் மூலம் ​பொருளாதாரத்தில் பின்தங்கிய 120 மாணவ,​​ மாணவியர் இலவச சிவில் சர்வீசஸ் ​பயிற்சி பெற்று வருகின்றனர்.​ ​ ​ ​ மாநகராட்சி ஆணையர் அன்சுல் மிஸ்ரா உத்தரவின் பேரில் உயர்கல்வி மையத்தின் தலைவர் மற்றும் முதன்மை நிபுணர் பி.கனகராஜ்,​​ மாணவர்களுக்கு பயிற்சி வழங்கிவருகிறார்.

 

மாநகராட்சி பணிகளில் ரூ6 ஆயிரம் கோடி மோசடி தணிக்கை குழு அறிக்கையில் தகவல்

Print PDF

தினகரன் 08.10.2010

மாநகராட்சி பணிகளில் ரூ6 ஆயிரம் கோடி மோசடி தணிக்கை குழு அறிக்கையில் தகவல்

பெங்களூர், அக்.8: பெங்களூர் மாநகராட்சி வளர்ச்சித்திட்ட பணிகளில் ரூ6ஆயிரம் கோடி அளவுக்கு ஊழல் நடைபெற்றுள்ளது மத்திய தணிக்கை குழு அறிக்கையில் தெரியவந்துள்ளது.

பெங்களூர் மாநகராட்சி பணிகளில் ஊழல் நடந்து வருவதாக அனைத்து கட்சியினரும் குற்றம்சாட்டி வந்தனர். இந்நிலையில், மாநகராட்சி சார்பில் நடைபெறும் வளர்ச்சி திட்டங்களில் ரூ6ஆயிரம் கோடி அளவுக்கு முறைகேடு நடந்துள்ளது மத்திய தணிக்கை குழு அறிக்கையில் தெரியவந்துள்ளது.

மாநகராட்சியில் நடைபெறும் வளர்ச்சி திட்டங்களில் விதிமுறைகள் 2008 முதல் 2010 ஆண்டுகளில் விதிமுறைகள் மீறப்பட்டுள்ளன. 2008&09ம் ஆண்டுக்காக ரூ1,141கோடிக்கு திட்டப்பணிகள் வகுக்கப்பட்டுள்ளன. ஆனால், அவற்றை செய்துமுடிக்க ரூ1,500கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதேபோன்று அடுத்த ஆண்டிலும் ரூ2ஆயிரத்து438 கோடிக்கான நலப் பணிகளில் ரூ2ஆயிரத்து 500கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

இதுபோன்ற அதிகரிக்கப்பட்டுள்ள தொகைக்கு கமிஷனரின் ஒப்புதல் பெறவேண்டியது கட்டாயம். ஆனால், விதிமுறைகள் மீறப்பட்டு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளே ஒப்புதல் அளித்துள்ளனர். பல பணிகளுக்கான டெண்டர்கள் கொடுக்கப்பட்ட விளம்பரங்கள் வெளியூரிலுள்ள பத்திரிகைகளில் இடம்பெற்றுள்ளன. ஆனால், உள்ளூர் பத்திரிகைகளில் இடம்பெறவில்லை. ஒரு சில காண்டிராக்டர்களின் நலனை விருப்பத்தில் கொண்டு இதுபோன்று இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது. பல திட்டங்களில் அவை நகரின் எந்தப்பகுதியில் எந்த வார்டில் செய்யப்பட்டன என்ற விவரமே குறிப் பிடப்படவில்லை. ஆனால், பொதுவாக மெட்ரோ ரயில்பணி நடைபெறும் இடங்களைச் சுற்றிலும் சாலை மேம்பாடு, கால்வாய் அமைக்கப்பட்டது என்ற பொதுவான குறிப்பு மட்டுமே இடமபெற்றுள்ளது.

ஒரு பணியை செய்துமுடிக்கு முன்னர் அவற்றை எப்படிசெய்யவுள்ளோம் என்பது குறித்த திட்டக்குறிப்பு இடம்பெற வேண்டியது அவசியம். ஆனால், கடந்த 3ஆண்டுகளில் மாநகராட்சியில் நடைபெற்ற பணிகள் எதற்கும் இதுபோன்ற விதிமுறை பின்பற்றப்படவில்லை. 2009&10ம் ஆண்டுக்கான தணிக்கை அறிக்கை தயாரிப்பதற்காக மாநகராட்சியிடமிருந்து கணக்கு விவரங்கள் கோரப்பட்டுள்ளது.இதுதொடர்பாக கமிஷனர் 84 இன்ஜி னியர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.

 


Page 36 of 111