தினமணி 27.08.2010
இஸ்ரோவை பார்வையிட மாநகராட்சிப் பள்ளி மாணவிகள் 5 பேர் தேர்வு
மதுரை, ஆக. 26: ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோவை பார்வையிட, மதுரை மாநகராட்சி பள்ளி மாணவிகள் 5 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
மதுரை மாநகராட்சிப் பள்ளிகளில் 10-ம் வகுப்புத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற முதல் 5 மாணவிகளான டி.ஜி. வித்யா, ஆர். செல்வலட்சுமி, ஆர். மோனிகா, எச். ஹீமாயா, டி. லட்சுமிபிரியா ஆகியோர், ஸ்ரீஹரிகோட்டாவிலுள்ள இஸ்ரோ என்ற இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகத்தின் அறிவியல் தொழில்நுட்ப நுணுக்கத்தைத் தெரிந்து கொள்வதற்காக, விரைவில் அனுப்பி வைக்கப்படவுள்ளனர். இதற்கான ஏற்பாட்டை, மாநகராட்சி நிர்வாகம் செய்து வருவதாக, மாநகராட்சி கமிஷனர் எஸ். செபாஸ்டின் தெரிவித்துள்ளார்.