Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Education

கல்வி உபகரணங்கள் அளிப்பு

Print PDF

தினமணி 19.08.2010

கல்வி உபகரணங்கள் அளிப்பு

திருச்சி, ஆக. 18: திருச்சி கீழ தேவதானம் மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் மாணவர்களுக்குக் குறிப்பேடுகள், பேனா, பென்சில்கள், சீருடைகள் ஆகியவை அண்மையில் வழங்கப்பட்டன.

பள்ளித் தலைமையாசிரியர் து. மகேஸ்வரி தலைமை வகித்தார். புனித வளனார் கல்லூரி தலைமைச் செயலர் அருள்தந்தை ஆல்பர்ட் முத்துமாலை அடிகள், டிஸ்úô அறக்கட்டளை நிறுவனர் ஜேம்ஸ், செயலர் லீனா ஜெனிபர், சமூக நல மேம்பாட்டு அமைப்புத் தலைவர் தங்கவேல், பெற்றோர்- ஆசிரியர் கழகச் செயலர் முருகேசன், உதவி ஆசிரியை ந. தீபா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 

சென்னையில் 15 துவக்கப் பள்ளிகளில் விஜயதசமியன்று ஆங்கில வழி வகுப்புகள் தொடக்கம்: மேயர் மா.சுப்பிரமணியன்

Print PDF

தினமணி 17.08.2010

சென்னையில் 15 துவக்கப் பள்ளிகளில் விஜயதசமியன்று ஆங்கில வழி வகுப்புகள் தொடக்கம்: மேயர் மா.சுப்பிரமணியன்

சென்னை துவக்கப் பள்ளி, நடுநிலைப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிப்பது தொடர்பாக திங்கள்கிழமை நடைபெற்ற ஆசிரியர்களின் கருத்துக் கேட்பு கூட்டத்தில் பேச்சு

சென்னை, ஆக.16: இந்த ஆண்டில் விஜயதசமியன்று 15 சென்னை துவக்கப் பள்ளிகளில் ஆங்கில வழிப் பிரிவு வகுப்புகள் தொடங்கப்பட உள்ளன என்று மேயர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

சென்னை துவக்கப்பள்ளி, நடுநிலைப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிப்பது தொடர்பான ஆசிரியர்களின் கருத்துக் கேட்பு கூட்டம் சென்னையில் திங்கள்கிழமை நடைபெற்றது.

இதில் கலந்து கொண்டு மேயர் மா.சுப்பிரமணியன் பேசியது:

சென்னையில் ஏற்கெனவே 25 துவக்கப் பள்ளிகளில் ஆங்கில வழிப் பிரிவு தொடங்கப்பட்டுள்ளது.

÷இப்பள்ளிகளில் கடந்த ஆண்டில் 750-ஆக இருந்த மாணவர் சேர்க்கை, இந்த ஆண்டில் 1,365-ஆக அதிகரித்துள்ளது.

இதைக் கருத்தில் கொண்டு இந்த ஆண்டில் புதியதாக 15 துவக்கப் பள்ளிகளில் ஆங்கில வழிப் பிரிவு வகுப்புகள் தொடங்கப்பட உள்ளன. ÷இந்த ஆண்டில் 12-ம் வகுப்பு மற்றும் 10-ம் வகுப்பில் தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது. தொடக்கக் கல்வியில் கொடுத்த பயிற்சியால் தான் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் மாணவர்கள் சாதிக்க முடிகிறது.

இப்போது மண்டலம் ஒன்று முதல் 5 வரையிலான ஆசிரியர்களிடம் ஆலோசனைகள் கேட்கப்பட்டு வருகின்றன. அடுத்து வரும் ஆகஸ்ட் 19-ம் தேதி மண்டலம் 6 முதல் 10 வரையிலான துவக்கப்பள்ளி, நடுநிலைப் பள்ளிகளைச் சேர்ந்த ஆசிரியர்களிடம் கருத்து கேட்கப்படும். தனியார் பள்ளிகளில் உள்ள கட்டமைப்பு வசதிகளை போல, சென்னை பள்ளிகளிலும் நவீன வசதிகள் ஏற்படுத்தி ஏழை, எளிய மாணவர்களுக்கு தரமான கல்வி வழங்கப்படும். சென்னையில் உள்ள தனியார் உண்டு உறைவிடப் பள்ளிகளைப் போல, 10 ஆற்றல்சார் பள்ளிகளை இம்மாத இறுதிக்குள் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள அரசு துவக்கப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைந்து வருகிறது. இதைக் கண்காணித்து மாணவர் சேர்க்கையை அதிகரிப்பது அவசியமாகும். விஜயதசமியின் போது 10 ஆயிரம் மாணவர்களை சேர்க்க வேண்டும் என்பது இலக்காக உள்ளது. அதற்கு தகுந்தாற்போல துவக்கப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க ஒவ்வொரு ஆசிரியரும் 10 பேரை சேர்க்க வேண்டும் என்று உறுதி ஏற்க வேண்டும் என்றார். கூட்டத்தில்,

சென்னை துவக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளின் ஆசிரியர்கள் தெரிவித்த கருத்துகளின் விவரம்:

தனியார் பள்ளிகளைப் போல மாணவர்களுக்கு அடையாள அட்டை, டை, பேட்ச் ஆகியவற்றை வழங்க வேண்டும்.இப்போது மாணவர்களால் ஷூ அணிந்தபடி வகுப்பறையில் அமர்ந்து படிக்க முடியவில்லை. எனவே மேஜை, நாற்காலியை வழங்க வேண்டும். மேலும், துவக்கப் பள்ளி மாணவர்கள் இசைக் கல்வி பெற வழிவகை செய்ய வேண்டும். பள்ளிகளில் அலுவலகப் பணிகளுக்குப் போதிய பணியாளர்களை நியமிக்க வேண்டும். பள்ளிகளில் கழிப்பறைகளை முறையாகப் பராமரிக்க வேண்டும்.

பள்ளிக்கு வரும் பெரும்பாலான மாணவர்கள் காலை உணவு சாப்பிட்டுவிட்டு வருவதில்லை. எனவே, அவர்களுக்கு ரொட்டித் துண்டு, பழம் ஆகியவற்றை வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கருத்துகளை தெரிவித்தனர். ஆசிரியர்கள் தெரிவித்துள்ள பல்வேறு கருத்துகளை பரிசீலித்து, அடுத்தக் கல்வியாண்டில் நிதிநிலையில் சேர்த்து அமல்படுத்த போதிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மேயர் மா.சுப்பிரமணியன் உறுதி அளித்தார்.

Last Updated on Wednesday, 18 August 2010 10:10
 

மாநகராட்சி பள்ளிகளில், ஆங்கில வழி கல்விக்கு ஏற்பாடு

Print PDF

தினமலர் 17.08.2010

மாநகராட்சி பள்ளிகளில், ஆங்கில வழி கல்விக்கு ஏற்பாடு

சென்னை : ""சென்னை மாநகராட்சியின் மேலும் 15 பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வி துவங்கப்படும்,'' என, மேயர் சுப்ரமணியன் பேசினார்.சென்னை மாநகராட்சி தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை அதிகரிப்பது குறித்த கலந்தாய்வுக் கூட்டம் தி.நகர் சர்.பிட்டி தியாகராயர் கலையரங்கில் நேற்று நடந்தது.கூட்டத்தில் மேயர் சுப்ரமணியன் பேசியதாவது:பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தேர்வுகளில் மாநகராட்சி பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது. இதற்கு தொடக்க மற்றும் நடுநிலைக் கல்வியே அடிப்படை.மாநகராட்சி சார்பில், இம்மாத இறுதிக்குள் 10 ஆற்றல்சார் பள்ளிகள் துவங்கப்படும். கடந்த ஆண்டு துவங்கப்பட்ட 25 ஆங்கில பள்ளிகளில் 750 மாணவர்கள் சேர்ந்தனர்.இந்தாண்டு இப்பள்ளிகளில் 1,385 பேர் சேர்ந்துள்ளனர். வரும் அக்டோபரில் விஜயதசமி அன்று மேலும் 15 பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வி துவங்கப்படும்.ஒவ்வொரு ஆசிரியரும் குறைந்தபட்சம் பத்து மாணவர்களை சேர்க்க முயற்சிக்க வேண்டும். மாநகராட்சி பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைந்தால், கூடுதலாக உள்ள ஆசிரியர்களை அரசிடம் ஒப்படைக்க வேண்டிவரும். அந்நிலை வராமல் ஆசிரியர்கள் பார்த்துக் கொள்ள வேண்டும்.இவ்வாறு மேயர் சுப்ரமணியன் பேசினார்.

 


Page 44 of 111