Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Education

நகராட்சி நடுநிலைப் பள்ளி தரம் உயர்த்தப்படும்

Print PDF

தினமலர் 10.08.2010

நகராட்சி நடுநிலைப் பள்ளி தரம் உயர்த்தப்படும்

விழுப்புரம்: விழுப்புரம் நகராட்சி நடுநிலைப் பள்ளிக்கு தேவையான வசதிகள் செய்யப்பட்டு தரம் உயர்த் தப்படும் என்று சேர்மன் ஜனகராஜ் பேசினார்.மாவட்ட பள்ளி கல்வித் துறை மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் பள்ளி மாணவர்களுக்கான துளிர் வினாடி-வினா போட்டி நேற்று விழுப்புரத்தில் நடந்தது. விழுப்புரம் பூந்தோட்டம் நகராட்சி நடுநிலைப் பள் ளியில் நடந்த நிகழ்ச் சிக்கு தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட பொருளா ளர் சிவமுருகன் தலைமை தாங்கினார். மாவட்ட ஒருங்கிணைப் பாளர் பாலமுருகன் வரவேற்றார்.விழுப்புரம் நகர் மன்றத் தலைவர் ஜனகராஜ் துளிர் வினாடி-வினா போட் டியை துவக்கி வைத்து பேசியதாவது:

தமிழகத்தில் முதல்வர் கருணாநிதி கல்வி வளர்ச் சிக்காக பல்வேறு பணிகளை செய்து வருகிறார். விழுப்புரம் மாவட்டத் திற்கு மருத்துவக் கல்லூரி, இரு இன்ஜினியரிங் கல்லூரி, பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் ஒரு அரசு கல்லூரியும் கடந்த நான்கு ஆண்டுகளில் ஏற்படுத்தப் பட்டுள்ளது. குடும்பத்தில் முதல் பட்டதாரிகளுக்கு இலவச கல்வித் திட்டம் மூலம் பல்லாயிரக்கணக் கான மாணவர்கள் உயர் கல்வியும், தொழிற் கல்வியும் படிக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இன்ஜினியரிங் கல்லூரிகளில் தமிழ் வழிக் கல்வி அறிமுகப்படுத்தியிருப்பது கிராமப்புற மாணவர்களுக்கு பயனுள்ளதாக அமைந்துள் ளது. அதேபோல் வருங்காலத்தில் மருத்துவக் கல்வியும் தமிழில் கொண்டு வர அரசு திட்டமிட்டுள்ளது.

எனவே விழுப்புரத்தில் உள்ள தனியார் பள்ளிகளுக்கு இணையாக நகராட்சி பள்ளி தரம் உயர்த் தப்படும். இந்த பள்ளிக்கு தேவையான கட்டட வசதி, ஆய்வக வசதி மற் றும் கம்ப்யூட்டர் வாங்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படும். இன்னும் மூன்று மாதங்களில் நகராட்சி பள்ளிக்கு தேவையான வசதிகள் செய்யப் பட்டு மாநில அளவில் சிறந்த பள்ளியாக தரம் உயர்த்தப்படும்.இவ்வாறு சேர்மன் ஜனகராஜ் பேசினார்.நகராட்சி பணி மேற் பார்வையாளர் ஜெயபிர காஷ் நாராயணன், தமிழ் நாடு அறிவியல் இயக்க நிர்வாகி மோகன் கலந்து கொண் டனர். அறிவியல் இயக்க மாநில பொதுக் குழு உறுப்பினர் அய் யனார் நன்றி கூறினார்.

 

பள்ளிகளுக்கான விளையாட்டு: மாநகராட்சி பள்ளி சாம்பியன்

Print PDF

தினமலர் 09.08.2010

பள்ளிகளுக்கான விளையாட்டு: மாநகராட்சி பள்ளி சாம்பியன்

கோவை: பள்ளி மாணவியருக்கான வாலிபால் போட்டியில், ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி பள்ளியும், பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்களுக்கான கால்பந்து போட்டியில், கிறிஸ்துஅரசர் பாலிடெக்னிக் கல்லூரியும் சாம்பியன் பட்டம் வென்றன. கால்பந்து போட்டியில், சி.எஸ்..,ஆண்கள் மேல்நிலை பள்ளி வென்றது. கிறிஸ்து அரசர் பாலிடெக்னிக் கல்லூரி சார்பில் பிஷப் அக்வினாஸ் கோப்பைக்கான வாலிபால் போட்டி, பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கான கால்பந்து போட்டிகள் நடந்தன.மாணவியருக்கான வாலிபால் இறுதி லீக் போட்டியில், ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி பள்ளி முதலிடம் பெற்றது. சின்னத்தடாகம் அரசு பெண்கள் பள்ளி இரண்டாமிடம் வென்றது. பி.எஸ்.ஜி.ஜி.,கன்யாகுருகுலம் பள்ளி மூன்றாமிடமும், மாரியம்மாள் பள்ளி நான்காமிடமும் பெற்றன.பள்ளி மாணவருக்கான கால்பந்து இறுதி லீக் போட்டியில், சி.எஸ்..,ஆண்கள் மேல்நிலை பள்ளி முதலிடமும், சேலம் லிட்டில் ப்ளவர் பள்ளி இரண்டாமிடமும், மணி மேல்நிலை பள்ளி மூன்றாமிடம் வென்றன. இன்டேன்ட் ஜீசஸ் பள்ளி நான்காமிடம் பெற்றது.பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கான இறுதி போட்டியில், கிறிஸ்து அரசர் பாலிடெக்னிக் கல்லூரி, 4-2 கோல் கணக்கில் டை-பிரேக்கரில் மதுரை லதா மாதவன் பாலிடெக்னிக் கல்லூரியை வென்றது. சுகுணா பாலிடெக்னிக் கல்லூரி மூன்றாவது இடத்தை பிடித்தது. கோவை மறைமாவட்ட கத்தோலிக்க பிஷப் தாமஸ் அக்வினாஸ் தலைமை வகித்தார். கலால், சேவை வரித்துறை கமிஷனர் ராஜேந்திரன் பரிசளித்தார். கல்லூரி தாளாளர் குழந்தைராஜ் முன்னிலை வகித்தார். கல்லூரி முதுநிலை ஆசிரியர் ஜோன்ஸ் வரவேற்றார். உடற்கல்வி இயக்குனர் பிரடரிக் மனோஜ் நன்றிகூறினார்.

 

வண்ணார்பேட்டை மாநகராட்சி பள்ளிக்கு சிறந்த பள்ளிக்கான விருது பெற்று சாதனை

Print PDF

தினமலர் 09.08.2010

வண்ணார்பேட்டை மாநகராட்சி பள்ளிக்கு சிறந்த பள்ளிக்கான விருது பெற்று சாதனை

திருநெல்வேலி: நெல்லை கல்வி மாவட்டத்தில் சிறந்த பள்ளிக்கான விருது மற்றும் சிறந்த கிராம கல்விக்குழு ஆகிய இரு விருதுகளை பெற்று வண்ணார்பேட்டை மாநகராட்சி பள்ளி சாதனை படைத்துள்ளது. தமிழ்நாடு தொடக்க கல்வித்துறையின் சார்பில், கல்விப்பணியில் சிறப்பாக செயல்பட்ட பள்ளி தேர்ந்தெடுக்கப்பட்டு ஆண்டு தோறும் கேடயம் வழங்கப்பட்டு வருகிறது. நெல்லை கல்வி மாவட்டத்தில் 2009-10ம் கல்வியாண்டில் சிறப்பாக கல்வி திட்டங்களை செயல்படுத்தியதற்காக வண்ணார்பேட்டை மாநகராட்சி நடுநிலைப்பள்ளி "சிறந்த பள்ளி விருது'க்கு தேர்ந்தெடுக்கப்பட்டது. மேலும் அனைவருக்கும் கல்வி இயக்க திட்டத்தின் மூலம் கிராமக் கல்விக்குழுவோடு இணைந்து பள்ளியின் வளர்ச்சியை மேம்படுத்தியதற்காக 2009-10ம் கல்வியாண்டில் "சிறந்த கிராம கல்விக்குழு' விருதினையும் வண்ணார்பேட்டை மாநகராட்சி புதிய நடுநிலைப்பள்ளி பெற்றுள்ளது. ஒரே ஆண்டில் இப்பள்ளி சிறந்த பள்ளி விருது,சிறந்த கிராம கல்விக்குழு விருது ஆகிய இரண்டு விருதுகளையும் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த விருதுகள் வழங்கும் விழா பள்ளியில் நடந்தது. விழாவிற்கு கவுன்சிலர் கந்தன் தலைமை வகித்தார். வட்டார வளமைய மேற்பார்வையாளர் தனராஜ் முன்னிலை வகித்தார். பள்ளி தலைமையாசிரியை மீனாட்சி வரவேற்றார். பாளை. உதவி தொடக்க கல்வி அலுவலர் மெட்டில்டா, இரண்டு விருதுகளையும் முன்னாள் தலைமையாசிரியர் சங்கரலிங்கத்திடம் வழங்கி பாராட்டினார். விழாவில், தலைமையாசிரியர்கள் ஜோசப், ராமசுப்பிரமணியன், வேணி, ஆசிரியை சுமதி, வண்ணார்பேட்டை பேராத்து செல்வி அம்மன் கோயில் அறங்காவலர் குழு தலைவர் ஜெயராமன் உட்பட பலர் கலந்துகொண்டனர். ஆசிரியை ஹெலன் ஜாஸ்மின் நன்றி கூறினார். ஏற்பாடுகளை ஆசிரியைகள் புஷ்பக்கனி, மாது புஷ்பம், அமைப்பாளர் பட்டம்மாள் ஆகியோர் செய்தனர்.

 


Page 47 of 111