Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Education

மக்கள்தொகை கணக்கெடுப்பால் ஆசிரியர்கள் புதிய இடத்தில் ஆக. 2ல் பணி ஏற்க உத்தரவு

Print PDF

தினமலர்   14.05.2010

மக்கள்தொகை கணக்கெடுப்பால் ஆசிரியர்கள் புதிய இடத்தில் ஆக. 2ல் பணி ஏற்க உத்தரவு

விருதுநகர் : மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள், கவுன்சிலிங்கில் இடமாறுதல் பெற்றால், ஜூலை 31ல் பழைய இடத்திலிருந்து விடுவிக்கப்பட்டு, ஆக.,2 ல் புதிய இடத்தில் பணி ஏற்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

அரசு, நகராட்சி, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள் பொது மாறுதலுக்கான கவுன்சிலிங், மே 18ல், 19லும், தலைமையாசிரியர்களுக்கு மே 18ல் நடக்க உள்ளது.

கவுன்சிலிங் நடத்துவதற்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர் தலைமை வகிப்பர். உயர்நிலை, மேல் நிலைப்பள்ளி தலைமையாசிரியர் இரண்டு பேர், கண்காணிப்பாளர், உதவியாளர், இளநிலை உதவியாளர், டைப்பிஸ்ட், அலுவலக உதவியாளர் என ஏழு பேர் அடங்கிய குழு அமைத்து கவுன்சிலிங் நடத்த வேண்டும்.

கவுன்சிலிங்கில் இடமாறுதல் பெறும் ஆசிரியர்கள், மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியில் இருந்தால், பழைய இடத்தில் ஜூலை 30 வரை பணி செய்ய வேண்டும். ஜூலை 31ல் பணியிலிருந்து விடுவிக்கப்பட்டு, ஆக., 2ல் மாறுதல் பெற்ற இடத்தில் பணி ஏற்க வேண்டும். ஆக. 2 ல் பணி ஏற்றாலும் அவர் அந்த கல்வியாண்டில் முழுமையாக பணியாற்றியவராக கருதப்பட்டு அடுத்த கவுன்சிலிங்கில் பொது மாறுதல் பெற தகுதியுடையவர் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கவுன்சிலிங் நடத்தும் இடத்தில் சட்டம், ஒழுங்கு பிரச்னைகள் ஏற்படாமல் இருக்க தேவையான போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகளை முதன்மை கல்வி அதிகாரிகள் செய்ய வேண்டும் என பள்ளிக்கல்வி செயலாளர் குற்றாலலிங்கம் உத்தரவிட்டுள்ளார்.

Last Updated on Friday, 14 May 2010 07:08
 

11-ம் வகுப்பு மாணவர்களுக்கு கணினி, ஆங்கிலம் சிறப்பு பயிற்சி

Print PDF

தினமணி 12.05.2010

11-ம் வகுப்பு மாணவர்களுக்கு கணினி, ஆங்கிலம் சிறப்பு பயிற்சி

மதுரை, மே 11: மதுரை மாநகராட்சிப் பள்ளிகளில் 11-ம் வகுப்பு படிக்கும் ஏழை மாணவ, மாணவிகளுக்கு கணினி மற்றும் ஆங்கிலம் சிறப்புப் பயிற்சி வகுப்புகளை ஆணையர் எஸ்.செபாஸ்டின் செவ்வாய்கிழமை ஆய்வு செய்தார்.

மதுரை மாநகராட்சிப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கல்வியை மேம்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. தமிழகத்திலேயே முதன் முறையாக மதுரை மாநகராட்சிப் பள்ளியில் 11-ம் வகுப்புத் தேர்வு எழுதியுள்ள 200 ஏழை மாணவர்களை தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு கணினி மற்றும் ஆங்கிலப் பயிற்சி வகுப்புகள் நடைபெறுவதை ஆணையர் நேரில் ஆய்வு செய்தார்.

பின்னர் இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியது:

வெள்ளையன் கல்வி மருத்துவம் சாரிட்டபிள் டிரஸ்ட், கிரேஸ் பீட்டர் சாரிட்டபிள் டிரஸ்ட் உள்ளிட்ட தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து கணினி மற்றும் ஆங்கிலப் பயிற்சி வகுப்புகள் மகால் திருவள்ளுவர் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்று வருகிறது. இதற்காக 36 கணினிகள், 5 கணினி ஆசிரியர்கள், 5 ஆங்கிலம் சிறப்பு ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த ஆசிரியர்கள் ஐந்து பிரிவுகளாக சிறப்புப் பயிற்சி அளித்து வருகின்றனர்.

மாணவர்கள் கோடைக்கால விடுமுறையை நல்ல முறையில் பயன்படுத்தும் வகையில் பயிற்சி வகுப்புகளை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இந்த வகுப்புகள் மே 28-ம் தேதியோடு முடிகிறது. பயிற்சி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு நற்சான்றிதழ்களும் வழங்கப்பட இருக்கிறது எனத் தெரிவித்தார். நிகழ்ச்சியில் மாநகராட்சி கல்வி அலுவலர் அம்மையப்பன், வெள்ளையன் கல்வி மற்றும் மருத்துவ சாரிடபிள் டிரஸ்ட் தலைவர் ஜெகதீசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

 

துவக்க, மழலையர் பள்ளிகளில் சேர்க்கைக்கு பிறப்புச்சான்று மட்டும் போதும்: ஆட்சியர்

Print PDF

தினமணி 05.05.2010

துவக்க, மழலையர் பள்ளிகளில் சேர்க்கைக்கு பிறப்புச்சான்று மட்டும் போதும்: ஆட்சியர்

திருப்பூர், மே 4: துவக்க மற்றும் மழலையர் பள்ளிகளில் மாணவர்களைச் சேர்க்க பிறந்ததேதிக்கான சான்று இருந்தாலே போதும் என்று, அனைத்து பள்ளிகளுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.

பள்ளி அங்கீகாரம், மாணவர் சேர்க்கை, இலவச நலத்திட்டங்கள் செயல்படுóத்துதல் உள்ளிóட்டவை குறித்த ஆய்வுக் கூட்டம், மாவட்ட ஆட்சியர் சி.சமயமூர்த்தி தலைமையில் திருப்பூரில் செவ்வாய்க்கிழமை நடந்தது.

மாவட்ட வருவாய் அலுவலர் கே.வி.முரளிதரன், முதன்மை கல்வி அலுவலர் டி.ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இக்கூட்டத்தில் ஆட்சியர் சி.சமயமூர்த்தி பேசியதாவது:

திருப்பூர் மாவட்டத்தில் 130 மேல்நிலைப் பள்ளிகள், 125 உயர்நிலைப் பள்ளிகள், 322 நடுநிலைப் பள்ளிகள், 1,097 துவக்க மற்றும் மழலையர் பள்ளிகள் என மொத்தம் 1,682 பள்ளிகள் அங்கீகாரம் பெற்றுச் செயல்படுகின்றன.

அங்கீகாரம் இல்லாத பள்ளிகளில் ஆய்வு அலுவலர்கள் மூலம் பார்வையிட்டு அங்கீகாரம் கோரும் கருத்துருக்கள் அனுப்ப அறிவுறுத்தப்படும். குறிப்பிட்ட காலத்துக்குள் கருத்துரு சமர்ப்பிக்காத பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

துவக்க மற்றும் மழலையர் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கையின் போது பிறந்த தேதிக்கான சான்று தவிர வேறு சான்றுகள் கேட்கக் கூடாது. பிற வகுப்புகளில் மாணவர்களின் பதிவுச்சான்று அல்லது மாற்றுச்சான்று அடிப்படையில் மாணவர்கள் சேர்க்கப்படலாம்.

இலங்கை அகதிகளின் குழந்தைகள், சுனாமியால் பாதிக்கப்பட்டோர் மற்றும் குழந்தைத் தொழிலாளாராகக் கண்டறியப்பட்ட குழந்தைகளுக்கு பதிவுச்சான்று, மாற்றுச்சான்று உள்ளிóட்ட ஆவணங்களை கட்டாயப்படுத்தாமல் பள்ளிகளில் சேர்க்கை வழங்க வேண்டும்.

அனைத்து பள்ளிகளிலும் அரசு நிர்ணயித்த கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும். கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவது கண்டறியப்பட்டால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

2 முதல் 5-ம் வகுப்புகளுக்கும், 7 முதல் 12-ம் வகுப்புகளுக்கும் இலவச பாடநூல் அனுப்பட்டு வருகிறது. அதன்படி, திருப்பூர் மாவட்டத்தில் இதுவரை 798 பள்ளிகளுக்கு 291.58 டன் புத்தகங்கள் அனுப்பப்பட்டுள்ளன.

இப்பாடப்புத்தகங்கள் பள்ளி துவங்கப்படும் நாளிலேயே மாணவர்களுக்கு வழங்கப்படும். மேலும் 1 மற்றும் 6-ம் வகுப்பு மாணவர்களுக்கு சமச்சீர் கல்வி திட்டத்தின் புத்தகங்களும் வழங்கப்படும்.

பள்ளி வாகனங்கள் மஞ்சள் நிறமுடையதாகவும், முன்னும் பின்னும் பள்ளி வாகனம் என குறிப்பிட்டிருக்கவும் வேண்டும். அவ்வாகன ஓட்டுநர்களாக, கனரக வாகனங்களில் 5 ஆண்டு முன்னனுபவம் பெற்றவர்களையே நியமிக்க வேண்டும், என்றார்.

வருவாய் கோட்டாட்சியர்கள் சையது ஹுமாயூன் (திருப்பூர்), சோமசேகர் (உடுமலை), அலிஅக்பர் (தாராபுரம்), வட்டார போக்குவரத்து அலுவலர்கள் பாட்டப்பன் (திருப்பூர் தெற்கு), ரஜினிகாந்த் (திருப்பூர் வடக்கு) உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர்.

 


Page 64 of 111