Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Education

நகராட்சி பள்ளி ஆண்டு விழா

Print PDF

தினமலர் 05.05.2010

நகராட்சி பள்ளி ஆண்டு விழா

பட்டுக்கோட்டை: பட்டுக்கோட்டை நகராட்சி நடுநிலைப்பள்ளி ஆண்டு விழா நல்லாசிரியர் கல்யாணசுந்தரம் தலைமையில் நடந்தது. நகராட்சி துணைத் தலைவர் கண்ணன் முன் னிலை வகித்தார். பெற் றோர் ஆசிரியர் கழகத் தலைவர் அமானுல்லா தொடக்கக் கல்வி அலுவ லர்கள் சாமிநாதன், பேபி, பழனிவேலு ஆகியோர் கொண்டனர். போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. தலைமை ஆசிரியர் ஜெயவேல் வர வேற்றார். மீனாட்சிசுந்தரி நன்றி கூறினார்.

Last Updated on Monday, 05 April 2010 06:39
 

உறையூர் கிழக்கு நகராட்சி நடுநிலைப் பள்ளிக்கு விருது

Print PDF

தினமணி 30.03.2010

உறையூர் கிழக்கு நகராட்சி நடுநிலைப் பள்ளிக்கு விருது

திருச்சி, மார்ச் 29: திருச்சி உறையூர் கிழக்கு நகராட்சி நடுநிலைப் பள்ளிக்கு சிறந்த வார்டு கல்விக் குழுக்கான விருது வழங்கப்பட்டுள்ளது.

திருச்சி மாவட்ட அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் நகர்ப்புற வள மையத்தின் சார்பில், சிறந்த வார்டு கல்விக் குழுக்கான விருது வழங்கும் விழா உறையூர் பாண்டமங்கலம் நகராட்சி தொடக்கப்பள்ளியில் அண்மையில் நடைபெற்றது.

இந்த விழாவுக்கு வட்டார வள மைய மேற்பார்வையாளர் அழகு சுப்பிரமணியன் தலைமை வகித்தார். விழாவில், நகர்ப்புற வள மையத்திற்குள்பட்ட 84 பள்ளிகளில் சிறந்த வார்டு கல்விக் குழு பள்ளியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட உறையூர் கிழக்கு நகராட்சி நடுநிலைப் பள்ளிக்கு உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் செல்வரத்தினம் விருதை வழங்கினார்.

அந்த விருதை மாகராட்சியின் 55-வது வார்டு உறுப்பினர் வை. புஷ்பம், பள்ளியின் தலைமையாசிரியை ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

Last Updated on Tuesday, 30 March 2010 11:27
 

நகராட்சி துவக்கப் பள்ளிக் குழந்தைகளுக்கு நலத் திட்ட உதவி

Print PDF

தினமணி 29.03.2010

நகராட்சி துவக்கப் பள்ளிக் குழந்தைகளுக்கு நலத் திட்ட உதவி


நாமக்கல், மார்ச் 28: நாமக்கல் நகராட்சி துவக்கப் பள்ளிó குழந்தைகளுக்கு இலவச நோட்டுப் புத்தகம், எழுது பொருட்கள், விளையாட்டு உபகரணங்கள் ஆகியவற்றை ஆர்எஸ்ஜி சமூக சேவை மையம் இலவசமாக வழங்கியது. மையத்தின் சார்பில் பகவத்சிங் நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டது. கோட்டை நகராட்சி துவக்கப் பள்ளியில் நடந்த விழாவில், பகவத்சிங் உருவப்படத்தை திறந்து வைத்து மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. இதன் தொடர்ச்சியாக பள்ளியில் கல்வி பயிலும் அனைத்து மாணவ, மாணவியருக்கும் இலவசமாக எழுது பொருட்கள், விளையாட்டு உபகரணங்கள், நோட்டுப் புத்தகங்கள் வழங்கப்பட்டன.

அங்கன்வாடி மையத்தில் உள்ள குழந்தைகளுக்கும் விளையாட்டு உபகரணங்களும், பொம்மைகளும் வழங்கப்பட்டன. சமூக சேவை மையத் தலைவர் கோபிகாந்தி தலைமை வகித்தார். 11-வது வார்டு கவுன்சிலர் நடராஜ், நலத் திட்ட உதவிகளை வழங்கினார். சேவை மைய செயலர் பன்னீர்செல்வம், பொருளாளர் அவினாசிலிங்கம், பள்ளித் தலைமையாசிரியர் கிருத்திகா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Last Updated on Monday, 29 March 2010 10:31
 


Page 70 of 111