Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Education

மாநகராட்சிப் பள்ளிகள் இனி "சென்னை பள்ளிகள்'

Print PDF

தினமணி 16.03.2010

மாநகராட்சிப் பள்ளிகள் இனி "சென்னை பள்ளிகள்'

சென்னை, மார்ச் 15: சென்னை மாநகராட்சிப் பள்ளிகள் இனி "சென்னை பள்ளிகள்' என அழைக்கப்படும் என்று மேயர் மா. சுப்பிரமணியன் அறிவித்தார்.

சென்னை மாநகரட்சியில் திங்கள்கிழமை தாக்கல் செய்யப்பட்ட 2010}2011}ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில், கல்வி மேம்பாட்டுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.

இத்துறைக்கென வெளியிடப்பட்ட அறிவிப்புகள்:

மாநகராட்சிப் பள்ளிகளின் தரத்தை உயர்த்தும் வகையில் "சென்னை மாநகராட்சிப் பள்ளி' என்ற பெயர் "சென்னை தொடக்கப் பள்ளி, சென்னை நடுநிலைப் பள்ளி, சென்னை உயர்நிலைப் பள்ளி, சென்னை மேல்நிலைப் பள்ளி' என பெயர் மாற்றம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

மாநகராட்சிப் பள்ளி மாணவ, மாணவிகளின் அறிவுத்திறனை மேலும் மேம்படுத்தும் வகையில் மண்டலத்துக்கு ஒன்று வீதம், 10 ஆற்றல்சார் பள்ளிகள் உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சியில் உள்ள 67 உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் நூலகங்கள் அமைக்கப்பட உள்ளன. இந்த நூலகங்களில் அறிவியல், பொது அறிவு, இலக்கியம், மேலாண்மை, பொது நிர்வாகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சார்ந்த நூல்கள் இடம்பெற உள்ளன.

மாநகராட்சிப் பள்ளி மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில் வேலைவாய்ப்பு தகவல் மையம் ஒன்று மாநகராட்சி சார்பில் அமைக்கப்பட உள்ளது. இதுமட்டும் இல்லாமல் 11}ம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகள் தொழிற்சாலைகளை நேரடியாகப் பார்வையிட அழைத்துச் செல்லப்பட உள்ளனர்.

இலவச வடிவயியல் உபகரணப் பெட்டிகள்: கணித பாடம் மற்றும் அறிவியல் பாடங்களில் உள்ள படங்களை மாநகராட்சிப் பள்ளி மாணவர்கள் நன்கு வரைந்து தேர்ச்சி பெறும் நோக்கத்தில் 6}ம் வகுப்பு முதல் 10}ம் வகுப்பு வரை பயிலும் 61 ஆயிரம் பேருக்கு வடிவயியல் (ஜாமென்ட்ரி) பெட்டிகள் இலவசமாக வழங்கப்பட உள்ளன. இதனுடன் பென்சில், பேனா, ரப்பர், ஷார்ப்னர் அடங்கிய பெட்டி ஒன்றும் இலவசமாக வழங்கப்படும்.

100 சதவீத தேர்ச்சி பெறும் பள்ளிக்கு ரூ. 1 லட்சம்: சென்னை மாநகராட்சியில் உல்ள உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பொதுத் தேர்வில் 100 சதவீத தேர்ச்சி பெறும் பள்ளிகளுக்கு ரூ. 1 லட்சம் ரொக்கப் பரிசு வழங்கப்பட உள்ளது. பள்ளிகளுக்கு இடையே நடத்தப்படும் விளையாட்டுப் போட்டிகளில் சிறந்து விளங்கும் பள்ளிகளுக்கு ரூ. 50 ஆயிரம் ரொக்கப் பரிசு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

மாநகராட்சிப் பள்ளிகளில் பிளஸ்}2 வகுப்பில் தேர்ச்சி பெற்று மருத்துவம், தொழிற் கல்வி பயில செல்லும் மாணவ, மாணவிகளுக்கு உதவித் தொகை வழங்கப்படுவதுபோல், 10}ம் வகுப்பு முடித்து பட்டயப் படிப்பு பயிலச் செல்லும் மாணவர்களுக்கு ரூ. 3 ஆயிரம் வீதம் உதவித் தொகை வழங்கப்பட உள்ளது.

பள்ளிகளுக்கு அவசர செலவினத் தொகை: பள்ளிகளில் அன்றாட அவசரத் தேவைகளை நிவர்த்தி செய்து கொள்ளும் வகையில், மாநகராட்சிப் பள்ளிகளுக்கு அவசர செலவினத் தொகை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மேல்நிலைப் பள்ளிக்கு ரூ. 15 ஆயிரம், உயர்நிலைப் பள்ளிக்கு ரூ. 10 ஆயிரம், நடுநிலைப் பள்ளிக்கு ரூ. 5 ஆயிரம், தொடக்கப் பள்ளிக்கு ரூ. 3 ஆயிரம் வீதம் செலவின நிதியாக வழங்கப்பட உள்ளது.

இதுமட்டும் அல்லாமல் காது கேட்கும் திறன் மற்றும் வாய் பேசும் திறன் குறைந்தோருக்கான சிறப்பு பள்ளி ஒன்ரு வடசென்னையில் அமைப்பது, மாநகராட்சிப் பள்ளிகளில் கணித ஆய்வகம் அமைத்தல், தலைமை ஆசிரியர்களுக்கு தலைமைப் பண்பு மற்றும் மேலாண்மைப் பயிற்சி அளித்தல் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் கல்விக்கென மாநகராட்சி நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டன.

Last Updated on Tuesday, 16 March 2010 11:28
 

கம்பம் நகராட்சி பள்ளிகளுக்கு ரூ.20 லட்சத்தில் வகுப்பறைகள்

Print PDF

தினமலர் 16.03.2010

கம்பம் நகராட்சி பள்ளிகளுக்கு ரூ.20 லட்சத்தில் வகுப்பறைகள்

கம்பம் : கம்பம் நகராட்சி பள்ளிகளுக்கு கூடுதல் வகுப்பறைகள் மற்றும் வசதிகள் செய்து கொடுக்க நகராட்சி நிர்வாகம் 20 லட்சம் ரூபாய் ஒதுக்கியுள்ளது.

கம்பத்தில் தேரடிபள்ளி, பார்க் ரோடு மெயின் பள்ளி, தாத்தப் பன்குளம் உயர்நிலை மற்றும் தொடக்கபள்ளி, ஆலமரத்து பள்ளி, சுங்கம் பள்ளி, மெயின் பள்ளிவாசல் பள்ளி ஆகிய பள்ளிக்கூடங்கள் நகராட்சியின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த ஆண்டு தேரடி பள்ளியில் விளையாட்டு மைதானம், தாத்தப்பன்குளம் பள்ளியில் கூடுதல் வகுப்பறைகள், எல்லா பள்ளிகளிலும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க கருவிகள் நிறுவுதல், கழிப்பறை வசதி செய்து கொடுத்தல், குடிநீர் இணைப்பு கொடுத்தல், மின்விசிறி அமைத்தல், முதல் உதவி செய்வதற்குரிய வசதிகள் செய்து கொடுத்தல் போன்ற வளர்ச்சி பணிகள் மேற் கொள்ளப்பட்டு வருகின்றன.

நகராட்சி தலைவர் அம்பிகா கூறுகையில், "நகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள ஆறு பள்ளிகளிலும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் சப்ளை செய்ய "வாட்டர் பியூரிபையர்' அமைக்கப் பட்டுள்ளது. 20 லட்ச ரூபாய் செலவில் கூடுதல் வகுப்பறைகள் கட்டப் பட்டு வருகிறது. முன்மாதிரி பள்ளிகளாக மாற்ற நகராட்சி பள்ளிகளில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்பாடு செய்து வருகிறோம்' என்றார்.

கமிஷனர் அய்யப்பன், பொறியாளர் ஜீவாசுப்ரமணியன் ஆகியோர் உடன் இருந்தனர்.

 

மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு சிறுநீரக பரிசோதனை: மேயர் தகவல்

Print PDF

தினமலர் 12.03.2010

மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு சிறுநீரக பரிசோதனை: மேயர் தகவல்

சென்னை : ""மாநகராட்சி பள்ளிகளில் படிக்கும் அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் சிறுநீரக பரிசோதனை நடத்தப்படும்,'' என்று மேயர் சுப்பிரமணியன் கூறினார்.உலக சிறுநீரக தினத்தையொட்டி ராமச்சந்திரா மருத்துவமனை சிறுநீரகவியல் துறை சார்பில், ஆழ்வார்பேட்டை மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் மாணவ, மாணவியர்களுக்கு இலவச சிறுநீரக பரிசோதனை முகாம் நேற்று நடந்தது.

முகாமை மேயர் சுப்பிரமணியன் தொடங்கி வைத்து பேசியதாவது:உலக சிறுநீரக நோய் விழிப்புணர்வு தினத்தையொட்டி மாநகராட்சி பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு ராமச்சந்திரா மருத்துவமனை சிறுநீரக பரிசோதனை செய்வது பாராட்டத்தக்கது. மாநகராட்சி நடத் திய பல மருத் துவ முகாம்களில் ராமச்சந்திரா மருத் துவமனை ஒருங்கிணைந்து செயல் பட்டுள்ளது. இந்தியாவிலேயே முதன் முறையாக வீடு தேடிச் சென்று ரத்த பரிசோதனை செய்யும் திட்டம் சென்னையில் துவக்கப்பட்டுள்ளது.தற்போது ரத்தம், சிறுநீர் பரிசோதனை செய்ய, மண்டலத்திற்கு ஒரு டெக்னீஷியன்கள் நியமிக்கப் பட்டுள்ளனர். தேவைக்கேற்ப மண் டலத்திற்கு மூன்று அல்லது நான்கு பேரை நியமிக்க ஆலோசனை நடந்து வருகிறது.சிறுநீரகத்தை பாதுகாக்க சிறுநீர் பரிசோதனை செய்வது அவசியம். மாநகராட்சி பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு சிறுநீரக பரிசோதனை செய்வது தொடர்பாக 15ம் தேதி வெளியிடப்படும் பட்ஜெட்டில் அறிவிக்கப்படும். இவ்வாறு சுப்பிரமணியன் பேசினார்.நிகழ்ச்சியில் ராமச்சந்திரா பல் கலைக்கழக துணை வேந்தர் ரங்கசாமி, டீன் சோமசுந்தரம், சிறுநீரகவியல் துறை டாக்டர் சவுந்தரராஜன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

Last Updated on Friday, 12 March 2010 06:12
 


Page 74 of 111