Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Education

தென்னம்பாளையம் பள்ளியில் எம்எல்ஏ நிதியில் கூடுதல் வகுப்பறைகள்

Print PDF

தினமணி 04.03.2010

தென்னம்பாளையம் பள்ளியில் எம்எல்ஏ நிதியில் கூடுதல் வகுப்பறைகள்

திருப்பூர், மார்ச் 3: திருப்பூர் மாநகராட்சி, தென்னம்பாளையம் நடுநிலைப் பள்ளியில் சட்டப்பேரவை உறுப்பினர் சி.கோவிந்தசாமியின் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.13.50 லட்சம் மதிப்பில் கூடுதல் வகுப்பறைகள் கட்டும் பணிக்கு புதன்கிழமை அடிக்கல் நாட்டப்பட்டது.

தென்னம்பாளையம் பள்ளி மைதானத்தில் நடந்த இந்த விழாவுக்கு கல்வி குழுத் தலைவர் ஜி.ரத்தினசாமி தலைமை வகித்தார். இதில் சட்டப்பேரவை உறுப்பினர் சி.கோவிந்தசாமி கலந்துகொண்டு கட்டுமானப் பணிக்கு அடிக்கல் நாட்டினார்.

பள்ளித் தலைமை ஆசிரியை தனலட்சுமி வரவேற்றார். பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் எப்.கே.சி.பழனிச்சாமி பூமி பூஜை செய்து வைத்தார். பெற்றோர் ஆசிரியர் சங்கப் பொருளாளர் பொன்னுசாமி மற்றும் ஆர்.எஸ்.ஈஸ்வரமூர்த்தி உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்றனர்.

சட்டப்பேரவை உறுப்பினரின் 2009-10ம் நிதியாண்டுக்குரிய ரூ.13.50 லட்சம் மதிப்பில் பள்ளியின் முதல் தளத்தில் மூன்று வகுப்பறைகள் கட்டப்படுகின்றன. இப்பணி திட்டக் காலத்தில் கட்டி முடிக்கப்படும் என்று, ஜி.ரத்தினசாமி தெரிவித்தார்

Last Updated on Thursday, 04 March 2010 09:58
 

மாநகராட்சி பள்ளிகளுக்கு ஐ.எஸ்.ஓ., சான்று : கல்விக்குழு கூட்டத்தில் முடிவு

Print PDF

தினமலர் 04.032010

மாநகராட்சி பள்ளிகளுக்கு ஐ.எஸ்.., சான்று : கல்விக்குழு கூட்டத்தில் முடிவு

கோவை: கோவை மாநகராட்சியால் நடத்தப்படும் பள்ளிகளுக்கு, .எஸ்.., தரச்சான்று பெறும் முயற்சியில் மாநகராட்சி கல்விக்குழு ஈடுபட்டுள்ளது.கோவை மாநகராட்சி கல்விக்குழு கூட்டம் தலைவர் கல்யாணசுந்தரம் தலைமையில் நடந்தது. மாநகராட்சி கல்வித்துறை அலுவலர் (பொறுப்பு) சோமசுந்தரி முன்னிலை வகித்தார்.

கோவை மாநகராட்சி வசம் 16 மேல்நிலை, 44 உயர்நிலை, 25 நடுநிலை மற்றும் ஆரம்பபள்ளிகள் உள்ளன. இப்பள்ளிகளின் தரம் மேம்படுத்தப்பட்டு வருகிறது. கல்வித்தரம் மேம்படவும், படிக்கும் மாணவர்களின் தரம் மேலோங்கவும், .எஸ்.., தரச்சான்று விண்ணப்பித்து பெற கல்விக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.முதற்கட்டமாக 10 மேல்நிலை பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டு, கட்டமைப்பு பணிகள், மாணவ மாணவியருக்கு தேவையான வசதிகள், குடிநீர், கழிப்பிடம், ஓய்வறை, சாப்பிடும் அறை போன்ற வசதிகள் இல்லாத பள்ளிகளில் ஏற்படுத்த முடிவானது.

கல்வி கற்பிக்கும் ஆசிரியர் முழுமையான தேர்ச்சி பெற்றவராக இருப்பதும், இல்லாத பட்சத்தில் தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர் குழுவை கொண்டு பயிற்சி அளிக்க முடிவு செய்யப்பட்டது.பள்ளிகளில் செயல்படுத்த வேண்டிய மேம்பாட்டு பணிகள் குறித்து கல்வி குழுவில் மேற்கொள்ளப்பட்ட விவாதம்:மாநகராட்சிபள்ளி கட்டடங்களுக்கு ஒரே மாதிரி வண்ணம் பூச வேண்டும். மாநகராட்சி பள்ளி மைதானங்களில் புதர் மண்டி கிடக்கிறது. கல்வியாண்டு துவக்கத்தில் கல்விக்குழு நேரடி விசிட் சென்று, குறைகளை அறிந்து சரி செய்ய வேண்டும். பள்ளி மாணவருக்கான சீருடையில் மாற்றம் கொண்டு வர வேண்டும். ஒவ்வொரு பள்ளிக்கும் தேவையான டிக்ஷனரிகளை வழங்க வேண்டும். நீண்ட நாட்களாக விவாதிக்கப்பட்டு வரும் இந்த கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். பள்ளி வளாகத்தில் மூலிகை மரங்களை நட வேண்டும். புதியதாக விளையாட்டு மைதானங்கள் உருவாக்க வேண்டும். மாநகராட்சி பள்ளிக்கென்று தனியாக கம்ப்யூட்டர் சென்டர் அமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் முன் வைக்கப் பட்டன.இவற்றை விரைவாக செய்து முடிப்பதாக அதிகாரிகள் வழக்கம்போல் உறுதியளித்தனர்.
இக்கூட்டத்தில், கல்வி குழு உறுப்பினர்கள் மீனா, �ஷாபனா, செந்தில்குமார், மாநகராட்சி உதவி பொறியாளர்கள் சுகுமாறன், கணேஷ்வரன், கணக்கு அலுவலர் கோமதி விநாயகம், கவுன்சிலர்கள் தமிழ்செல்வி, சிவகாமி ஆகியோர் பங்கேற்றனர்.

 

மாநகராட்சி பள்ளிகளிலும் ஏப்ரலில் மாணவர் சேர்க்கை: மேயர் தகவல்

Print PDF

தினமலர் 04.032010

மாநகராட்சி பள்ளிகளிலும் ஏப்ரலில் மாணவர் சேர்க்கை: மேயர் தகவல்

சென்னை : ""தனியார் பள்ளிகளைப் போல் மாநகராட்சி தொடக்கப் பள்ளிகளிலும் முன் கூட்டியே ஏப்ரல் முதல் வாரத்தில் மாணவர்கள் சேர்க்கை துவங் கும்'' என மேயர் சுப்ரமணியன் தெரிவித்தார்.சென்னை மாநகராட்சி பள்ளிகளில் படிக்கும் ஒரு லட்சத்து ஐந்தாயிரம் மாணவ, மாணவியர் களுக்கு, இலவச புத்தக பை வழங்கும் நிகழ்ச்சி சர்மா நகர் மாநகராட்சி பள்ளியில் நடந்தது.மேயர் சுப்ரமணியன் பங்கேற்று புத்தகப் பைகளை வழங்கி பேசியதாவது:கடந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது போல, சென்னை மாநகராட்சி பள்ளிகளில் படிக்கும் ஒரு லட்சத்து ஐந்தாயிரத்து 730 மாணவ, மாணவியர் களுக்கு, ஒரு கோடியே நான்கு லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் செலவில் தரமான புத்தகப் பைகள் வழங்கப்படுகிறது.மாநகராட்சி பள்ளிகளில் படிக் கும் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை உள்ள மாணவ, மாணவியர்களுக்கு இலவச ஷூக்கள் வழங்கப்பட் டன. நடுநிலைப் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு அகராதியும், இரண்டு கோடியே 19 லட்ச ரூபாய் செலவில் சீருடைகளும் வழங்கப்பட்டன.பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு மேற் படிப்பை தொடர உதவித் தொகைகள் வழங்கப்பட்டுள்ளன.பள்ளிகளை நல்ல முறையில் நிர்வகிக்கும் தலைமை ஆசிரியர்களும், மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் பெறும் வகையில் ஊக்குவிக்கும் ஆசிரியர் களும் கவுரவிக்கப்படுகின்றனர்.தனியார் பள்ளிகளை போல, மாநகராட்சி பள்ளிகளிலும் முன் கூட்டியே தொடக்கக் கல்வி மாணவர்கள் சேர்க்கை நடத்தப்படும்.ஏப்ரல் மாதம் முதல் மற்றும் இரண்டாவது வாரத்தில் மாணவர்கள் சேர்க்கை துவங்கும். மாநகராட்சி பள்ளிகளில் மாணவர் களின் சேர்க்கையை அதிகப்படுத் தும் வகையில், மாநகராட்சி பள்ளிகளில் கல்வி வளர்ச்சி குறித்து, விழிப்புணர்வு முகாம் கள் நடத்தப்பட உள்ளன. வட சென்னை, தென் சென்னை இரண்டு இடங்களிலும் இந்த விழிப்புணர்வு முகாம்கள் ந டத்தப்படும்.இவ்வாறு மேயர் பேசினார்.இந்த நிகழ்ச்சியில் கமிஷனர் ராஜேஷ் லக்கானி, பெரம்பூர் எம்.எல்.., மகேந்திரன், துணை கமிஷனர்(கல்வி)பாலாஜி, ஆளுங்கட்சி தலைவர் ராமலிங்கம், எதிர்க்கட்சி தலைவர் சைதை ரவி, மற்றும் கவுன்சிலர் கள் பங்கேற்றனர்.

Last Updated on Thursday, 04 March 2010 06:21
 


Page 77 of 111