Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Education

மாநகராட்சி ஆசிரியர் சங்கம் சார்பில் முப்பெரும் விழா

Print PDF

தினமலர் 08.02.2010

மாநகராட்சி ஆசிரியர் சங்கம் சார்பில் முப்பெரும் விழா

கோவை : மாநகராட்சி அனைத்து ஆசிரியர் சங்கம் சார்பில் முப்பெரும் விழா காந்திபுரம், மாநகராட்சி திருமண மண்டபத்தில் நடந்தது.

சங்க பொது செயலாளர் சரவணமுத்து வரவேற்றார். தலைவர் மோகனசுந்தரம் தலைமை வகித்தார். முன்னாள் கல்வி அலுவலர் ராபர்ட் கருணாகரன், தலைமையாசிரியர் ராமசாமி முன்னிலை வகித்தனர். பொருளாளர் சிவசாமி ஆண்டறிக்கை வாசித்தார்.

மேயர் வெங்கடாசலம் பேசியதாவது: கடந்த 10 ஆண்டுகளில் மாநகராட்சி பள்ளிகள் வளர்ச்சி அடைந்துள்ளன. கல்விக் குழுவில் பல்வேறு திட்டங்கள் வகுக்கப்பட்டு, பள்ளிகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் மாநகராட்சி பள்ளிகளில் பயின்ற மாணவர்களில் 43 பேர் சிறந்தவர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இதில், கோவை மாவட்டத்தில் மட்டும் 17 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இவர்களின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருப்பவர்கள் ஆசிரியர். கல்விக்காக செயல்படுத்தப்படும் நல்ல திட்டங்களை ஆசிரியர்கள் பயன்படுத்தி மாணவர்களின் கல்வி திறனை வளர்க்க வேண்டும். இவ்வாறு, மேயர் பேசினார்.

எஸ்.எஸ்.எல்.சி., மற்றும் பிளஸ்2 பொது தேர்வில் முதல்மதிப்பெண் பெற்ற மாணவிகள் பவித்ரா, ரூபணி ஆகியோருக்கு பரிசு வழங்கப்பட் டது. மேலும், தேர்ச்சி சதவீதம் அதிகம் பெற்ற ரத்தினபுரி, மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி மற்றும் ராமகிருஷ்ணாபுரம் மாநகராட்சி பள்ளிகளுக்கு பரிசு வழங்கப்பட்டன. விழாவில், துணைமேயர் கார்த்திக், கல்விக்குழு தலைவர் கல்யாணசுந்தரம், உறுப்பினர்கள் ஷோபனா, மீனாலோகநாதன் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் உதயகுமார் பங்கேற்றனர். ஆசிரியர் சாமுவேல் நன்றி கூறினார்.

Last Updated on Monday, 08 February 2010 05:47
 

பழுதடைந்த பள்ளிக் கட்டடங்கள் விரைவில் சீரமைப்பு: ஆட்சியர்

Print PDF

தினமணி 04.02.2010

பழுதடைந்த பள்ளிக் கட்டடங்கள் விரைவில் சீரமைப்பு: ஆட்சியர்

காஞ்சிபுரம், பிப். 3: காஞ்சிபுரம் மாவட்டத்தில் பழுதடைந்த நிலையில் உள்ள பள்ளிக் கட்டடங்கள் விரைவில் சீரமைக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சந்தோஷ் கே. மிஸ்ரா தெரிவித்துள்ளார்.

÷இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

உள்ளாட்சித் துறை அமைச்சர் அறிவித்துள்ள ஊராட்சி ஒன்றிய பள்ளிகள் சீரமைப்புத் திட்டத்தின் கீழ், ஆண்டுதோறும் இம் மாவட்டத்தில் உள்ள பேரூராட்சி மற்றும் மூன்றாம் நிலை நகராட்சிகளில் 117 ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகள் மற்றும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிகள் ரூ.1.20 கோடி மதிப்பீட்டில் சீரமைக்கப்படும்.

÷இதன் படி, வரும் நிதியாண்டில் (2010-11) பேரூராட்சி மற்றும் மூன்றாம் நிலை நகராட்சிகள் உள்ள ஊராட்சி ஒன்றிய ஆரம்ப மற்றும் நடுநிலைப் பள்ளிகள், பழுதடைந்த கட்டடங்கள் சீரமைக்கப்படும்.

÷பள்ளிக் கட்டடங்களுக்கு வெள்ளை மற்றும் வண்ணம் அடித்தல், கூரை தளம் பழுது பார்த்தல், புதிதாக மாற்றி அமைத்தல், சேதமடைந்த ஓடுகள், ரீப்பர்கள் மற்றும் சட்டங்களை பழுது பார்த்தல், சுவர்களில் உள்ள விரிசல்களை சரிபார்த்தல், ஓட்டு கூரைகளை முழுமையாக மாற்றி அமைத்தல், ஆஸ்பெஸ்டாஸ் கூரையை முழுமையாக அகற்றி ஓட்டு கூரை அமைத்தல் ஆகிய பணிகளை மேற்கொள்ளலாம்.

÷இப் பணிகளை ஊராட்சித் தலைவர், தலைமை ஆசிரியர், உதவித் தொடக்கக் கல்வி அலுவலர், ஊராட்சி ஒன்றிய பொறியாளர் அல்லது உதவிப் பொறியாளர் (ஊ.வ), வட்டார வளர்ச்சி அலுவலர் (வட்டார ஊராட்சி), ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் ஆகியோர் கொண்ட குழு தேர்வு செய்யலாம்.

÷மாவட்ட ஆட்சியர், திட்ட இயக்குநர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை உள்ளிட்ட மாவட்ட நிலை அலுவலர்கள் பள்ளிகளைப் பார்வையிட்டு, சரித்தன்மையை ஆய்வு செய்வர். இதேபோல, அண்ணா மறுமலர்ச்சி திட்டம செயல்படுத்தப்படும் ஊராட்சிகளில் உள்ள பள்ளிகளும் சீரமைப்புக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்றார் ஆட்சியர்

Last Updated on Thursday, 04 February 2010 10:58
 

சென்னை மாநகராட்சி கமிஷனருக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்

Print PDF

தினமலர் 04.02.2010

சென்னை மாநகராட்சி கமிஷனருக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்

சென்னை : ஆசிரியை அடித்ததில் பள்ளி மாணவியின் கண்பார்வை பாதிக்கப்பட்டது குறித்து, சென்னை மாநகராட்சி கமிஷனருக்கு, மாநில மனித உரிமைகள் ஆணையம், "நோட்டீஸ்' அனுப்பி உள்ளது. சென்னை ஓட்டேரி, மங்களபுரியைச் சேர்ந் தவர் ரமேஷ். இவர் மகள் மதுமிதா. வீட்டிற்கு அருகில் உள்ள மாநகராட்சி துவக்கப் பள்ளியில், மூன்றாம் வகுப்பு படிக்கிறார். கடந்த 14ம் தேதி பள்ளிக்கு சென்ற மதுமிதா, குறும்பு செய்ததாக கூறி, ஆசிரியை ரேணுகா அடித்தார். அப்போது, அவர் கையில் அணிந் திருந்த கண்ணாடி வளையல் உடைந்து, மதுமிதாவின் வலது கண்ணில் பட்டது. இதில், மாணவியின் கண்பார்வை பாதிக்கப் பட்டது. இதுபற்றி கடந்த 31ம் தேதி, தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. அச்செய்தியை அடிப்படையாக கொண்டு, மாநில மனித உரிமைகள் ஆணைய தலைவர் வெங்கடாசலமூர்த்தி, உறுப்பினர்கள் செல்வகுமார், மாரியப்பன் மற்றும் பரமசிவம் ஆகியோர், இச்சம்பவம் குறித்து மூன்று வாரங்களுக்குள் விளக்கம் அளிக்கும்படி, சென்னை மாநகராட்சி கமிஷனருக்கு, "நோட்டீஸ்' அனுப்பி உள்ளனர்.

Last Updated on Thursday, 04 February 2010 06:37
 


Page 84 of 111