Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Education

பேரூராட்சி மற்றும் மூன்றாம் நிலை நகராட்சிகளில் பழுதடைந்த பள்ளிக் கட்டடங்களை சீரமைக்க முடிவு

Print PDF

தினமலர் 04.02.2010

பேரூராட்சி மற்றும் மூன்றாம் நிலை நகராட்சிகளில் பழுதடைந்த பள்ளிக் கட்டடங்களை சீரமைக்க முடிவு

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் மாவட்டத்தில் பேரூராட்சி மற்றும் மூன்றாம் நிலை நகராட்சிகளில் பழுதடைந்த ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளி கட்டடங்கள் சீரமைக்கப்பட உள்ளன.துணை முதல்வர் ஸ்டாலின், ஊராட்சி ஒன்றியப் பள்ளிகள் சீரமைப்பு திட்டம் என்ற புதிய திட்டத் தை கடந்த 2007ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 12ம் தேதி சட்டசபையில் அறிவித்தார். இத்திட்டம் மூலம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பேரூராட்சி மற்றும் மூன்றாம் நிலை நகராட்சிகளில் 2008-09 மற்றும் 2009-10ம் ஆண்டுகளில் 117 ஊராட்சி ஒன்றிய தொடக் கப்பள்ளி, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிகள் ஒரு கோடியே 20 லட்சத்து 78 ஆயிரம் ரூபாய் செலவில் சீரமைப்புப் பணிகள் நடந்தன. வரும் நிதியாண்டிலும், பேரூராட்சி, மூன்றாம் நிலை நகராட்சிகளில் உள்ள ஊராட்சி ஒன்றிய ஆரம்ப மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பழுதடைந்த கட்டடங்களில் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இத்திட்டத்தின் கீழ் பள்ளிகளில் பள்ளிக் கட்டடங்களுக்கு பெயின்ட் அடித்தல், கூரை மற்றும் தளம் பழுது பார்த்தல், கரும்பலகை பெயின்டிங் செய்தல், கதவு மற்றும் ஜன்னல்கள் பழுதுபார்த்தல், புதிதாக மாற்றி அமைத்தல், சேதமடைந்த ஓடுகள், ரீப்பர்கள் மற்றும் சட்டங்களைப் பழுது பார்த்தல், சுவர்களில் உள்ள விரிசல்களை சரிபார்த்தல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்படும்.

இப்பணிகளின் தேவையை நேரில் ஆய்வு செய்து, தேர்வு செய்திட குழு அமைக்கப்பட்டுள்ளது. குழுவில் ஊராட்சித் தலைவர், தலைமையாசிரியர், உதவி துவக்கக் கல்வி அலுவலர், ஊராட்சி ஒன்றியப் பொறியாளர் அல்லது உதவிப் பொறியாளர், வட் டார வளர்ச்சி அலுவலர், ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர் இடம் பெறுவர். ஒவ்வொரு குழுவும் பணிகளை தேர்வு செய்து அறிக்கை தயார் செய்வர்.

இது தொடர்பாக, ஒவ்வொரு பள்ளித் தலைமை ஆசிரியருக்கும் தனியே கடிதம் அனுப்பி வைக்கப் பட்டுள்ளது. தேவைப் பட்டியல் அடிப்படையில் மதிப்பீடுகள் தயாரிக் கப்பட்டு பணிகள் மேற்கொள்வதற் கான நிர்வாக அனுமதி வழங்கி, சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப் படும்.

பணிகள் முறையாக தேர்வு செய்வதையும், சரியான மதிப்பீடுகள் தயாரிப்பதையும் உறுதி செய்து ஒவ்வொரு ஒன்றிய அளவில் கலெக் டர், திட்ட இயக்குனர், மாவட்ட நிலை அலுவலர்கள் பள்ளிகளைப் பார்வையிட்டு, சரித்தன்மையை ஆய்வு செய்வர். 2010-11ம் ஆண்டு இறுதிக்குள் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகள் மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் சிறப்பான முறையில் சீரமைப்புப் பணிகள் செய்து முடிக்கப்படும் என கலெக்டர் சந்தோஷ் கே மிஸ்ரா தெரிவித்துள்ளார்.

Last Updated on Thursday, 04 February 2010 06:26
 

கணினி வழிக்கற்றல் திட்டத்தின் கீழ் 112 பள்ளிகளுக்கு கணினி வழங்கல்

Print PDF

தினகரன் 03.02.2010

கணினி வழிக்கற்றல் திட்டத்தின் கீழ் 112 பள்ளிகளுக்கு கணினி வழங்கல்

விருதுநகர் : கணினி வழிக்கற்றல் திட்டத்தின் கீழ் மாவட்டத்தில் உள்ள 112 பள்ளிகளுக்கு கணினி வழங்கப்பட்டுள்ளது.

அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு அனைவருக்கும் கல்வித்திட்டத்தின் மூலம் மாவட்டத்தில் விருதுநகர் மற்றும் திருவில்லிபுத்து£ரில் உள்ள மையங்களில் 10 நாட்கள் பயிற்சி அளிக்கப்படுகிறது. பயிற்சியில் ஆசிரியர்களுக்கு மாணவ, மாணவிகளுக்கு கற்பிக்கும் வகையில் அனிமேஷன், வர்ணம் தீட்டுதல், பவர்பயிண்ட், எக்ஸ்.எல், ஈமெயில், ரயில்வே டிக்கெட் புக்கிங், நெட்மூலம் தேர்வு உள்ளிட்டவை கற்பிக்கப்படுகிறது.
அனைவருக்கும் கல்வித் திட்டத்தின் மூலம் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் ஆசிரியர்கள், மாணவர் எண்ணிக்கை விவரங்கள், மின்சார வசதி உள்ள பள்ளிகள், பள்ளியில் தலைமையாசிரியர் அறையில் பாதுகாப்பு வசதி உள்ளது.

கணினிகள் பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வசதி உள்ளது என ஒப்புதல் தரும் பள்ளி விவரங்கள் சென்னைக்கு அனுப்பப்பட்டு அரசின் பரிந்துரையின் பேரில் பள்ளி வாரியாக கணினிகள் அளிக்கப்பட்டு வருகிறது.
இதுவரையில் மாவட்டத்தில் 112 பள்ளிகளுக்கு கணினி வழங்கப்பட்டுள்ளது.

மாநிலத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிகள் மட்டும் கணினிகள் பெற்று வரும் நிலையில் விருதுநகர் எஸ்எம்ஜி நகராட்சி நடுநிலைப்பள்ளி மாவட்டத்தில் முதல் பள்ளியாக மூன்று கணி னிகளை பெற்றுள்ளது. பள்ளியின் இடைநிலை ஆசிரியர் செந்தில் குமார் கூறுகையில்,ÔÔபள்ளியில் 1&2 பயிலும் மாணவர்களுக்கு மாதம் ஒரு வகுப்பும், 3 முதல் 8 ம் வகுப்பு வரை பயிலுவோருக்கு வாரம் ஒரு வகுப்பும் கணினி கற்றுத்தரப்பட உள்ளது,ÕÕ என்றார்.

Last Updated on Wednesday, 03 February 2010 11:26
 

பொதுத்தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றால் நகராட்சிப் பள்ளி மாணவர்கள் விரும்பும் இடத்துக்கு சுற்றுலா

Print PDF

தினமணி 03.02.2010

பொதுத்தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றால் நகராட்சிப் பள்ளி மாணவர்கள் விரும்பும் இடத்துக்கு சுற்றுலா

திருவண்ணாமலை, பிப். 2: பொதுத்தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெறும் நகராட்சி பள்ளி மாணவ, மாணவியரை அவர்கள் விரும்பும் இடத்துக்கு சுற்றுலா அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்வேன் என திருவண்ணாமலை நகர்மன்றத் தலைவர் இரா.ஸ்ரீதரன் கூறினார்.திருவண்ணாமலை நகராட்சியின் கீழ் மொத்தம் 21 நகராட்சி மேல்நிலை, உயர்நிலை, நடுநிலை, தொடக்கப் பள்ளிகளில் மொத்தம் 8800 பேர் பயின்று வருகின்றனர். இவர்களின் முன்னேற்றத்துக்காக பல்வேறு நடவடிக்கைகளை நகராட்சி நிர்வாகம் எடுத்து வருகிறது.

இந்நிலையில், 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவ, மாணவியருக்கு ஒரு நாள் கல்விச் சுற்றுலா செல்ல தனது சொந்த நிதியில் இருந்து நகர்மன்றத் தலைவர் இரா.ஸ்ரீதரன் ஏற்பாடு செய்துள்ளார்.

முதல்கட்டமாக திருவண்ணாமலை நகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளி, முருகையன் நினைவு நகராட்சி பள்ளிகளைச் சேர்ந்த 1,000 மாணவிகள் செவ்வாய்க்கிழமை சாத்தனூர் அணைக்கு சுற்றுலா அழைத்துச் செல்லப்பட்டனர். 10 பஸ்கள் மூலம் மாணவிகள், ஆசிரியர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர்.

சாத்தனூர் அணை மற்றும் பிக்அப் அணை, முதலைப் பண்ணை உள்ளிட்ட இடங்களுக்கு மாணவிகள் அழைத்துச் செல்லப்பட்டனர். அவர்களுக்கு அங்கேயே சைவ, அசைவ உணவுகள் பரிமாறப்பட்டன.

நகராட்சித் தலைவர் இரா.ஸ்ரீதரன்,துணைத் தலைவர் ஆர்.செல்வம், கவுன்சிலர்கார்த்திவேல்மாறன், ஆணையர் பி.சேகர், பொறியாளர் சந்திரன், பள்ளித் தலைமை ஆசிரியர் ஆறுமுகம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இதுகுறித்து நகர்மன்றத் தலைவர் இரா.ஸ்ரீதரன் கூறியது:

பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவ, மாணவியர் மகிழ்ச்சியுடன் தேர்வு எதிர்கொள்ளும் வகையில் கல்விச் சுற்றுலா ஏற்பாடு செய்துள்ளோம். விரைவில் 1 வகுப்பு முதல் மற்ற வகுப்புகளில் பயிலும் மாணவ, மாணவியரும் அழைத்துச் செல்லப்படுவர்.

பொதுத்தேர்வில் 100 சதவீதம் பெறும் நகராட்சி பள்ளி மாணவ, மாணவியரை அவர்கள் விரும்பும் இடத்துக்கு சுற்றுலா அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்வேன் என்றார்.

 


Page 85 of 111