Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Education

1.15 கோடி ரூபாயில் அரசு பள்ளி கட்டடம்

Print PDF

தினமலர் 11.01.2010

1.15 கோடி ரூபாயில் அரசு பள்ளி கட்டடம்

வால்பாறை : வால்பாறை அரசு மேல்நிலைப்பள்ளியில் பல்வேறு எஸ்டேட் பகுதியிலிருந்து ஆயிரத்து 789 மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். பிளஸ் 2 வகுப்பு வரை உள்ள இந்த பள்ளியில் போதிய வகுப்பறை இல்லாததால் மாணவர்கள் படிக்க முடியாமல் அவதிப்பட்டனர். இதனையடுத்து நபார்டு வங்கி மூலம் 1.15 கோடி மதிப்பில் 14 வகுப்பறைகள் கட்டும் பணி துவங்கியது. இந்த இடத்தில் ஒரு ஆய்வகமும், கழிப்பிடமும் கட்டப்படுகிறது. மே மாத இறுதிக்குள் இந்தப்பணி நிறைவடைந்துவிடும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Last Updated on Monday, 11 January 2010 10:58
 

அரசு பள்ளி மாணவியரின் அவஸ்தைக்கு தீர்வு: எளிய முறையில் 'நாப்கின்' தயாரிக்க பயிற்சி

Print PDF

தினமலர் 08.01.201

அரசு பள்ளி மாணவியரின் அவஸ்தைக்கு தீர்வு: எளிய முறையில் 'நாப்கின்' தயாரிக்க பயிற்சி

கோவை : மாதவிடாய் நாட்களில் பள்ளி மாணவியரின் படிப்பு பாதிக்கப்படுகிறது; பலரும் வகுப்புக்கு வருவதை தவிர்த்து விடுகின்றனர். இதனால், சில தனியார் மெட்ரிக் பள்ளிகளில் போதுமான கழிப்பறைகள், "நாப்கின்' வழங்கும் மெஷின் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

ஒரு சில மாநகராட்சி பள்ளிகளில் மட்டும் தற்போது "நாப்கின் வெண்டிங் மெஷின்கள்' வைக்கப்பட்டுள்ளன. அதே வேளையில், கிராமப்புறங்கள் மற்றும் பின்தங்கிய பகுதிகளில் உள்ள அரசு பள்ளிகளின் நிலை பரிதாபமாக உள்ளது. கழிப்பறை இருந்தாலும் தண்ணீர் வசதி இருப்பதில்லை. கழிப்பறைகளில் போதுமான மறைவு இல்லாமல் இருப்பதால் மாணவியர் சிரமப்படுகின்றனர். இதனால், அரசு பள்ளி மாணவியர் அவஸ்தைக்கு உள்ளாகி வருகின்றனர். தண்ணீர் வசதி இல்லாததாலும், பயன்படுத்திய நாப்கின்களை சுகாதாரமான முறையில் அகற்ற முடியாததாலும் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். இதன் காரணமாக, மாணவியரில் பலரும் மாதவிடாய் நாட்களில் பள்ளிக்கு வருவதை தவிர்ப்பதால் படிப்பு பாதிக்கப்படுகிறது.

தனியார் பள்ளிகளைப் போல் அரசுப் பள்ளிகளிலும் குறைந்த கட்டணத்தில் "நாப்கின்' வழங்கும் மெஷின்களை நிறுவ வேண்டும் என்ற கோரிக்கை இன்னும் நிறைவேற்றப்படவில்லை. சுகாதாரமான முறையில் "நாப்கின்'களை பயன்படுத்துவது பற்றி சமுதாயத்தில் பின்தங்கிய ஏழை மாணவியருக்கு போதுமான விழிப்புணர்வு இல்லை. பல்வேறு தொற்று நோய்களுக்கு ஆளாகின்றனர். இது பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தவும், எளிய முறையில் "நாப்கின்'களை தயாரித்து பயன்படுத்தவும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவியருக்கு பயிற்சி அளிக்கப்படவுள்ளது. பஞ்சு மற்றும் சுத்தமான காட்டன் துணிகளை பயன்படுத்தி பள்ளி நாட்களில் எளிய, சுகாதாரமான முறையில் தீர்வு காண்பது பற்றி இப்பயிற்சியில் விளக்கம் அளிக்கப்படவுள்ளது.

இதற்காக அனைவருக்கும் கல்வி இயக்க ஆசிரியர் பயிற்றுனர்களுக்கு, சமீபத்தில் சென்னையில் மாநில அளவிலான பயிற்சி அளிக்கப்பட்டது. பயிற்சியில் பங்கேற்ற ஆசிரியர் பயிற்றுனர்கள், அந்தந்த மாவட்டங்களில் உள்ள ஆசிரியர் பயிற்றுனர்களுக்கு பயிற்சி அளிக்கவுள்ளனர். ஆசிரியர் பயிற்றுனர்கள் வாயிலாக பயிற்சி பெறவுள்ள பள்ளி ஆசிரியர்கள், மாணவியருக்கு இது பற்றி பயிற்சி அளிக்கவுள்ளனர். இப்பயிற்சி, அரசுப் பள்ளி மாணவியர் அனுபவித்து வரும் சுகாதாரப் பிரச்னைகளுக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் உதவிகரமாக இருக்கும் என கூறப்படுகிறது.

Last Updated on Friday, 08 January 2010 07:40
 

திருவிதாங்கோடு பேரூராட்சியில் ரூ. 5 லட்சத்தில் புதிய நூலகக் கட்டடம்

Print PDF

தினமணி 05.01.2010

திருவிதாங்கோடு பேரூராட்சியில் ரூ. 5 லட்சத்தில் புதிய நூலகக் கட்டடம்

தக்கலை, ஜன. 4: திருவிதாங்கோடு பேரூராட்சியில் ரூ. 5 லட்சத்தில் கட்டப்பட்ட புதிய நூலகத்தை பத்மநாபபுரம் எம்எல்ஏ தியோடர் ரெஜினால்டுதிறந்துவைத்தார்.

இப் பகுதியிலுள்ள நூலகம் சுமார் 13 ஆண்டுகளாக பழைய ஓட்டுக் கட்டடத்தில் செயல்பட்டு வந்தது. இங்கு இடவசதியில்லாததால் நூல்களை முறையாக பராமரிக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து, நூலகத்துக்கு புதிய கட்டடம் கட்டித் தர வாசகர்கள் சார்பில் தியோடர் ரெஜினால்டு எம்எல்ஏவிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.

புதிய நூலகக் கட்டடம் கட்ட பேரவை உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 5 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு புதிய கட்டடம் கட்டப்பட்டது. அதை எம்எல்ஏ திறந்துவைத்தார்.

நிகழ்ச்சியில், திருவிதாங்கோடு பேரூராட்சித் தலைவர் மாஜிதா, துணைத் தலைவர் ஜபகர், வார்டு உறுப்பினர்கள் மாகின், மலுக்முகமது, காதரியா, பக்கீர், ஜெயலட்சுமி, பொதுப் பணித் துறை கட்டடப்பிரிவு பொறியாளர் அருள்செல்வி, முன்னாள் ஊராட்சித் தலைவர்கள் மீரான்மைதீன், புகாரி, நூலகர்கள் சஜீவன், சுனிதா, மாவட்ட திமுக துணைச் செயலர் ஜோசப்ராஜ், கிளைச் செயலர் சம்சுதீன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Last Updated on Tuesday, 05 January 2010 10:32
 


Page 89 of 111