தினகரன் 31.12.2009
பள்ளி கட்டிடத்தை ஆய்வு
காமராஜர் பிறந்தநாள் விழாவில் பெறப்பட்ட மக்களின் கோரிக்கையை ஏற்று தமிழக வேளாண்துறை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் பழமையான கட்டிடங்களுக்கு பதிலாக புதிய கட்டடங்கள் கட்டித்தர உறுதியளித்திருந்தார். இவரது முயற்சியில் நபார்டு திட்டத்தில் மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு ரூ.1 கோடி ஒதுக்கப்பட்டு கட்டடம் கட்டும் பணிகள் நடந்து வருகிறது. கட்டட பணிகளை வேளாண்துறை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் நேற்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். வகுப்பறை, கழிப்பறை, தலைமை ஆசிரியர் அறை, ஆய்வகம் கட்டப்பட உள்ள இடங்களையும் ஆய்வு செய்தார். கட்டப்பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டார். வகுப்பறைக் கதவுகள் காற்றோட்டத்துக்காக பாதி திறக்கும் வகையில் தனித்தனியாக அமைக்க வேண்டும் என்று அதிகாரிகளிடம் கூறினார்.