Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Education

ஒரு கோடி ரூபாயில் உருவாகும் நடுநிலைப் பள்ளி

Print PDF

தினமலர் 18.12.2009

 

குடியாத்தம் நகராட்சி மேல்நிலைப் பள்ளி அம்பாலால் அறக்கட்டளை 5 ஆண்டுகளுக்கு தத்தெடுத்தது

Print PDF

தினமணி 14.12.2009

குடியாத்தம் நகராட்சி மேல்நிலைப் பள்ளி அம்பாலால் அறக்கட்டளை 5 ஆண்டுகளுக்கு தத்தெடுத்தது

குடியாத்தம், டிச. 13: தமிழக அரசின் நலிவடைந்த பள்ளிகளை மேம்படுத்தும் திட்டத்தின்கீழ் குடியாத்தம் நகராட்சி மேல்நிலைப் பள்ளியை அம்பாலால் அறக்கட்டளை 5 ஆண்டுகளுக்கு தத்தெடுத்துக்கொண்டு அதன் வளர்ச்சிக்காக ரூ. 5 லட்சம் ஒதுக்கீடு செய்துள்ளது.

கடந்த 1906-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இப்பள்ளி, 1950-ம் ஆண்டு உயர்நிலைப் பள்ளியாகவும், 1978-ம் ஆண்டு மேல்நிலைப் பள்ளியாகவும் தரம் உயர்த்தப்பட்டது. இப்பள்ளியில் சுமார் 2 ஆயிரம் மாணவர்கள் படிக்கின்றனர். 70 ஆசிரியர்கள் பணி புரிகின்றனர். தற்போது பள்ளி நலிவடைந்த நிலையில் உள்ளது.

நலிவடைந்த பள்ளிகளின் வளர்ச்சிப் பணிகளில் தனியார் பங்கை அதிகரிக்க தமிழக அரசு முயற்சிகள் மேற்கொண்டுள்ளது. அதன்படி அம்பாலால் அறக்கட்டளை இப்பள்ளியை 5 ஆண்டுகளுக்கு தத்தெடுக்க முடிவெடுத்தது.

சனிக்கிழமை குடியாத்தத்தில் நடைபெற்ற விழாவில் அம்பாலால் அறக்கட்டளை நிர்வாகிகள் ஏ. பாரஸ்மல் ஜெயின், . கேவல்சந்த் ஜெயின், கே, ஜவரிலால் ஜெயின் ஆகியோர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஜி. மூர்த்தி முன்னிலையில் இதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

கே.எம்.ஜி. கல்லூரிச் செயலர் கே.எம்.ஜி. ராஜேந்திரன், தொழிலதிபர் அமீன் சாஹிப், நகர்மன்ற துணைத் தலைவர் எஸ். சௌந்தரராஜன், ஆசிரியர் டி. வேலன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 

பட்டுக்கோட்டை நகராட்சிப் பள்ளியில் கணினி மையம்

Print PDF

தினமணி 14.12.2009

பட்டுக்கோட்டை நகராட்சிப் பள்ளியில் கணினி மையம்

பட்டுக்கோட்டை, டிச. 13: பட்டுக்கோட்டை முஸ்லிம் தெரு நகராட்சி நடுநிலைப் பள்ளியில் கணினி மையம் தொடக்க விழா, கண்ணொளி காப்போம் திட்டத்தில் மாணவர்களுக்கு கண் கண்ணாடி வழங்கும் விழா, அனைவருக்கும் கல்வி இயக்க இணைப்பு மைய மாணவர்களுக்கு சீருடை, புத்தகப் பை, காலணி வழங்கும் விழா, அங்கன்வாடி கட்டட அடிக்கல் நாட்டு விழா ஆகிய விழாக்கள் செவ்வாய்க்கிழமை நடைபெற்றன.

விழாவுக்கு, என்.ஆர். ரங்கராஜன் எம்எல்ஏ தலைமை வகித்து, கணினி மையத்தைத் தொடக்கி வைத்தார். அங்கன்வாடி கட்டடத்துக்கு நகர் மன்றத் தலைவர் இ. பிரியா அடிக்கல் நாட்டினார். முன்னாள் தலைவர் சீனி. இளங்கோ கண்ணொளி காப்போம் திட்டத்தில் அளிக்கப்பட்ட கண் கண்ணாடிகளை மாணவர்களுக்கு வழங்கினார்.

இணைப்பு மைய மாணவர்களுக்கு நகர் மன்ற துணைத் தலைவர் செ. கண்ணன் சீருடைகளையும், கூடுதல் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் பேபி புத்தகப் பை, காலணிகள் ஆகியவற்றையும் வழங்கினர்.

விழாவில், வட்டார வள மைய மேற்பார்வையாளர் எஸ். மாதவன், நகராட்சி முன்னாள் உறுப்பினர் ஏ. அப்துல் ரஹ்மான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பள்ளித் தலைமையாசிரியர் எஸ். ஜெயவேல் வரவேற்றார். தமிழாசிரியர் வைரமணி நன்றி கூறினார்.

 


Page 93 of 111