Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Education

பழனியம்மாள் மாநகராட்சி பள்ளியில் 3,727 மாணவிகளுக்கு விபத்து காப்பீடு பாலிசி

Print PDF

தினமணி 20.11.2009

பழனியம்மாள் மாநகராட்சி பள்ளியில் 3,727 மாணவிகளுக்கு விபத்து காப்பீடு பாலிசி

திருப்பூர், நவ.19: பழனியம்மாள் மாநகராட்சி பள்ளியில் படிக்கும் அனைத்து மாணவிகளுக்கும் விபத்து காப்பீடு பாலிசியை காந்திநகர் ரோட்டரி சங்கம் வழங்கியது.

திருப்பூர் பழனியம்மாள் மாநகராட்சி மே.பள்ளி யில் 3,727 மாணவிகள் படித்து வருகின்றனர்.

இப்பள்ளி மாணவிகளின் எதிர்கால கல்வியை கருதில் கொண்டு ரூ.10 லட்சம் மதிப்புடைய பாலிசியை பள்ளியின் பெயரில் காந்திநகர் ரோட்டரி சங்கம் வழங்கியுள்ளது.

பள்ளியில் படிக்கும் ஏதேனும் மாணவியின் தந்தை அல்லது தாய் விபத்தில் மரணம் அடைந்தால் அவர்களின் குடும்பத்துக்கு காப்பீட்டு தொகையாக ரூ.10 ஆயிரம் வழங்கப்படும்.

இதுதவிர மாணவிகள் விபத்தில் காயமடைந்தால் மருத்துவ செலவுக்காக ரூ.500 பெற்றுக்கொள்ள முடியும்.

இவ்விபத்து காப்பீட்டு பாலிசியை பள்ளிக்கு ஒப்படைக்கும் நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் புதன்கிழமை நடந்தது. ரோட்டரி சங்க தலைவர் பார்த்தசாரதி தலைமை தாங்கினார். பள்ளி தலைமையாசிரியை மேரிவிமலாபாய் வரவேற்றார்.

மேயர் க.செல்வராஜ் மாணவிகளுக்கான விபத்து காப்பீட்டு பாலிசியை பள்ளி தலைமையாசிரியை யிடம் ஒப்படைத்தார்.

இதில், ரோட்டரி சங்க முன்னாள் மாவட்ட ஆளுநர் நாராயணசாமி, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் லிங்க்ஸ்சௌகத்அலி உள்பட ரோட்டரி நிர்வாகி கள் பலர் பங்கேற்றனர்.

 

மாண்டிசோரி பள்ளிகளுக்கு கருவிகள் வழங்க மேயர் உத்தரவு

Print PDF
தினமணி 18.11.2009

மாண்டிசோரி பள்ளிகளுக்கு கருவிகள் வழங்க மேயர் உத்தரவு

சென்னை, நவ.17: மாண்டிசோரி கல்வி கற்றல் முறைக்கு தேவையான உபகரணங்களை வழங்குமாறு, கல்வி அலுவலர்களுக்கு மேயர் மா. சுப்பிரமணியன் திங்கள்கிழமை உத்தரவிட்டார்.

சென்னை மாநகராட்சியும், ரோட்டரி சங்கமும் இணைந்து மாநகராட்சி மழலையர் பள்ளிகளைச் சேர்ந்த 61 ஆசிரியைகளுக்கு, ரூ. 12.50 லட்சம் செலவில் ஓராண்டு மாண்டிச்சோரி பயிற்சி அளித்தன.

பயிற்சி முடித்த ஆசிரியைகளுக்கு சென்னையில் திங்கள்கிழமை நடைபெற்ற விழாவில் மேயர் மா. சுப்பிரமணியன் சான்றிதழ்களை வழங்கினார்.

அப்போது, மாண்டிசோரி கல்வி கற்றல் முறைக்குத் தேவையான உபகரணங்களை வழங்குமாறு, மேயரிடம் ஆசிரியைகள் கோரிக்கை விடுத்தனர்.

இதைத்தொடர்ந்து, மாண்டிசோரி பள்ளிகளுக்குத் தேவையான உபகரணங்களை உடனடியாக வழங்குமாறு, கல்வி அலுவலர்களுக்கு மேயர் உத்தரவிட்டார்.

 

Last Updated on Wednesday, 18 November 2009 07:46
 

அரசு பள்ளி தலைமை ஆசிரியர்களிடம் வீடியோ கான்பரன்சிங் மூலம் அதிகாரிகள் உரையாடல்

Print PDF

மாலை மலர் 16.11.2009

அரசு பள்ளி தலைமை ஆசிரியர்களிடம் வீடியோ கான்பரன்சிங் மூலம் அதிகாரிகள் உரையாடல்

சென்னை, நவ 16-

மாவட்ட கலெக்டர்கள், போலீஸ் உயர் அதிகாரிகள், சிறை துறை அதிகாரிகள் சென்னையில் உள்ள தலைமை அலுவலகத்தில் இருந்து மற்ற மாவட்டங்களில் உள்ள நிர்வாகத்தை கண்காணித்து முக்கிய முடிவுகள், உத்தரவுகள் பிறப்பிக்க வீடியோ கான்பரன்சிங் திட்டம் ஏற்கனவே தொடங்கப்பட்டு நடைமுறையில் உள்ளது.

மாவட்ட அதிகாரிகளுடன் உயர் அதிகாரிகள் வீடியோ மூலம் உரையாடல் நடத்தி முக்கிய தகவல்களை பரிமாற்றம் செய்து கொள்வார்கள். செயற்கை கோள் உதவியுடன் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் தொழில் நுட்பத்தில் தகவல் பரிமாற்றம் செய்யப்படுகிறது.

இந்த திட்டம் பள்ளிக்கல்வி துறையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அரசு உயர் நிலை மற்றும் மேல் நிலைப்பள்ளி அளவில் முதல் கட்டமாக செயல்படுத்தப்படுகிறது.

உயர்நிலை, மேல் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களை ஒருங்கிணைக்கும் வகையில் 5000 அரசு பள்ளிக் கூடங்கள் இணைக்கப்படுகிறது.

மாணவர்களின் தேர்ச்சி விகிதம், கல்வி கற்பித்தல் முறை, இடைநிற்றல், வருகை பதிவேடு, தொழிற்பயிற்சி உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து உயர் அதிகாரிகள் ஆய்வு செய்கிறார்கள். தமிழ்நாடு முழுவதும் 400 வட்டார வள மையங்களில் சென்னையில் இருந்தவாறு தொடர்பு கொண்டு வீடியோ கான்பரன் சிங் மூலம் தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுரை வழங்கப்படுகிறது.

இந்த கான்பரன்சிங்கில் அரசு நலத்திட்டங்கள், ஆங்கில மொழி ஆய்வகங்கள், கணினி ஆய்வகங்கள், பள்ளிகளின் சுற்றுப்புற தூய்மை, போன்றவைகள் குறித்து விளக்கி பேசப்படுகிறது.

மாணவர்களுக்கு வழங்க வேண்டிய கல்வி வளர்ச்சி பணிகள் குறித்து ஆய்வு செய்து கல்வி அதிகாரிகள் கருத்துக்களை வழங்குகிறார்கள். நேரடியாக டெலிபோனிலோ செல்போனிலோ பேசுவதை காட்டிலும் ஆவணங்களை வைத்து வீடியோ படம் மூலம் இருவரும் உரையாடல் செய்து கொள்ள இத்திட்டம் உதவி செய்கிறது.

இதனை சென்னை கல்லூரி சாலையில் உள்ள டி.பி.. வளாகத்தில் சர்வ சிக்ஷியா அபியா திட்ட கட்டிடத்தில் பள்ளிக் கல்வி இயக்குனர் டாக்டர் பெருமாள்சாமி தொடங்கி வைத்து தலைமை ஆசிரியரிடம் உரையாற்றினார். அங்குள்ள அறையில் இருந்துதான் தமிழ்நாடு முழுவதும் உள்ள பள்ளி தலைமை ஆசிரியர்களிடம் வீடியோ படத்துடன் பேச முடியும்.

இந்த திட்டம் அடுத்த கட்டமாக ஆசிரியர் அல்லாத ஊழியர்களுக்கும் விரிவுப்படுத்தப்படும். இதன் தொடக்க விழாவில் இணை இயக்குனர்கள் தர்மராஜேந்திரன், ராமேஸ்வர முருகன், ராஜேஸ்வரி ஆகியோர் கலந்து கொண்டனர்.

Last Updated on Monday, 16 November 2009 11:36
 


Page 96 of 111