Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Education

தேசப்பற்றை வளர்க்கும் நிகழ்ச்சி மாநகராட்சி பள்ளி முதலிடம்

Print PDF

தினமலர்           12.08.2012

தேசப்பற்றை வளர்க்கும் நிகழ்ச்சி மாநகராட்சி பள்ளி முதலிடம்

திருப்பூர் : பள்ளி மாணவ, மாணவியர் இடையே தேசப்பற்றை வளர்க்கும் கலை நிகழ்ச்சி, திருப்பூரில் நடந்தது; அரண்மனைப்புதூர் மாநகராட்சி பள்ளி முதலிடம் பெற்றது.

திருப்பூர் தெற்கு இன்னர்வீல் சங்கம் சார்பில், பள்ளி மாணவ, மாணவியர் இடையே தேசப்பற்றை வளர்க்கும் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. சங்க தலைவி நித்யா தலைமை வகித்தார். "நாட்டை நல்வழிப்படுத்துவதில் உன்னுடைய செயல்பாடு என்ன' என்ற தலைப்பில் பாட்டு, பேச்சு மற்றும் நடனப் போட்டிகள் நடந்தன. அரண்மனைப்புதூர், காதர்பேட்டை, தேவாங்கபுரம், கருவம்பாளையம் ஆகிய மாநகராட்சி நடுநிலைப்பள்ளிகளின் மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.திட்ட ஒருங்கிணைப்பாளர் சரஸ்வதி, உதவி திட்ட ஒருங்கிணைப்பாளர் கீதா, மாவட்ட துணை தலைவர் சரஸ்வதி ஆகியோர் நடத்தினர். அரசு பள்ளி மாணவ, மாணவியர் இடையே உள்ள திறமையை வெளிக்கொண்டு வந்து, அவர்களை ஊக்கப்படுத்துவதே, இந்நிகழ்ச்சியின் நோக்கம்.

அதிக புள்ளிகளை எடுத்த அரண்மனைப்புதூர் மாநகராட்சி பள்ளி முதலிடம் பெற்றது. தேவாங்க
புரம் பள்ளி இரண்டாமிடம், காதர்பேட்டை பள்ளி மூன்றாமிடம் பெற்றது. வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு ரோட்டரி தலைவர் தேவராஜ் பரிசு வழங்கினார். சங்க செயலாளர் பிரபா நன்றி கூறினார்.

Last Updated on Monday, 13 August 2012 06:27
 

மடிக் கணினி வழங்கும் விழா

Print PDF

தினமணி              11.08.2012

மடிக் கணினி வழங்கும் விழா

ராமநாதபுரம், ஆக. 10: ராமநாதபுரம் நகராட்சிப் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் அரசின் சார்பில் விலையில்லா மடிக் கணினி வழங்கும் விழா வெள்ளிக்கிழமை அப்பள்ளி வளாகத்தில் பள்ளித் தலைமை ஆசிரியர் புகழேந்தி தலைமையில் நடைபெற்றது.

உதவித் தலைமை ஆசிரியர் பொன்.மாடசாமி, நகர்மன்ற உறுப்பினர் பாக்கியவதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். உடற்கல்வி இயக்குநர் நாச்சியப்பன் அனைவரையும் வரவேற்றார்.

நகர்மன்றத் தலைவர் எஸ்.கே.ஜி.சேகர் அப்பள்ளியில் பிளஸ் 2 படித்த மாணவிகள் 133 பேருக்கு மடிக் கணினிகளை வழங்கி பேசியதாவது:

மாணவிகளுக்கு படிக்க கல்வி உதவித்தொகை, விலையில்லா சைக்கிள் ஆகினவற்றையும் வழங்கும் தமிழக அரசு அறிவைப் பெருக்கிக் கொள்ள விலையில்லா மடிக்கணினிகளை வழங்கி வருகிறது என்றார்.

 

விலையில்லா மடிக்கணினி வழங்கும் விழா

Print PDF

தினமணி         08.08.2012

விலையில்லா மடிக்கணினி வழங்கும் விழா

பழனி, ஆக.7: பழனியில் பள்ளிகளில் மாணவ, மாணவிகளுக்கு 976 விலையில்லா மடிக்கணினிகள் வழங்கப்பட்டன.

பழனியில் நகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மற்றும் அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளிகளில் திங்கள்கிழமை விலையில்லா மடிக்கணினிகள் வழங்கும் விழா நடைபெற்றது. நகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவில் 260 மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணிகளை பழனி சட்டப்பேரவை உறுப்பினர் வேணுகோபாலு, பழனி ஒன்றியத் தலைவர் செல்லச்சாமி ஆகியோர் வழங்கினர். நிகழ்ச்சிக்கு நகர்மன்ற துணைத் தலைவர் முருகானந்தம் தலைமை வகித்தார். பழனி கல்வி மாவட்ட அலுவலர் விஜயன், பழனி அதிமுக தொகுதி செயலாளர் மகுடீஸ்வரன், நகர் நல அலுவலர் யசோதாமணி, உதவி தலைமையாசிரியர் திருமலைசாமி மற்றும் நகராட்சி கவுன்சிலர்கள் வாழ்த்துரை வழங்கினர். பழனி சட்டப்பேரவை உறுப்பினர் வேணுகோபாலு பேசும்போது, தமிழக அரசு கல்வித்துறைக்காக 15 விலையில்லா திட்டங்களை அறிவித்து அவற்றை கல்வித்துறை மூலமாகவே சிறப்பாக அமல் செய்து வருகிறது. மடிக்கணினி திட்டத்துக்காக 14 ஆயிரத்து ஐநூறு கோடி ரூபாய் அரசு நிதி ஒதுக்கியுள்ளது. கல்வித்துறைக்காக முதல்வர் பல்வேறு நடவடிக்கைகளும் எடுத்துள்ளார் என்றார்.

அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விலையில்லா மடிக்கணினி வழங்கும் விழாவில் 716 மடிக்கணினிகள் மாணவிகளுக்கு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் தலைமையாசிரியர் பழனிச்சாமி, அதிமுக சிறுபான்மை மாவட்ட துணை தலைவர் பாரூக், எம்ஜிஆர் மன்ற துணைத் தலைவர் ரமேஷ்ராம், அரிமா சுந்தரம், தாராபுரம் பெரியசாமி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

 


Page 23 of 111