Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Education

போட்டிகளில் வெற்றிபெற்ற சென்னை மாநகராட்சி பள்ளி மாணவ-மாணவிகளுக்கு இன்பச் சுற்றுலா

Print PDF

மாலை மலர்    07.08.2012

போட்டிகளில் வெற்றிபெற்ற சென்னை மாநகராட்சி பள்ளி மாணவ-மாணவிகளுக்கு இன்பச் சுற்றுலா

சென்னை, ஆக. 7

போட்டிகளில் வெற்றிபெற்ற சென்னை மாநகராட்சி பள்ளி மாணவ-மாணவிகளுக்கு இன்பச் சுற்றுலா
சென்னை மற்றும் புறநகர் பகுதி மாநகராட்சி பள்ளிகளில் 8-வது வகுப்பு படிக்கும் எஸ்.சி., எஸ்.டி., சிறுபான்மைப் பிரிவு மாணவர்களுக்கு சமீபத்தில் பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி உள்பட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன.இதில் சென்னை மாநகராட்சி பள்ளியைச் சேர்ந்த 288 மாணவ-மாணவிகளும்,  புறநகர் பள்ளிகளைச் சேர்ந்த 300 மாணவ-மாணவிகளும் வெற்றி பெற்றனர்.இவர்கள் அனைவரையும் இன்பச் சுற்றுலா அழைத்துச் செல்ல முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, அனைவரும் 3 நாள் சுற்றுலாவாக கன்னியாகுமரி மற்றும் நெல்லை மாவட்டங்களின் பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் செல்லப்படுகிறார்கள். இவர்கள் ஒவ்வொருவருக்கும் தலா ரூ.2062  சென்னை மாநகராட்சி செலவு செய்கிறது.

இந்த மாணவ-மாணவிகள் இன்று காலை பாரத் தர்ஷன் சிறப்பு ரயில் மூலம் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டுச் சென்றனர். அவர்களை சென்னை மாநகர மேயர் சைதை. துரைசாமி மற்றும் அதிகாரிகள் வழியனுப்பி வைத்தனர்.

Last Updated on Wednesday, 08 August 2012 05:21
 

தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு விரைவில் சுகாதார அட்டை: கிழக்கு தில்லி மாநகராட்சி திட்டம்

Print PDF
தினமணி                        07.08.2012

தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு விரைவில் சுகாதார அட்டை: கிழக்கு தில்லி மாநகராட்சி திட்டம்

புது தில்லி, ஆக. 6: கிழக்குத் தில்லி மாநகராட்சி தொடக்கப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு இந்த மாதம் முதல் மருத்துவப் பரிசோதனை முகாம்கள் நடத்தப்படுவதையொட்டி, அவர்களுக்கு சுகாதார அட்டைகளை வழங்க மாநகராட்சி திட்டமிட்டு வருகிறது.

முகாமின்போது, கிழக்குத் தில்லி மாநகராட்சி தொடக்கப் பள்ளிகளில் பயிலும் இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு உடல் நலப் பரிசோனை நடத்தப்படும். அதன் பிறகு சுகாதார அட்டைகள் வழங்கப்படும்.

 மாநகராட்சியின் மாணவர் சுகாதாரத் திட்டத்தின் கீழ் மருத்துவ வசதி அளிக்கும் வகையில் இந்த அட்டைகள் வழங்கப்படுகின்றன.

இது குறித்து, மாநகராட்சி ஆணையர் எஸ்.எஸ். யாதவ் கூறியதாவது:

ஆண்டுக்கு குறைந்தபட்சம் ஒரு முறை மருத்துவப் பரிசோதனை நடத்தும் யோசனை உள்ளது.தொடக்கத்தில் சுகாதார முகாம்களை நடத்துவதற்கு 20 குழுக்களை ஏற்படுத்தியுள்ளோம்.

ஒவ்வொரு குழுவிலும் ஒரு டாக்டர், மருந்தாளுநர், நர்ஸ் ஆகியோர் இருப்பார்கள். இந்தப் பணியாளர்கள் மாணவர்களுக்கு சுகாதார அட்டைகளையும் வழங்குவர்.

ஷாதரா வடக்கு, தெற்கு ஆகிய இரு மண்டலங்களிலும் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் இந்த முகாம்களை நடத்த சுகாதார, கல்வித் துறைகள் அறிவுறுத்தப்பட்டுள்ளன. ஆகஸ்ட் 16-ம் தேதி முகாம்களை தொடங்க உள்ளோம் என்றார் அவர்.

மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், "ஆபத்தான நோய்களால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் இருப்பது கண்டறியப்பட்டால் அவர்கள் சிகிச்சை பெறுவதற்காகப் பரிந்துரைக்கப்படும் மருத்துவமனை சுகாதார அட்டையில் குறிப்பிடப்படும்.தீவிரமான நோய் இருப்பது கண்டறியப்பட்டால் சுவாமி தயானந்த் மருத்துவமனை, ஹிந்து ராவ் மருத்துவமனை போன்றவற்றுக்கு அவர்கள் பரிந்துரை செய்யப்படுவர்.

மாநகராட்சியால் பரிந்துரைக்கப்படும் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் மாணவருக்குரிய சிகிச்சைக் கட்டணம், சுகாதாரத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும்.மாணவர்களுக்கான சுகாதார சேவைகளை மேம்படுத்தும் வகையில் பல்நோக்கு மருத்துவமனையை கர்வால் நகரில் கட்ட மாநகராட்சி திட்டமிட்டு வருகிறது' என்று தெரிவித்தனர்.கிழக்குத் தில்லி மாநகராட்சியில் உள்ள 390 ஆரம்பப் பள்ளிகளில் சுமார் 2.40 லட்சம் மாணவர்கள் படித்து வருகின்றனர்.
Last Updated on Wednesday, 08 August 2012 05:16
 

மாநகராட்சி பள்ளிகளில் படிக்கும் 1,055 மாணவ, மாணவிகளுக்கு ஆங்கில பேச்சாற்றல் பயிற்சி

Print PDF

தினகரன்   07.08.2012

மாநகராட்சி பள்ளிகளில் படிக்கும் 1,055 மாணவ, மாணவிகளுக்கு ஆங்கில பேச்சாற்றல் பயிற்சி

ஈரோடு, : ஈரோடு மாநகராட்சி பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளின் ஆங்கில பேச்சாற்றலை வளர்க்கும் விதமாக 4 பள்ளிகளில் படிக்கும் 1,055 பேருக்கு ஆங்கில பேச்சாற்றல் பயிற்சி அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.ஈரோடு மாநகராட்சி நிர்வாகத்தின்கீழ் இயங்கி வரும் பள்ளிகளுக்கு தேவையான கட்டமைப்பு வசதிகள், உபகரணங்கள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.தனியார் பள்ளிகளுக்கு இணையாக மாநகராட்சி பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளின் ஆங்கில பேச்சாற்றலை வளர்க்கும் விதமாக ஆங்கில பேச்சாற்றல் பயிற்சி அளிக்க முடிவு செய்யப்பட்டது.

இதில் 9 மற்றும் 11ம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு முதல்கட்டமாக ஆங்கில பேச்சாற்றல் பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.அதன்படி ரயில்வே காலனி மேல்நிலைப்பள்ளி 9ம் வகுப்பில் 188 பேருக்கும், 11ம் வகுப்பில் 190 பேருக்கும், கருங்கல்பாளையம் காவேரிரோடு பெண்கள் மேல்நிலைப்பள்ளி 9ம்வகுப்பில் 193 பேருக்கும், 11ம்வகுப்பில் 153 பேருக்கும், இடையன்காட்டுவலசு உயர்நிலைப்பள்ளி 9ம் வகுப்பில் 104 பேருக்கும், காமராஜர் மேல்நிலைப்பள்ளி 9ம்வகுப்பில் 112 பேருக்கும், 11ம்வகுப்பில் 115 பேருக்கும் என 9ம் வகுப்பில் 597 பேருக்கும், 11ம் வகுப்பில் 458 பேருக்கும் என 1,055 மாணவ, மாணவியர்களுக்கு இந்த பயிற்சி அளிக்கப்படவுள்ளது.

இதற்கான பயிற்சி வகுப்பு 2 மாதங்களுக்கு வழங்கப்படவுள்ளது. இதற்கு கட்டணமாக ஒரு நபருக்கு 350 ரூபாய் மாநகராட்சி செலவிடுகிறது.மாநகராட்சி பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களில் பரிட்சார்த்த முறையில் முதல் கட்டமாக மாநகராட்சி கருங்கல்பாளையம் காவேரிரோடு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 9ம்வகுப்பு படிக்கும் 193 பேருக்கு ஆங்கில பேச்சாற்றல் பயிற்சி அளிக்கப்படவுள்ளது. இதற்காக 70 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. முதல்கட்ட பயிற்சியில் மாணவிகளின் செயலாக்கத்தின் அடிப்படையில் மீதமுள்ள மாணவ, மாணவிகளுக்கும் பயிற்சி அளிக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது..

 


Page 24 of 111