Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Education

கூடாரத்தில் வகுப்புகள் நடப்பதை தவிர்க்க மாநகராட்சி ஆரம்ப பள்ளிகளில் 125 தற்காலிக வகுப்பறைகள்

Print PDF

தினகரன்             07.12.2010

கூடாரத்தில் வகுப்புகள் நடப்பதை தவிர்க்க மாநகராட்சி ஆரம்ப பள்ளிகளில் 125 தற்காலிக வகுப்பறைகள்

புதுடெல்லி, டிச. 8:டெல்லி மாநகராட்சி சார்பில் நடத்தப்படும் ஆரம்பப்பள்ளிகளில் போதிய வகுப்பறை வசதிகள் இல்லாததால், பல பள்ளிகளில் கூடாரம் (டென்ட்) அமைத்து குழந்தைகளுக்கு பாடம் சொல்லித் தரப்படுகிறது. இந்த அவலத்தை தீர்க்கக் கோரும் வழக்கு உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதி மன்மோகன் ஆகியோரைக் கொண்ட பெஞ்ச் முன்னிலையில் நடந்து வருகிறது.

இநத வழக்கு முதலில் விசாரணைக்கு வந்தபோது, மாநகராட்சி ஆரம்பப்பள்ளிகளில் கூடாரங்களில் வகுப்புகள் நடத்துவதை நேரில் ஆய்வு செய்து அறிக்கை அளிக்க ஒரு குழுவை நீதிபதிகள் நியமித்தனர்.

அதைத் தொடர்ந்து அக்குழுவினர் ஆரம்பப் பள்ளிகளில் ஆய்வு நடத்தி, 41 பள்ளிகளில் கூடாரங்களில் வகுப்புகள் நடப்பதாக தெரிவித்திருந்தனர். "கூடாரத்துக்கு வந்து ஆசிரியர்களும் சரிவர பாடம் நடத்துவதில்லை. அதனால் ஏழை மாணவர்களின் கல்வி கற்கும் உரிமை பறிக்கப்படுகிறது" என்றும் குழு அறிக்கையில் கூறப்பட்டிருந்தது. அந்த அறிக்கை கடந்த 1ம்தேதி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

அதைக் கேட்ட நீதிபதிகள், "கூடாரங்களில் ஆரம்பப்பள்ளிகளை நடத்தும் மாநகராட்சியை கடுமையாக கண்டிக்கிறோம். அந்தப் பள்ளிகளின் தரத்தை உயர்த்த உடனடியாக உயர்த்தாவிட்டால், ரூ.5 லட்சம் வரையில் மாநகராட்சிக்கு அபராதம் விதிப்போம் என எச்சரிக்கிறோம். அபராதத் தொகையை மாநகராட்சி அதிகாரிகளின் சம்பளத்தில் இருந்து பிடித்தம் செய்ய வேண்டுமெனவும் உத்தரவிடுவோம். எனவே, கூடாரங்களில் வகுப்புகள் நடக்கும் பள்ளிகளில் தற்காலிக வகுப்பறைகளை (போர்டபிள் கேபின்) உடனடியாக அமைக்க வேண்டும்" என்று உத்தரவிட்டனர். இந்த வழக்கு நேற்று முன்தினம் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, மாநகராட்சி கல்விக்குழு தலைவர் மகேந்தர் நாக்பால் சமர்ப்பித்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:

மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள 45 ஆரம்பப் பள்ளி வளாகங்களில் இந்த ஆண்டு இதுவரையில் 645 வகுப்பறைகளை கட்டி முடித்துள்ளோம். இதுதவிர, 41 நகராட்சி ஆரம்பப் பள்ளிகளில் புதிய வகுப்பறைகள் கட்டும் பணிகள் நடந்து வருகின்றன. இந்தப் பணிகள் 3 மாதம் முதல் 9 மாதங்களுக்குள்ளாக முடிந்து விடும் என்று எதிர்பார்க்கிறோம்.

அதன்பிறகு, கூடாரங்களில் மாணவர்கள் படிக்கும் நிலை முடிவுக்கு வரும். கூடாரங்களில் வகுப்புகள் நடக்கும் பள்ளிகளில், நீதிமன்ற உத்தரவுப்படி 125 தற்காலிக வகுப்பறைகளை(போர்ட்டபிள் கேபின்) அமைக்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

முதல்கட்டமாக, 20 புதிய தற்காலிக வகுப்பறைகளை அமைக்கும் பணிகள் தொடங்கியுள்ளன. வகுப்பறைகள் கட்டுமானப் பணி 6 மாதத்தையும் தாண்டி நடக்கும் என்ற நிலையில் உள்ள பள்ளிகளில் இந்த தற்காலிக வகுப்பறைகளை அமைக்க முடிவு செய்துள்ளோம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

 

கோவை மாநகராட்சி சார்பில் அறிவியல் மையம்

Print PDF

தினமணி          07.12.2010

கோவை மாநகராட்சி சார்பில் அறிவியல் மையம்

கோவை, டிச. 6: கோவை மாநகரின் மையப் பகுதியில் மாநகராட்சி சார்பில் அறிவியல் மையம் அமைக்க கல்வி, பூங்காக்கள் குழு திட்டமிட்டுள்ளது.

இதுதொடர்பாக திங்கள்கிழமை நடைபெற்ற கல்வி, பூங்காக்கள் குழுக் கூட்டத்தில் ஆலோசனை செய்யப்பட்டது. குழுத் தலைவர் ஆர்.கல்யாண்சுந்தரம் தலைமை வகித்தார். மாநகராட்சிக் கல்விப் பிரிவு ஆய்வாளர் சோமசுந்தரி முன்னிலை வகித்தார்.

வஉசி பூங்கா இயக்குநர் பெருமாள்சாமி, கல்விக் குழு உறுப்பினர்கள் வி.கே.எஸ்.கே.செந்தில்குமார், மீனா லோகநாதன், ஷோபனா செல்வன், சிவகாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர். கோவை மாநகராட்சிப் பள்ளி உள்பட அனைத்து மாணவர்களும் பயன்பெறும் வகையில் நகரின் மையப் பகுதியில் அறிவியல் மையம் அமைப்பது என்று முடிவு செய்யப்பட்டது. இம் மையத்துக்கான இடத்தை நேரடியாக ஆய்வு செய்து இறுதி செய்வது எனவும் தீர்மானிக்கப்பட்டது.

கோவை மாநகராட்சிப் பள்ளி மாணவர்களின் ஆங்கில மொழித்திறனை வளர்க்கும் வகையில் சிறப்புப் பயிற்சி அளிக்க முடிவு செய்யப்பட்டது. இதற்கென முதல்கட்டமாக மாநகராட்சிப் பள்ளி ஆசிரியர்களுக்கு தனியார் நிறுவனம் மூலமாக திறன் வளர்ப்புப் பயிற்சி அளிப்பது எனத் தீர்மானிக்கப்பட்டது.

வேளாண் பல்கலைக்கழக வளாகத்தில் செயல்படும் மாநகராட்சி துவக்கப் பள்ளிக்கு ரூ. 47 லட்சத்தில் புதிய வகுப்பறைகள், சமையல் கூடம், மாணவர்கள் சாப்பிடும் அறை கட்ட ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்தத் தீர்மானங்கள் மீது மேல்நடவடிக்கைக்காக மாநகராட்சி ஆணையருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. முன்னதாக, கால்டாக்ஸி டிரைவரால் கடத்திக் கொலை செய்யப்பட்ட பள்ளிக் குழந்தைகள் முஸ்கான், ரித்திக் ஆகியோருக்கு கல்விக் குழுக் கூட்டத்தில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

 

நகராட்சி பள்ளியில் நவீன "டைனிங் ஹால்'

Print PDF

தினமலர்          07.12.2010

நகராட்சி பள்ளியில் நவீன "டைனிங் ஹால்'

தாம்பரம் : சேலையூரில் உள்ள, நகராட்சி தொடக்கப் பள்ளியில் மாணவ, மாணவியர்கள் வசதியாக, உணவு அருந்துவதற்காக 9.50 லட்சம் ரூபாய் செலவில் டைனிங் ஹால் ஒன்று அமைக்கப்பட்டது.சேலையூரில், தாம்பரம் நகராட்சி தொடக்கப் பள்ளி இயங்கி வருகிறது. சேலையூர், ஆதி நகர், பாரத் நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த 300 மாணவ, மாணவியர்கள் படித்து வருகின்றனர். இந்தப் பள்ளியில் மாணவர்கள் உணவு அருந்துவதற்கு கூட இட வசதி இல்லாமல் இருந்தது.

மரத்தடியில் ஆங்காங்கே உட்கார்ந்து உணவு அருந்தியதால், மர இலைகள், பறவைகளின் எச்சங்கள் ஆகியவற்றால் மாணவர்கள் பெரும் சிரமப்பட்டு வந்தனர். அதேபோல், சத்துணவு கூடத்திற்கான, பணியும் பாதியிலேயே நிறுத்தப்பட்டிருந்தது. இப்பள்ளியை மேம்படுத்த வேண்டும், என பெற்றோர் கோரிக்கை எழுப்பினர். இதையடுத்து, 9.50 லட்சம் ரூபாய் செலவில் இப்பள்ளியை சீரமைக்கும் பணிகள் துவங்கின. சத்துணவு கூடத்தை சீரமைத்தல், கூடுதல் கழிப்பிடம், சுற்றுச் சுவர், மேடை, வாட்டர் டேங் ஆகிய வசதிகள் அமைக்கப்பட்டன. மேலும், மாணவ, மாணவியர்கள் சிரமமின்றி உணவு அருந்த டைனிங் ஹால் ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. இது குறித்து பள்ளி தலைமை ஆசிரியை கூறுகையில்," நகராட்சியில் உள்ள பள்ளிகளில் மாணவர்களின் வசதிக்காக, டைனிங் ஹால் அமைக்கப்பட்டுள்ள ஒரே பள்ளி இந்தப் பள்ளி தான். இந்த டைனிங் ஹாலில் ஒரே நேரத்தில், 100 மாணவர்கள் உட்கார்ந்து சாப்பிட முடியும்,' என்றார்.

 


Page 29 of 111