Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Education

நாகர்கோவிலில் தனியார் பள்ளி கட்டிடத்திற்கு சீல்

Print PDF

தினகரன்               07.12.2010

நாகர்கோவிலில் தனியார் பள்ளி கட்டிடத்திற்கு சீல்

நாகர்கோவில், டிச. 7: நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் மகளிர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் கடந்த 2007ம் ஆண்டு கான்பரன்ஸ் ஹால், மற்றும் டைனிங்ஹால் ஆகியவை கட்டப்பட்டன.

இந்த கட்டிடத்திற்கு நாகர்கோவில் உள்ளூர் திட்ட குழுமம் அனுமதி அளித்தது. ஆனால் பள்ளி நிர்வாகம் நாகர்கோவில் உள்ளூர் திட்ட குழுமத்திற்கு செலுத்த வேண்டிய உள்கட்டமைப்பு மற்றும் அடிப்படை வசதிக் கட்டணம் செலுத்தவில்லை.

இதனை தொடர்ந்து நேற்று நாகர்கோவில் உள்ளூர் குழும உதவி இயக்குநர் ஈஸ்வரன் தலைமையில் மேற்பார்வையாளர்கள் நாகேஸ்வரி, அம்பிகா, வரைவாளர் வரதராஜன் ஆகியோர் அந்த கட்டிடத்திற்கு சீல் வைத்தனர்.

 

மாநில யோகா போட்டி சங்கரன்கோவில் நகராட்சி பள்ளி 3வது இடம்

Print PDF

தினகரன்          06.12.2010

மாநில யோகா போட்டி சங்கரன்கோவில் நகராட்சி பள்ளி 3வது இடம்

சங்கரன்கோவில், டிச.6: மாநிலஅளவில் நடந்த யோகா போட்டியில் சங்கரன்கோவில் நகராட்சி நடுநிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் 3வது இடம் பிடித்துள்ளனர்.

நெல்லை மாவட்ட யோகா வளர்ச்சி கழகத்தின் சார்பில் மேலகரத்தில் 28வது மாநில அளவிலான யோகா போட்டி நடந்தது. மாவட்டத்தின் அனைத்து பகுதியில் இருந்தும் ஏராளமான மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். இதில் சங்கரன்கோவில் கிருஷ்ணசாமிநகர் நகராட்சி நடுநிலைப்பள்ளியின் மாணவ, மாணவிகள் 3வது இடம் பெற்று சாதனை படைத்தனர். இப்பள்ளி மாணவர்கள் ஆஸிக்ராசா, அம்ரோஸ் ஆகியோர் சிறப்பு வகை யோகா போட்டி யில் 3வது இடம்பெற்று பதக்கம் மற்றும் சான்றுகளை பெற்றனர். அவர்களை பள்ளியின் தலைமை ஆசிரியர் ராமச்சந்திரன், யோகா பயிற்சியாளர் ராசா மற்றும் ஆசிரியர்கள், கிராம கல்வி குழு நிர்வாகிகள் பாராட்டினார்கள்.

 

சென்னையில் 67 பள்ளிகளில் புதிய நூலகங்கள் திறப்பு

Print PDF

தினமணி 03.12.2010

சென்னையில் 67 பள்ளிகளில் புதிய நூலகங்கள் திறப்பு

சென்னை, டிச. 2: சென்னையில் உள்ள 67 உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் புதிய நூலகங்களை மாநகர மேயர் மா. சுப்பிரமணியன் புதன்கிழமை திறந்துவைத்தார். சென்னை வண்ணாரப்பேட்டை திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் உள்ள மேல்நிலைப் பள்ளியில் நூலகத்தைத் திறந்துவைத்து அவர் பேசியது:

சென்னை பள்ளி மாணவர்களின் ஆற்றலை மேம்படுத்தும் வகையில் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் 67 புதிய நூலகங்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளன. இந்தப் பள்ளிகளுக்கு புத்தகங்கள் வாங்குவதற்காக ரூ.5.98 லட்சம் வழங்கப்பட்டுள்ளது.

இப்போது ஒவ்வொரு பள்ளியிலும் 2,500 புத்தகங்கள் இடம்பெறும் வகையில் புதிய நூலகங்கள் திறக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் சுமார் 59 ஆயிரம் மாணவ, மாணவியர் பயனடைவர்.

ஒரு சில தனியார் பள்ளிகளில் மட்டும் நூலக வசதியும், நூலக வகுப்புகளும் உள்ளன. அதேபோல், அரசுப் பள்ளி மாணவர்களிடமும் படிக்கும் ஆர்வத்தை வளர்ப்பதற்காக, பள்ளி நூலகங்களில் படிப்பதற்காக 45 நிமிஷங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த நடைமுறை புதன்கிழமை முதல் அமல்செய்யப்படுகிறது. நூலகங்களை மாணவர்கள் நல்ல முறையில் பயன்படுத்தி வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்றார் அவர். வி.எஸ்.பாபு எம்.எல்.., துணை மேயர் சத்தியபாமா, நிலைக்குழுத் தலைவர் (கல்வி) ஜானகி, மன்ற எதிர்க்கட்சித் தலைவர் பி. ரவி உள்ளிட்ட பலர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

 


Page 30 of 111