Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Education

சேலையூர் நகராட்சி பள்ளி ரூ9 லட்சத்தில் சீரமைப்பு

Print PDF

தினகரன்               25.11.2010

சேலையூர் நகராட்சி பள்ளி ரூ9 லட்சத்தில் சீரமைப்பு

தாம்பரம், நவ. 25: சேலையூரில் உள்ள தாம்பரம் நகராட்சி தொடக்கப்பள்ளியில் 285 மாணவ& மாணவிகள் படிக்கின்றனர். இங்கு நகராட்சி சார்பில் ரூ9 லட்சம் செலவில் சுற்றுச்சுவர் விரிவு படுத்தல், மேடை, கழிவறை, டைனிங் ஹால் அமைத்தல், வகுப்பறையில் மழை நீர் கசியாமல் இருக்க சொருகுஓடு அமைத்தல் உள்ளிட்ட பணிகள் இரண்டு மாதங்களுக்கு முன் தொடங்கியது.

சுற்றுச்சுவர் உயரம் அதிகரிக்கப்பட்டுள்ளது. மேடை, டைனிங் ஹால் உள்ளிட்ட பணிகள் முடிந்தன. மரத்தடியில் சாப்பிடுவதால் பறவைகளின் எச்சம் விழுந்து மாணவர்கள் சிரமப்பட்டனர். டைனிங் ஹால் திறந்ததால் பிரச்னை தீர்ந்துள்ளது என்று ஆசிரியர்கள் கூறினர். டிசம்பருக்குள் அனைத்து பணிகளும் முடி யும் என நகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Last Updated on Thursday, 25 November 2010 05:35
 

ஏழை மாணவர்களுக்கான இடஒதுக்கீடு அமல்படுத்தாத பள்ளிகள் மீது நடவடிக்கை

Print PDF

தினகரன்            24.11.2010

ஏழை மாணவர்களுக்கான இடஒதுக்கீடு அமல்படுத்தாத பள்ளிகள் மீது நடவடிக்கை

புதுடெல்லி, நவ. 24: அரசிடம் இருந்து குறைந்த விலையில் நிலத்தை பெற்று இயங்கி வரும் ஆரம்ப பள்ளிகள், ஏழை மாணவர்களுக்கான 20 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்தாவிட்டால் அங்கீகாரத்தை இழக்க நேரிடும் என்று மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது. டெல்லி மாநகராட்சி, ஆரம்ப பள்ளி கல்வியை நிர்வகித்து வருகிறது. மாநகராட்சியின் கீழ் 1,746 ஆரம்ப பள்ளிகள் இயங்கி வருகின்றன.

சில தனியார் ஆரம்ப பள்ளிகள் அரசிடம் மிக குறைந்த விலையில் நிலத்தை பெற்று இயங்கி வருகின்றன. இவற்றில் பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கான மாணவர் களுக்கு 20 சதவீத இடங்களை ஒதுக்க வேண்டும். ஆனால், பல பள்ளிகள் இந்த விதியை செயல்படுத்தாமல் உள்ளன. இதுகுறித்து மாநகராட்சி கல்விக்குழு தலைவர் மஹேந்தர் நாக்பால் கூறியதாவது:

ஆரம்ப கல்வியை வளர்க்க வேண்டும் என்ற காரணத்துக்காக சதுர அடி ஒரு ரூபாய் என்ற மிகக்குறைந்த விலையில் டெல்லி மேம்பாட்டு ஆணையத்தால் தனியாருக்கு நிலங்கள் வழங்கப்பட்டுள்ளன. ஆனால், 19 பள்ளிகள் வரை இந்த இடஒதுக்கீ ட்டை அமல்படுத்தாமல் உள்ளன என்று தெரியவந்துள்ளது.

இதுபோன்ற சில பள்ளிகள் மாநகராட்சி அதிகாரிகளையும் உள்ளே மறுக்கின்றனர் என்று தெரியவந் துள்ளது. இவர்கள் ஏழை மாணவர்கள் என்ற பெயரில், தங்கள் பள்ளி ஊழியர்கள் சிலரின் குழந்தைகளையே சேர்த்து கொள்கின்றனர் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மாநகராட்சி எல்லையில் உள்ள எல்லா பள்ளிகளிலும் இந்த இடஒதுக்கீடு சரியாக செயல்படுத்தப்படுகிறதா என்பது குறித்து ஆராய்ந்து வருகிறோம்.

இடஒதுக்கீட்டை பின்பற்றாத பள்ளிகளுக்கு முதலில் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்படும். அதை தொடர்ந்து அவர்களின் பதில் திருப்தி இல்லாவிட்டால், அங்கீகாரத்தை ரத்து செய்வது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

 

மாநகராட்சி நடத்தும் சென்னை பள்ளிகளில் ஆங்கில வழி கல்வியில் சேர மாணவர்கள் கடும் போட்டி

Print PDF

தினகரன்                  16.11.2010

மாநகராட்சி நடத்தும் சென்னை பள்ளிகளில் ஆங்கில வழி கல்வியில் சேர மாணவர்கள் கடும் போட்டி

சென்னை, நவ.16: மேலும் 40 சென்னை பள்ளிகளில் ஆங்கில கல்வி தொடங்கப்பட்டுள்ளது. இதில் சேர மாணவர்களிடையே கடும் போட்டி நிலவுகிறது.

மாநகராட்சி சார்பில் சென்னை பள்ளிகள் என்ற பெயரில், தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி என 285 பள்ளிகள் நடத்தப்படுகின்றன. இதில், 1 லட்சத்து 105 மாணவ&மாணவிகள் படிக்கின்றனர். இந்த மாணவர்களுக்கு இலவச சீருடை, புத்தகம், ஷூ, ஆங்கில அகராதி போன்றவை வழங்கப்படுகின்றன.

மேலும் 10, 12ம் வகுப்பு பொது தேர்வு எழுதும் மாணவர்களுக்கு மாலையில் சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுகின்றன. தனியார் பள்ளிகளுக்கு நிகராக மாநகராட்சி நடத்தும் பள்ளிகளிலும் கல்வி கற்பிக்கப்படுகிறது.

இதன் காரணமாக, இப்பள்ளிகளின் தரம் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு 10ம் வகுப்பில் 85 சதவீதமும், 12ம் வகுப்பில் 86 சதவீதமும் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதனால், இப்பள்ளிகளில் படிக்க மாணவர்களிடையே ஆர்வம் அதிகரித்து வருகிறது.

இந்த வாய்ப்பை பயன்படுத்தி மாநகராட்சியில் 29 பள்ளிகளில் கடந்த ஆண்டு ஆங்கிலவழி கல்வி தொடங்கப்பட்டது. இதில், 2, 2,07 மாணவ&மாணவிகள் படித்து வருகின்றனர். இவர்களுக்கு சமச்சீர் கல்வி பாடத்திட்டத்தின் கீழ் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இப்போது கூடுதலாக தரமணி, சைதாப்பேட்டை, பழைய வண்ணாரப்பேட்டை, அயனாவரம், ஈக்காட்டு தாங்கல், மயிலாப்பூர் உட்பட 40 சென்னை பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி தொடங்கப்பட்டுள்ளது. இதற்கான மாணவர் சேர்க்கை கடந்த விஜயதசமியன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இப்பள்ளிகளில் பிள்ளைகளை சேர்க்க பெற்றோர் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். இதனால் மாணவர் சேர்க்கையில் கடும் போட்டி நிலவுகிறது.

இது குறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது:& மாநகராட்சி பள்ளிகளின் கல்வி தரத்தை உயர்த்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. 10ம், 12ம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு இலவச லேப்டாப், மேற்கல்வி வகுப்பை தொடர உதவி தொகை போன்றவை வழங்கப்பட்டு வருகிறது. அது மட்டுமல்லாமல் 10ம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெறும் மாணவர்கள் வெளிமாநிலங்களுக்கு இலவசமாக கல்வி சுற்றுலா அழைத்து செல்லப்படுகின்றனர். தற்போது, மாநகராட்சியில் ஆங்கில வழிக்கல்வியும் தொடங்கப்பட்டுள்ளது. தனியார் பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்விக்கு அதிக தொகை வசூலிக்கப்பட்டு வருகிறது. ஆனால், மாநகராட்சி பள்ளியில் ஆங்கில வழி கல்வியும் இலவசமாக வழங்கப்பட்டு வருவதால் ஏராளமான மாணவர்கள் சேருகிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

 


Page 33 of 111