Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

பிறப்பு சான்றிதழ் உட்பட அனைத்து சேவைகளையும் ஆன்லைனில் வழங்க அரசு திட்டம்

Print PDF

தினகரன் 28.06.2010

பிறப்பு சான்றிதழ் உட்பட அனைத்து சேவைகளையும் ஆன்லைனில் வழங்க அரசு திட்டம்

மும்பை, ஜூன் 28: பிறப்பு சான்றிதழ், நில ஆவணங் கள் மற்றும் பிற முக்கிய சான்றிதழ்களைப் பெற இனி மகாராஷ்டிரா மாநில மக்கள் நீண்ட வரிசையில் காத்துக் கிடக்க வேண்டிய தில்லை. இந்த ஆவணங் களை இனி இன்டர்நெட் வழியாக ஆன்லைனிலேயே வழங்க மாநில அரசு திட்ட மிட்டுள்ளது.

தகவல் தொழில்நுட்பம் வேகமாக வளர்ச்சி யடைந்து வரும் நிலையில் அனைத்து சேவை களையும் ஆன்லைனில் வழங்குவதற் காக புதிய சட்டம் ஒன்றை கொண்டு வர மாநில தகவல் தொழில்நுட்ப இலாகா முடிவு செய்துள் ளது. இப்படி ஒரு சட்டம் கொண்டு வரப்படுவது நாட்டிலேயே இதுதான் முதல் முறையாகும். இது குறித்து மாநில தகவல் தொழில் நுட்பத்துறை முதன்மை செயலாளர் அஜய் பூஷன் பாண்டே கூறிய தாவது:

பொது சேவைகளை மின்னணு பட்டுவாடா மூலம் வழங்குவதற்கான புதிய சட்டம் ஒன்றை கொண்டு வரவிருக்கிறோம். இந்த சட்டம் இயற்றப்பட்ட தும் பிறப்பு சான்றிதழ் வழங்குவது உள்ளிட்ட அனைத்து சேவைகளும் ஆன்லைனி¢ல் வழங்கப் படும்.

ஆன்லைன் சேவையு டன், கையினால் எழுதிக் கொடுக்கும் பழைய முறையும் தொடர்ந்து நீடிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.