Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

நெல்லை மாநகராட்சி இணையதளம் தொடக்கம்

Print PDF

தினமணி 30.06.2010

நெல்லை மாநகராட்சி இணையதளம் தொடக்கம்

திருநெல்வேலி, ஜூன் 29: திருநெல்வேலி மாநகராட்சியின் புதிய இணையதளத்தை மேயர் அ.லெ. சுப்பிரமணியன் செவ்வாய்க்கிழமை தொடக்கிவைத்தார். இந்த இணையதளத்தில் மாநகராட்சி பற்றிய விவரங்களும், அதன் செயல்பாடுகள் குறித்த பல்வேறு அம்சங்களும் இடம்பெற்றுள்ளன.

மேலும், பொதுமக்கள் இந்த இணையதளத்தின் மூலம் மாநகராட்சியின் சேவைகளைப் பெறுவதற்கான வழிமுறைகள் மற்றும் அதற்குரிய விண்ணப்பங்கள் இடம்பெற்றுள்ளன. பொதுமக்கள் விண்ணப்பங்களை இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இவை தவிர, மாநகராட்சியில் செயல்படுத்தப்படும் பல்வேறு பணிகள் மற்றும் திட்டங்கள் குறித்த விவரங்களையும் இந்த இணையதளம் மூலம் தெரிந்து கொள்ளலாம். பொதுமக்கள் தங்கள் ஆலோசனைகளையும், புகார்களையும் இதில் தெரிவிக்கலாம்.

இணையதள தொடக்க விழாவில், ஆணையர் டாக்டர் சுப்பையன், மாமன்ற உறுப்பினர்கள் ஆ.துரை, பேபி கோபால், அப்துல் வகாப் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

முன்னதாக, இம் மாநகராட்சியில் செயல்படுத்தப்பட்டு வரும் ஒருங்கிணைந்த குடியிருப்பு மற்றும் குடிசைப் பகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 179 பேருக்கு மானியத் தொகையாக ரூ.33.81 லட்சத்திற்கான காசோலைகளை மேயர் வழங்கினார்.