தினமணி 20.08.2010
வரிகளை வசூலிக்க நடமாடும் வாகனம்
திருநெல்வேலி, ஆக. 19:திருநெல்வேலியில் நடமாடும் வாகனம் மூலம் தீவிர வரி சூல் நடைபெற்று வருகிறது.
இதுகுறித்து மாநகராட்சி சார்பில் வியாழக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
நடப்பு வரிகளை வசூலிக்கும் நடவடிக்கைகளை மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்டுள்ளது. இதன்ஒரு பகுதியாக நடமாடும் வரிவசூல் வாகனம் இதற்காகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
பொதுமக்கள் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரி இனங்களை அருகில் உள்ள வார்டு அலுவலகங்களில் மற்றும் அலகு அலுவலகங்களிலும் செலுத்தலாம். நடமாடும் வாகனம் ஆக. 21 முதல் 31ஆம் தேதி வரை வரிவசூலில் ஈடுபடுத்தப்படும்.
பொதுமக்கள் வரியை செலுத்தி குடிநீர் துண்டிப்பு உள்ளிட்ட சட்டப்பூர்வ நடவடிக்கைகளை தவிர்க்கலாம் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.