தினமணி 10.09.2009
செல்போன் மூலம் சொத்து வரி செலுத்தலாம்!
சென்னை, செப்.9: செல்போன் மூலம் மாநகராட்சி சொத்து வரிகளை இனி செலுத்தலாம்'' என மேயர் மா. சுப்பிரமணியன் புதன்கிழமை அறிவித்தார்.
சென்னை மாநகராட்சியில் இந்த ஆண்டு ரூ. 375 கோடி சொத்து வரி வசூல் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. செல்போன் மூலம் சொத்து வரி செலுத்தும் புதிய திட்டம் முதன்முறையாக சென்னையில் புதன்கிழமை அறிமுகம் செய்து வைக்கப்பட்டது.
இத் திட்டத்தை புதன்கிழமை தொடங்கிவைத்து மேயர் மா. சுப்பிரமணியன் பேசியது:
அயனாவரம் மண்டலம்-4 அலுவலகத்தில் சொத்து வரி செலுத்தும் இயந்திரம் சில ஆண்டுகளுக்கு முன் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது. அடையாறு மண்டலத்தில் ஆன்-லைன் மூலம் சொத்து வரி செலுத்தும் முறை நடைமுறைப்படுத்தப்பட்டது.
இந்நிலையில் தற்போது இந்தியாவிலேயே முதன்முறையாக செல்போன் மூலம் சொத்து வரி செலுத்தும் வசதி அறிமுகம் செய்து வைக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற பல்வேறு நவீன வசதிகள் மூலம் 2006-07-ம் ஆண்டில் ரூ. 231.94 கோடியாக இருந்த சொத்து வரி வசூல், 2007-08-ம் ஆண்டில் ரூ. 291.26 கோடியாக உயர்ந்தது. 2008-09-ம் ஆண்டில் ரூ. 323.80 கோடியாக உயர்ந்தது. இந்த ஆண்டு ரூ. 375 கோடி சொத்து வரி வசூல் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றார்.
ஜி.பி.ஆர்.எஸ். வசதி உள்ளவர்கள்... ஜி.பி.ஆர்.எஸ். வசதி உள்ள செல்போன் வைத்துள்ளவர்கள் மட்டுமே இந்த புதியத் திட்டத்தை பயன்படுத்தி சொத்து வரியை செலுத்த முடியும்.
ய்ஞ்ல்ஹஹ் என டைப் செய்து 56767 என்ற எண்ணுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பி, பெயர், முகவரி, மின் அஞ்சல் முகவரி ஆகியவற்றை முதல் முறை பதிவு செய்து கொள்ளவேண்டும்.
பின்னர் சொத்து வரி விவரங்களை பதிவு செய்து, கிரெடிட் கார்டு அல்லது டெபிட் கார்டு மூலம் வரியை செலுத்தி, பரிமாற்ற குறியீட்டை (பழ்ஹய்ள்ஹஸ்ரீற்ண்ர்ய் ஐஈ) பெற்றுக் கொள்ளலாம். இந்த முறையில் பணம் செலுத்தியவர்களுக்கு இ-மெயில் மூலமும் பின்னர் தபால் மூலமும் வரி செலுத்தியதற்கான ரசீது அனுப்பப்படும். எந்த செல்போன் சேவையை வைத்திருப்பவர்களும், இந்த புதிய வசதி மூலம் வரி செலுத்தலாம்.