Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

பொதுமக்கள் வசதிக்கு ஏற்ப கணினி மையம் : மாநகராட்சி

Print PDF

தினமணி 24.12.2009

பொதுமக்கள் வசதிக்கு ஏற்ப கணினி மையம் : மாநகராட்சி

திருப்பூர்,டிச.23: திருப்பூர் மாநகராட்சியில் பொதுமக்கள் வசதிக்கு ஏற்ப வரி செலுத்த 6 இடங்களில் கணினி மையம் அமைக்கப்பட்டுள்ளது.

திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியைச்சேர்ந்த பொதுமக்கள் சொத்துவரி, தண்ணீர் கட்டணத்தை மாநகராட்சியில் செலுத்தி வந்தனர். அனைவரும் ஒரே இடத்தில் செலுத்த நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. இதனை கருத்திற்கொண்ட மாநகராட்சி நிர்வாகம். பொதுமக்கள் வசதிகேற்ப அந்தந்த பகுதியில் வரிவசூல் செய்ய 6 இடங்களில் கணினி மையம் திறக்க முடிவு செய்யப்பட்டன.

இதனைதொடர்ந்து புதன்கிழமை ராயபுரம், பூச்சக்காடு பகுதியில் உள்ள நீர்த்தேக்க தொட்டி வளாகத்தில் வரிகளை செலுத்த கணினிமையம் அமைக்கப்பட்டு திறக்கப்பட்டன.

மேலும், அவினாசி சாலை பாரதியார் நீர்த்தேக்க தொட்டி வளாகம், என்.ஆர்.கே புரம் நீர்த்தேக்கத்தொட்டி, பெரிச்சிபாளையம் நீர்த்தேக்கத்தொட்டி, தாராபுரம்

சாலையிலுள்ள நீர்த்தேக்க தொட்டி வளாகம் உள்ளிட்ட பகுதிகளில் வரி செலுத்துவதற்காக கணினி மையம் வியாழக்கிழமை திறக்கப்படவுள்ளன.

இது குறித்து மாநராட்சி ஆணையாளர் ஆர்.ஜெயலட்சுமி கூறியது: பொதுமக்கள் வசதிகாக அமைக்கப்பட்டுள்ள கணினி மையத்தை பயன்படுத்தி காலை 10 மணி முதல் மாலை 4 மணிவரை வரி செலுத்தலாம். மாநகராட்சி அலுவலகத்திலும் காலை 10 மணி முதல் மாலை 5 மணிவரை வரிசெலுத்தலாம் என்றார்.

Last Updated on Thursday, 24 December 2009 10:21