Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

வீட்டு,குடிநீர் வரி செலுத்த மிஷின்

Print PDF

தினமலர் 20.04.2010

வீட்டு,குடிநீர் வரி செலுத்த மிஷின்

திண்டுக்கல் : ண்டுக்கல் நகராட்சியில் வீட்டுவரி, சொத்துவரி, குடிநீர் வரி, கடை வரி செலுத்துவதற்கு ஏ.டி.எம்., மையம் போன்று பில்லிங் மிஷின் அமைக்கப்பட்டுள் ளது. இதில் பணத்தை செலுத்தி ரசீதை பெற்றுக் கொள்ளலாம்.இந்த மிஷினில் பயனாளிகள் தங்களுக்கு கொடுக் கப்பட்ட வரி விதிப்பு எண்ணை பதிவு செய்ய வேண்டும். பின்பு டச் ஸ்கிரின் மூலம் நிலுவையில் உள்ள வரி பாக்கி, செலுத் திய நாள், ஆண்டு, முழு முகவரியும் வரும். அங்குள்ள பாக்சில் பணத்தை செலுத்தினால், உடனடியாக இதற்கு ரசீதும், இன்னும் செலுத்த வேண்டிய நிலுவை வரி பாக்கியும் உடனடியாக ரசீதுடன் வரும்.

நகராட்சி கமிஷனர் லட்சுமி கூறியதாவது:

திண்டுக்கல் நகராட்சியில் தற்போது ஏ.டி.எம். மிஷின் மாதிரி வரி செலுத் தும் மிஷின் அமைக்கப் பட்டுள்ளது.இந்த மிஷின் தற்போது காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்படும். இதனால் பொதுமக்கள் வரிகளை உடனடியாக செலுத்தி ரசீது பெறுவதற்கு இந்த வசதி செய்யப் பட்டுள்ளது. இந்த மிஷின் வருகையால் பொதுமக்கள் யாரும் அலுவலர்கள் முன்பு காத்திருக்க வேண் டிய அவசியமில்லை. இதற்கு தனியாக அறை அமைக்கப்பட்ட பின்பு 24 மணிநேரமும் செயல்படும் வகையில் அமைக்கப்படும். இவ் வாறு அவர் கூறினார்.

Last Updated on Tuesday, 20 April 2010 07:15