தினமலர் 26.04.2010
ஆன்-லைனில் வரி செலுத்தும் வசதி துவக்கம்
ப.வேலூர்: ப.வேலூர் டவுன் பஞ்சாயத்தில், ஆன்-லைன் மூலம் சொத்து வரி செலுத்தும் வசதி துவக்க விழா நடந்தது.டவுன் பஞ்சாயத்து சேர்மன் மணிமாரப்பன் தலைமை வகித்தார். செயல் அலுவலர் குருராஜன், கவுன்சிலர் ராமகிருஷ்ணன், துணை சேர்மன் சிவக்குமார், துப்புரவு ஆய்வாளர் சதீஷ்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.ஆன்லைன் வசதியை பயன்படுத்தி, டவுன் பஞ்சாயத்துக்கு உட்பட்ட மக்கள் நிர்வாகத்துக்கு செலுத்த வேண்டிய வரியை எங்கிருந்து வேண்டுமானாலும் செலுத்தலாம்.