Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

வரி வசூல் மையம் துவக்கம்

Print PDF

தினமலர் 26.04.2010

வரி வசூல் மையம் துவக்கம்

திருப்போரூர் : திருப்போரூர் பேரூராட்சியில் வரி வசூல் கணினி மையம் துவக்கப்பட்டுள்ளது. திருப்போரூர் பேரூராட்சியில் குடிநீர் வரி, சொத்துவரி, தொழில்வரி ஆகியவற்றை பேரூராட்சி ஊழியர்கள் நேரில் சென்று வசூலித்து ரசீது கொடுத்து வந்தனர். பொதுமக்கள் சிலர் பேரூராட்சி அலுவலகத்திற்கு வந்து வரி செலுத்தி, ரசீது பெற்று சென்றனர். இந்நிலையில், தற்போது பேரூராட்சி அலுவலகத்தில் வரி வசூலிப்பிற்கான கணினி மையம் ஏற்படுத்தப்பட்டு திறப்பு விழா நடந்தது. பேரூராட்சி தலைவர் செல்வி தலைமை தாங்கினார். துணைத் தலைவர் பாலசுப்பிரமணியன் முன் னிலை வகித்தார். காஞ்சிபுரம் பேரூராட்சிகள் உதவி இயக்குனர் சுந்தரம் மையத்தை துவக்கி வைத் தார். செயல் அலுவலர் கேசவன் நன்றி கூறினார்.

Last Updated on Tuesday, 27 April 2010 07:32