Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - E-Governance

பட்ஜெட்டில் அறிவிப்பு பெங்களூர் மாநகராட்சி கம்ப்யூட்டர் மயமாகிறது

Print PDF

தினகரன் 31.08.2010

பட்ஜெட்டில் அறிவிப்பு பெங்களூர் மாநகராட்சி கம்ப்யூட்டர் மயமாகிறது

பெங்களூர், ஆக.31: பெங்களூர் மாநகராட்சியில் பிறப்பு,இறப்பு சான்றிதழ்களை ஆன்லைனில் பெறும் வசதி அறிமுகப்படுத்தப்படவுள்ளது. மாநகராட்சி பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டதாவது: மாநகராட்சி மூலம் மக்களுக்கு சிறப்பான சேவை வழங்கும் நோக்கத்தில் பிறப்பு&இறப்பு சான்றிதழ்களை ஆன்லைன் மூலம் பெறும் வசதி செய்யப்படும். ஆன்லைனில் விண்ணப்பம் செய்வோருக்கு அஞ்சல் மூலம் சான்றிதழ் அனுப்பி வைக்கப்படும். இதன் மூலம் பொதுமக்கள் மாநகராட்சி அலுவலகம் வந்து செல்வது தவிர்க்கப்படும். மாநகரில் உள்ள அனைத்து வார்டுகளில் 15 நாளுக்கு ஒருமுறை மக்கள் குறைகேட்டு நிகழ்ச்சியை கவுன்சிலர்கள் நடத்த வேண்டும். அதேபோல் மேயர், துணைமேயர் ஆகியோர் 15 நாளுக்கு ஒருமுறை சட்டப்பேரவை தொகுதிகளில் மக்கள் குறைகேட்டு நிகழ்ச்சியில் பங்கேற்கும் திட்டம் செயல்படுத்தப்படும்.

மக்கள் குறைகேட்கும் நிகழ்ச்சியில் வைக்கப்படும் கோரிக்கைகளை நிறைவேற்ற மாநகராட்சி தலைமை அலுவலகத்தில் தனி அறை திறக்கப்படும். மேலும் மாநகராட்சியில் பணியாற்றும் அதிகாரி, ஊழியர்கள் வருகையை கண்காணிக்க பயோ மெட்ரிக் வருகை பதிவேடு அமைக்கப்படும். மாநகராட்சியின் சட்டத்துறையை பலப்படுத்தும் நோக்கத்தில் திறமையாக செயல்படும் வழக்கறிஞர்களை கூடுதலாக நியமனம் செய்யப்படும். மாநகராட்சி மூலம் வளர்ச்சி திட்டங்கள் செயல்படுத்த விடப்படும் டெண்டர் வெளிப்படையாக இருக்கும் வகையில் புதிய கொள்கை அமல்படுத்தப்படும். மாநகராட்சியின் செயல்பாட்டை வேகப்படுத்த மனிதவள மேம்பாட்டு பிரிவு அமைக்கப்படும்.

மாநகராட்சியின் செயல்பாடுகள் வெளிப்படையாக இருக்கும் வகையில் கம்ப்யூட்டர் மயமாக்கப்படும். கடந்த 2008 ஏப்ரல் 1ம் தேதி முதல் தற்போது வரை மாநகராட்சி மூலம் செயல்படுத்தி வரும் வளர்ச்சி திட்டங்கள் தொடர்பாக விவரங்கள் கம்ப்யூட்டரில் பதிவு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து எந்த திட்டம் செயல்படுத்தினாலும், அவை அனைத்தும் கம்பியூட்டரில் பதிவு செய்யப்படும். மாநகராட்சியில் லஞ்ச&ஊழலுக்கு எதிராக வரும் புகார்களை கவனமுடன் கண்காணித்து தவறு செய்யும் அதிகாரி, ஊழியர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று பட்ஜெட் உரையில் சதாசிவா தெரிவித்தார்.

 

 

நடமாடும் வரி வசூல் வாகனங்களில் எல்லா வார்டு மக்களும் வரி செலுத்தலாம்: மாநகராட்சி ஆணையர்

Print PDF

தினமணி 27.08.2010

நடமாடும் வரி வசூல் வாகனங்களில் எல்லா வார்டு மக்களும் வரி செலுத்தலாம்: மாநகராட்சி ஆணையர்

திருச்சி, ஆக. 26: நடமாடும் கணினி வரி வசூல் வாகனங்களில் எல்லா வார்டு மக்களும் தங்களின் வரிகளைச் செலுத்தலாம் என மாநகராட்சி ஆணையர் த.தி. பால்சாமி அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

"திருச்சி மாநகராட்சிப் பகுதியில் பொதுமக்களின் நலன் கருதி, வரி வசூல் பணியை விரைவுபடுத்தும் நோக்குடன், நடமாடும் கணினி வரி வசூல் வாகனம் மூலம் வரி வசூலிக்கும் பணி கடந்த 15-ம் தேதி தொடங்கப்பட்டது.

ஒவ்வொரு மாதமும் முதல் வாரத்தில் ஸ்ரீரங்கம் கோட்டம், இரண்டாம் வாரம் அரியமங்கலம் கோட்டம், மூன்றாம் வாரம் பொன்மலைக் கோட்டம், நான்காம் வாரம் கோ-அபிஷேகபுரம் கோட்டம் என்ற சுழற்சி முறையில் வரி வசூலிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இதுவரை, அந்தந்தப் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் மட்டுமே வரி செலுத்தலாம் என அறிவிக்கப்பட்டு, வசூலிக்கப்பட்டும் வந்தது. தற்போது, அந்த வார்டு மக்கள் மட்டுமல்லாமல், அனைத்து வார்டு மக்களும் நடமாடும் வாகனங்களில் வரிகளைச் செலுத்தலாம்.

 

நடமாடும் வரி வசூல் வாகனத்தில் எல்லா வார்டு மக்களும் வரி செலுத்த ஏற்பாடு

Print PDF

தினகரன் 27.08.2010

நடமாடும் வரி வசூல் வாகனத்தில் எல்லா வார்டு மக்களும் வரி செலுத்த ஏற்பாடு

திருச்சி, ஆக 27: நடமாடும் வரி வசூல் வாகனத்தில் அனைத்து வார்டு மக்களும் வரி செலுத்தலாம் என்று மாநகராட்சி கமிஷனர் பால்சாமி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு:

திருச்சி மாநகராட்சியில் தற்போது வரி வசூல் பணியினை துரிதப்படுத்தும் நோக்கத்துடனும், பொதுமக்களின் வசதியினை கருத்தில் கொண்டு நடமாடும் கணினி வரி வசூல் வாகனம் கடந்த 15ம் தேதி முதல் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த வாகனத்தின் மூலம் வரி மற்றும் வரியில்லா இதர இனங்களின் வசூல் பணி திருச்சி மாநகராட்சி நிர்வாகம் சார்பில் மேற்கொள்ளப்படுகிறது.

இந்த வாகனம் மாதந்தோறும் முதல் வாரத்தில் ஸ்ரீரங்கம் கோட்டத்திலும், 2வது வாரத்தில் அரியமங்கலம் கோட்டத்திலும், 3வது வாரத்தில் பொன்மலை கோட்டத்திலும், 4வது வாரத்தில் அபிஷேகபுரம் கோட்டத்திலும் சுழற்சி முறையில் வரி வசூல் செய்யப்படுகிறது.

இந்த வகையில் கடந்த 15ம் தேதி முதல் 21ம் தேதி வரை பொன்மலை கோட்டத்தில் வசூல் செய்யப்பட்டது. இதை தொடர்ந்து 23ம் தேதி முதல் அபிஷேகபுரம் கோட்டத்தில் வசூல் செய்யப்படுகிறது. 28ம் தேதி வரை இந்த கோட்டத்தில் வசூல் செய்யப்படும். மேலும் இந்த நடமாடும் வரி வசூல் வாகனம் செல்லும் வார்டு பகுதிகளை சேர்ந்தவர்கள் மட்டுமின்றி அனைத்து வார்டு மக்களும் வரி செலுத்தலாம். இவ்வாறு அந்த செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


Page 24 of 41