Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - E-Governance

திருச்சி 55, 56, 57வது வார்டில்நடமாடும் வாகனம் மூலம் வரிவசூல்

Print PDF

தினமலர் 24.08.2010

திருச்சி 55, 56, 57வது வார்டில்நடமாடும் வாகனம் மூலம் வரிவசூல்

திருச்சி: திருச்சி மாநகராட்சியில் நடமாடும் வரி வசூல் வாகனம் இன்று 55, 56, 57 ஆகிய வார்டுக்கு சென்று வசூலில் ஈடுபடுகிறது.திருச்சி மாநகராட்சியில் வரிவசூல் பணியை துரிதப்படுத்தும் நோக்கத்துடன், பொதுமக்கள் வசதிக்காக நடமாடும் கம்ப்யூட்டர் வரிவசூல் மையம் வாகனம் மூலம் வரி, வரியில்லா இனங்கள் வசூல் பணி கடந்த ஆக., 15ம் தேதி துவங்கப்பட்டது. 21ம் தேதி வரை பொன்மலை கோட்டத்தில் வரி வசூலிக்கப்பட்டது.இதைத் தொடர்ந்து வரும் 23ம் தேதி (இன்று) முதல் 28ம் தேதி வரை கோ.அபிஷேகபுரம் கோட்டத்தில் வரி வசூலிக்கப்பட உள்ளது. வாகனம் வரும் தேதி, நிற்கும் இடம், வார்டு, நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது.இன்று (25ம் தேதி): 55வது வார்டில் காலை 10 - 11 மணி வரை குறத்தெரு சந்திப்பிலும், காலை 11 - 11.30 வரை பாளையம்பஜார் விக்னேஷ் அப்பார்ட்மென்ட் அருகில் நிற்கும்.56வது வார்டில் காலை 11.30 - 12.30 மணி வரை தில்லைநகர் 1, 5, 10 குறுக்குச்சாலையிலும், மதியம் 12.30 - 1 மணி வரை தில்லைநகர் மெயின்ரோட்டிலும், மதியம் 1 - 2 மணி வரை சாஸ்திரிசாலையிலும் வாகனம் நிற்கும்.57வது வார்டில் 2 - 3 மணி வரை திருச்சி டவர் சாலை ரோடு, எம்..எம்., அப்பார்ட்மென்ட் அருகிலும், மதியம் 3 - 3.30 மணி வரை விக்னேஷ் எம்பயர் (சாலைரோடு) அருகிலும், மாலை 3.30 - 4 மணி வரை சாலைரோடு, ருக்மணி தியேட்டர் அருகிலும், மாலை 4 - 4.30 மணி வரை பாலாஜி அப்பார்ட்மென்ட் சிவசக்தி கங்கா, யமுனா, காவிரி இமேஜ் அருகிலும், மாலை 4.30 - 5 மணி வரை விக்னேஷ் பிளாசா அருகிலும் வரி வசூல் வாகனம் நிற்கும். வரி செலுத்துவோர் நடமாடும் வரி வசூல் மையத்தில் வரியை செலுத்தலாம்.

 

வரிகளை வசூலிக்க நடமாடும் வாகனம்

Print PDF

தினமணி 20.08.2010

வரிகளை வசூலிக்க நடமாடும் வாகனம்

திருநெல்வேலி, ஆக. 19:திருநெல்வேலியில் நடமாடும் வாகனம் மூலம் தீவிர வரி சூல் நடைபெற்று வருகிறது.

இதுகுறித்து மாநகராட்சி சார்பில் வியாழக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

நடப்பு வரிகளை வசூலிக்கும் நடவடிக்கைகளை மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்டுள்ளது. இதன்ஒரு பகுதியாக நடமாடும் வரிவசூல் வாகனம் இதற்காகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

பொதுமக்கள் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரி இனங்களை அருகில் உள்ள வார்டு அலுவலகங்களில் மற்றும் அலகு அலுவலகங்களிலும் செலுத்தலாம். நடமாடும் வாகனம் ஆக. 21 முதல் 31ஆம் தேதி வரை வரிவசூலில் ஈடுபடுத்தப்படும்.

பொதுமக்கள் வரியை செலுத்தி குடிநீர் துண்டிப்பு உள்ளிட்ட சட்டப்பூர்வ நடவடிக்கைகளை தவிர்க்கலாம் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

 

நடமாடும் கம்ப்யூட்டர் வரி வசூல் வாகனம்

Print PDF

தினமலர் 18.08.2010

நடமாடும் கம்ப்யூட்டர் வரி வசூல் வாகனம்

திருச்சி: திருச்சி மாநகராட்சியில் "நடமாடும் கம்ப்யூட்டர் வரி வசூல் மையம்' வாகனம் நிற்கும் இடம், தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

திருச்சி மாநகராட்சி சார்பில், "நடமாடும் கம்ப்யூட்டர் வரி வசூல் மையம்' வாகனம் உருவாக்கப்பட்டது. வரிவசூலில் ஏற்படும் தாமதத்தை தவிர்க்கும் வகையில் இந்த சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.கடந்த 2008-09ம் ஆண்டு பொதுநிதியிலிருந்து 7.45 லட்சம் ரூபாய் செலவில் பழைய வாகனத்தை புதுப்பித்து, இரண்டு கம்ப்யூட்டர், பிரிண்டர் இடம்பெற்றுள்ளது. நவீன "3ஜி' வசதியுடன் வலைதள இணைப்புள்ளது. ஜெனரேட்டர், யு.பி.எஸ்., மற்றும் ஒலிபெருக்கி வசதி செய்யப்பட்டுள்ளது.மாதந்தோறும் முதல் வாரம் ஸ்ரீரங்கம், இரண்டாவது வாரம் அரியமங்கலம், மூன்றாவது வாரம் பொன்மலை, நான்காவது வாரம் கோ.அபிஷேகபுரம் என நான்கு கோட்டத்துக்குட்பட்ட பகுதிகளில் நடமாடும் கம்ப்யூட்டர் வரி வசூல் வகனம் வலம் வரும். வங்கி பணியாளர் வரிவசூல் பணி மேற்கொள்ளப்படுகிறது.

நடப்பு மாதம் மூன்றாவது வாரம் என்பதால், பொன்மலை கோட்டத்தில் திங்கள் கிழமை முதல் சனி கிழமை வரை வரி வசூல் பணி மேற்கொள்ளப்பட உள்ளது. இதற்கான வார்டு, இடம், தேதி, நேரம் அறிவிக்கப்பட்டுள்ளன. வரிவிதிப்புதாரர்கள் அந்தந்த தேதியில் நடமாடும் கம்ப்யூட்டர் வரிவசூல் வாகனத்திலேயே வரியை செலுத்தலாம். அதன் விவரம் வருமாறு (அடைப்புக்குறியில் வாகனம் நிற்கும் நேரம்):இன்று 18ம் தேதி 35 (10 - 1), 37 (1 - 5) ஆகிய வார்டுகளில் ஜெ.கே.,நகர், வயர்லெஸ் ரோடு (திலகவதி மளிகை கடை எதிரே) நிற்கும். 19ம் தேதி 38 (10 - 1), 42 (1 - 5) வார்டுகளில் சாத்தனூர் மெயின் ரோடு (தேவி திருமண மண்டபம் அருகில்), சுந்தர் நகர் ஆகிய இடங்களில் நிற்கும். 20ம் தேதி 39வது வார்டில் பட்டி மெயின்ரோடு (கே.ஆர்.எஸ்.,நகர்) (10 - 1), பஞ்சப்பூர் மாநகராட்சி பள்ளி (1 - 5) ஆகிய இடங்களில் நிற்கும். 21ம் தேதி 44 (10 - 11.30), 46 (11.30 - 1), 47 (1 - 2.30), 48 (2.30 - 5) கீழப்பள்ளத்தெரு (செடல் மாரியம்மன் கோவில் எதிரில்), ராஜா காலனி, கான்வென்ட் ரோடு ஆகிய இடங்களில் நிற்கும். அந்தந்த பகுதி மக்கள் குறிப்பிட்ட நேரத்துக்குள் சென்று நடமாடும் கம்ப்யூட்டர் வரி வசூல் வாகனத்தில் வரி செலுத்தி, உரிய ரசீது பெற்றுச் செல்லலாம்.

 


Page 25 of 41