Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - E-Governance

திருச்சியில் நடமாடும் கணினி வரி வசூல் வாகனம்

Print PDF

தினமணி 17.08.2010

திருச்சியில் நடமாடும் கணினி வரி வசூல் வாகனம்

திருச்சி, ஆக. 16: திருச்சி மாநகராட்சியின் பொது நிதியிலிருந்து |ரூ 7.45 லட்சத்தில் பழைய வாகனத்தைப் புதுப்பித்து, இந்த நடமாடும் கணினி வரி வசூல் மையம் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் இரு கணினிகள், பிரிண்டர்கள் உள்ளன. நவீன 3ஜி வசதியுடனான இணையதள இணைப்பு பெறப்பட்டுள்ளது.

மேலும், ஜெனரேட்டர், தடையில்லா மின்சாரம் வழங்கும் கருவி ஆகியவை பொருத்தப்பட்டுள்ளன. பொதுமக்களுக்கு அறிவிக்கும் வகையில் ஒலிபெருக்கி வசதியும் செய்யப்பட்டுள்ளது.

ஒவ்வொரு மாதமும் முதல் வாரம் ஸ்ரீரங்கம் கோட்டம், இரண்டாவது வாரம் அரியமங்கலம் கோட்டம், மூன்றாவது வாரம் பொன்மலைக் கோட்டம், நான்காவது வாரம் கோ-அபிஷேகபுரம் கோட்டத்துக்கு உள்பட்ட பகுதிகளில் வரி வசூல் வாகனம் மூலம் வரி வசூலிக்கும் பணி மேற்கொள்ளப்படும்.

இந்த வாகனப் பணியை ஞாயிற்றுக்கிழமை மேயர் எஸ். சுஜாதா தொடங்கிவைத்தார். நிகழ்ச்சியில் ஆணையர் த.தி. பால்சாமி, துணை மேயர் மு. அன்பழகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

முதல் நாளில் | ரூ12,619 வசூல்: இந்நிலையில், பொன்மலைக் கோட்டத்தில் நடமாடும் கணினி வரி வசூல் வாகனத்தின் மூலம் வரி வசூலிக்கும் பணி திங்கள்கிழமை தொடங்கியது. காலை 10 மணி முதல் பகல் 12 மணி வரை 30-வது வார்டு விவேகானந்த நகரிலும், பகல் 12 மணி முதல் பிற்பகல் 2 மணி வரையிலும் 31-வது வார்டு பொன்னேரிபுரத்திலும், பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை 36-வது வார்டு அடைக்கல மாதா கோவில் தெருவிலும் வரி வசூல் நடைபெற்றது. முதல் நாளில் ரூ|12,619 வசூலானது.

இந்த வாரம்...: செவ்வாய்க்கிழமை: காலை- 34-வது வார்டு என்.எம்.கே. காலனி (டோல்கேட்), பிற்பகல்- 43-வது வார்டு இலுப்பூர் கல்லுக்குழி.

புதன்கிழமை: முற்பகல்- 35-வது வார்டு ஜெ.கே. நகர், பிற்பகல்- 37-வது வார்டு வயர்லெஸ் ரோடு. வியாழக்கிழமை: முற்பகல் 38-வது வார்டு- சாத்தனூர் மெயின் ரோடு, பிற்பகல்- 42-வது வார்டு சுந்தர்நகர்.

வெள்ளிக்கிழமை: முற்பகல்- 39-வது வார்டு எடமலைப்பட்டி மெயின்ரோடு, கேஆர்எஸ் நகர், பிற்பகல்- பஞ்சப்பூர் மாநகராட்சி பள்ளி அருகில். சனிக்கிழமை: காலை 10 மணிக்கு 44-வது வார்டு கீழ பள்ளத்தெரு (செடல் மாரியம்மன் கோயில் எதிரில்), பகல் 1 மணிக்கு 47-வது வார்டு ராஜா காலனி, பிற்பகல் 2.30 மணிக்கு 48-வது வார்டு கான்வென்ட் ரோடு.

 

சுதந்திர தின விழாவில் நடமாடும் வரிவசூல்வாகனம் துவக்கம்

Print PDF

தினமலர் 16.08.2010

சுதந்திர தின விழாவில் நடமாடும் வரிவசூல்வாகனம் துவக்கம்

திருச்சி: திருச்சி மாநகராட்சி அலுவலக வளாகத்தில் நேற்று சுதந்திரதினவிழாவில் "நடமாடும் கம்ப்யூட்டர் வரிவசூல் மையம்' வாகனம் துவக்கி வைக்கப்பட்டது.மாநகராட்சியில் மேயர் சுஜாதா தேசிய கொடியேற்றினார். எஸ்.எஸ்.எல்.சி., ப்ளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற கவுன்சிலர்கள் செந்தில்நாதன் மகள் பவித்ரா, ரங்கா மகள் சிந்துரா, ஜெயபாரதி மகள் ஜெனட்ரம்யா, சத்தியமூர்த்தி மகள் சவுமியா ஆகியோருக்கு பரிசு வழங்கப்பட்டது.மாநகராட்சியில் 25 ஆண்டு மாசற்ற முறையில் பணியாற்றிய நகர பொறியாளர் ராஜாமுகமது, உதவி செயற்பொறியாளர் கண்ணன், உதவி வருவாய் அலுவலர் சுப்பிரமணியன், பொது சுகாதார துறை உதவியாளர் சுகுமார், அரிமங்கலம் கோட்ட மின்கம்பியாளர்கள் அன்பழகன், ராமச்சந்திரன், செயல்திறன் பணியாளர் சங்கர்ராவ், துப்புரவு பணியாளர் ரங்காயி ஆகியோருக்கு பாராட்டுச் சான்று வழங்கப்பட்டது."நடமாடும் கம்ப்யூட்டர் வரிவசூல் மையம்' வாகனத்தை மேயர் சுஜாதா துவக்கி வைத்தார். துணைமேயர் அன்பழகன், கமிஷனர் பால்சாமி, கவுன்சிலர்கள் பங்கேற்றனர். அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள காந்தி அஸ்திக்கு மேயர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

 

சென்னை மாநகராட்சி திட்டம்: ஏ.டி.எம். கார்டு மூலம் சொத்து வரி செலுத்தும் முறை

Print PDF

மாலை மலர் 04.08.2010

சென்னை மாநகராட்சி திட்டம்: .டி.எம். கார்டு மூலம் சொத்து வரி செலுத்தும் முறை

சென்னை மாநகராட்சி திட்டம்:
 
 ஏ.டி.எம். கார்டு மூலம்
 
 சொத்து வரி செலுத்தும் முறை

சென்னை, ஆக. 4- சென்னை மாநகராட்சிக்கு சொத்து வரி செலுத்துவோர் மண்டல அலுவலகங்களில் தற்போது செலுத்தி வருகிறார்கள். சொத்து வரி செலுத்தாதவர்களின் வீடுகளுக்கும் சென்று அதிகாரிகள் வசூலித்து வருகிறார்கள்.

இனி ஸ்டேட் பாங்கியில் ஏ.டி.எம். கார்டு மூலம் சொத்துவரி செலுத்தும் திட்டம் கொண்டு வரப்படுகிறது. இது தொடர்பாக ஸ்டேட் பாங்கியின் உயர் அதிகாரிகள் சமீபத்தில் மாநகராட்சி கமிஷனர் ராஜேஷ் லக்கானியை சந்தித்து ஆலோசனை நடத்தினார்கள். அப்போது இந்த புதிய திட்டம் குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்பட்டது.

இதற்காக ஏ.டி.எம். எந்திரத்தில் தனியாக ஒருவசதி ஏற்படுத்தப்படும். சொத்துவரி செலுத்துவோர் அதை அழுத்தியதும் மண்டல அலுவலக எண், வார்டு நம்பர், பில் நம்பர், துணை நம்பர் திரையில் தோன்றும் அதன் பிறகு நாம் ஏ.டி.எம். கார்டை சொருகியதும் நமது கணக்கில் இருக்கும் பணம் சொத்து வரி கணக்கில் வரவு வைக்கப்பட்டு விடும்.

பின்னர் வரி செலுத்து வோர் அதற்கான பில்லை மாநகராட்சி இணைய தளத்தில் இருந்து டவுன் லோடு செய்து கொள்ளலாம்.

ஸ்டேட்பாங்கியில் கணக்கு வைத்திருப்பவர்கள் மட்டுமல்லாது யார் வேண்டுமானாலும் ஸ்டேட்பாங்கி மூலம் சொத்து வரி செலுத்தலாம்.

இதன் மூலம் சென்னை நகரில் வசிப்பவர்களுக்கு சொத்து வரி செலுத்த பயனுள்ளதாக இருக்கும். இந்த ஆண்டே இந்த புதிய முறை செயல்படுத்தப்படும் என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

Last Updated on Thursday, 05 August 2010 11:49
 


Page 26 of 41