தினமணி 24.05.2010
மேட்டுப்பாளையம் சாலை நவீன பஸ் நிலைய பணி
கோவை, மே 23: நவீன முறையில் கட்டப்பட்டு வரும் மேட்டுப்பாளையம் சாலை பஸ் நிலையத்தை தமிழக துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை பார்வையிட்டார்.
÷மேட்டுப்பாளையம் பஸ் நிலையம் ரூ.8 கோடியில் கட்டப்பட்டு வருகிறது. ஜவஹர்லால் நேரு தேசிய புனரரமைப்புத் திட்டத்தின் கீழ் மாநகராட்சி சார்பில் இப் பஸ் நிலையம் கட்டப்பட்டு வருகிறது. இந்த பஸ் நிலையத்தை ஸ்டாலின் பார்வையிட்டு ஆலோசனை வழங்கினார்.
÷இரண்டு தளங்கள் கொண்ட இந்த பஸ் நிலையத்தில் குளிரூட்டப்பட்ட பயணிகள் அமரும் அறைகள், பாலூட்டும் தாய்மார்களுக்கான தனி அறை, அலுவலக அறைகள் உள்ளிட்டவற்றை அவர் பார்வையிட்டார்.÷பஸ் நிலைய பணிகள் ஜூன் முதல் வாரத்தில் முடிவடைந்துவிடும் என்றும் அவர் தெரிவித்தார்.
ஆய்வின்போது ஊரகத் தொழில்துறை அமைச்சர் பொங்கலூர் நா.பழனிச்சாமி, கோவை மேயர் ஆர்.வெங்கடாசலம், நகராட்சி நிர்வாக ஆணையர் நிரஞ்சன் மார்டி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளின் இயக்குநர் செந்தில், மாவட்ட ஆட்சியர் பி.உமாநாத், மாநகராட்சி ஆணையர் அன்சுல் மிஸ்ரா உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.