Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

பேரூராட்சி பஸ் ஸ்டாண்ட்களில் சிமென்ட் ஓடுதளம் அமைக்க ரூ.3.50 கோடி நிதி விடுவிப்பு

Print PDF

தினகரன் 02.06.2010

பேரூராட்சி பஸ் ஸ்டாண்ட்களில் சிமென்ட் ஓடுதளம் அமைக்க ரூ.3.50 கோடி நிதி விடுவிப்பு

சிவகங்கை, ஜூன் 2: தமிழகத்தில் பெரும்பாலான பேரூராட்சிகளில் உள்ள பஸ் ஸ்டாண்ட் மிகவும் மோசமாக உள்ளதால், மழை காலங்களில் மக்கள் பெரிதும் சிரமம் அடைகின்றனர். மிகவும் மோசமாக உள்ள 22 பேரூராட்சி பஸ் ஸ்டாண்ட்களில் சிமெண்ட் ஓடுதளம் அமைக்க ரூ.3.50 கோடி விடுவிக்கவேண்டுமென அரசுக்கு பேரூராட்சி நிர்வாக இயக்குநர் கருத்துரு அனுப்பினார்.

இதையடுத்து 2010&11ம் ஆண்டிற்கான பகுதி&2 திட்டத்தின் கீழ் ரூ.3.50 கோடியை விடுவித்து நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலர் நிரஞ்சன்மார்டி உத்தரவிட்டார்.

பயன்பெறும் பேரூராட்சிகளின் விவரம்:

திருவண்ணாமலை&செங்கம், சேலம்& மேச்சேரி, சங்ககிரி, கொளத்தூர், இடங்கணாசாலை, நாமக்கல்&மல்லசமுத்திரம், தர்மபுரி&பொ.மல்லபுரம், பெண்ணகரம், கடலூர்&திட்டக்குடி, ஸ்ரீமுஸ்ணம், நீலகிரி&கோத்தகிரி, ஈரோடு&கொடுமுடி, திருப்பூர்&முத்தூர், திருச்சி&தாத்தையங்கார்பேட்டை, காட்டுபுத்தூர், புதுக்கோட்டை&கீரனூர், மதுரை&டி.கல்லுப்பட்டி, தேனி&உத்தமபாளையம், திண்டுக்கல்&ஒட்டன்சத்திரம் (வெளியூர் பஸ்நிலையம்), தூத்துக்குடி&நாசரேத், கயத்தாறு, கழுகுமலை.