Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

நாசரேத், கயத்தாறு, கழுகுமலை பஸ்ஸ்டாண்டுகளை சீரமைக்க நிதி ஒதுக்கீடு

Print PDF

தினமலர் 03.06.2010

நாசரேத், கயத்தாறு, கழுகுமலை பஸ்ஸ்டாண்டுகளை சீரமைக்க நிதி ஒதுக்கீடு

தூத்துக்குடி: தமிழகத்தில் உள்ள 22 பேரூராட்சிகளில் உள்ள பஸ் ஸ்டாண்ட் ஓடுபாதைகளை சரி செய்ய 3 கோடியே 50 லட்சம் ரூபாயை அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த மூலம் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள நாசரேத், கயத்தாறு மற்றும் கழுகுமலை டவுன் பஞ்.,களில் உள்ள பஸ் ஸ்டாண்டுகள் 45 லட்சம் ரூபாய் நிதியில் சீர் செய்யப்படவுள்ளது.

2010-2011 டவுன் பஞ்.,கள்-பகுதி2 திட்டங்களின் கீழ் தமிழகத்தில் உள்ள 22 டவுன் பஞ்., களில் உள்ள பஸ் ஸ்டாண்ட் உட்பகுதியில் 3 கோடியே 50 லட்சம் ரூபாய் செலவில் சிமெண்ட் தளம் அமைக்க அரசின் சார்பில் நிர்வாக ஒப்பளிப்பு அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அரசு முதன்மை செயலாளர் நிரஞ்சன்மாடி வெளியிட்டுள்ள அரசாணை (2) எண்.33, தேதி28-5-2010ல் கூறியுள்ளதாவது;

டவுன் பஞ்., களின் இயக்குநர் பெரும்பான்மையான டவுன் பஞ்., களில் உள்ள பஸ் ஸ்டாண்டுகளில் உள்ள ஓடுதளங்கள் மிகவும் மோசமான நிலையில் உள்ளன எனவும், அவற்றை சரி செய்தால் பஸ்கள் மிக எளிதாக சென்று வர ஏதுவாகும் என்றும், பொதுமக்கள் குறிப்பாக மழை காலத்தில் சிரமமின்றி இப்பஸ் ஸ்டாண்டிற்குள் சென்று வர இயலும் என்பதால் 14 மாவட்டங்களில் உள்ள 22 டவுன் பஞ்., களில் உள்ள பஸ் ஸ்டாண்ட் ஓடு தளங்களை சரி செய்ய 3 கோடியே 50 லட்சம் ரூபாய் தேவை என்று கோரி இருந்தார். இதனை பரிசீலனை செய்து நிதி அளிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. 22 டவுன் பஞ்., களும் விரிவான திட்ட அறிக்கை தயாரித்து டவுன் பஞ்., மன்றத்தில் ஒப்புதல் பெற்று உடன் பகிர்ந்தளிக்குமாறு டவுன் பஞ்., இயக்குனருக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் திருவண்ணாமலை மாவட்டத்தில் செங்கம் டவுன் பஞ்.,க்கு 15 லட்சம் ரூபாய், சேலம் மாவட்டத்தில் உள்ள மேச்சேரிக்கு ரூ.15 லட்சம், சங்ககிரி-ரூ.20 லட்சம், கொளத்தூர்-ரூ.15 லட்சம், நாமக்கல் மாவட்டத்தில் உள்ள மல்லசமுத்திரம்-ரூ.15 லட்சம், தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பொ.மல்லபுரம்-ரூ.15 லட்சம், பொன்னகரம்-ரூ.15 லட்சம், வேலூர் மாவட்டத்தில் உள்ள திட்டக்குடி-ரூ.15 லட்சம், ஸ்ரீமுஷ்ணம்-ரூ.25 லட்சம், நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி-ரூ.20 லட்சம், ஈரோடு மாவட்டத்தில் உள்ள கொடுமுடி-ரூ.20 லட்சம், திருப்பூர் மாவட்டத்தில் உள்ள முத்தூர்-ரூ.20 லட்சம், திருச் சி மாவட்டத்தில் உள்ள தாத்தையங்கார்பேட் டை-ரூ.10 லட்சம், காட்டுபுத்தூர்-ரூ.15 லட்சம், புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கீரனூர்-ரூ.10 லட்சம், மதுரை மாவட்டத்தில் உள்ள டி.கல்லுப்பட்டி -ரூ.10 லட்சம், திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒட்டன்சத்திரம்- ரூ.20 லட்சம், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள நாசரேத்-ரூ.15 லட்சம், கயத்தாறு-ரூ.15 லட்சம், கழுகுமலை-ரூ.15 லட்சமும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.