Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

விழுப்புரம் நகரில் போக்குவரத்து மாற்றம் நகராட்சி கமிஷனர் சிவக்குமார் தகவல்

Print PDF

தினமலர் 10.06.2010

விழுப்புரம் நகரில் போக்குவரத்து மாற்றம் நகராட்சி கமிஷனர் சிவக்குமார் தகவல்

விழுப்புரம் : விழுப்புரத்தில் பாதாள சாக்கடை திட்ட பணி காரணமாக வரும் 14ம் தேதி முதல் சென்னை - திருச்சி சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.

இது குறித்து விழுப்புரம் நகராட்சி கமிஷனர் சிவக்குமார் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: விழுப்புரம் நகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகள் தற்போது 80 சதவீதம் முடிந்துள்ளன. சென்னை - திருச்சி நெடுஞ்சாலையில் அண்ணாதுரை சிலை முதல் காட்பாடி ரயில்வே கேட் வரை முடிக்க வேண்டிய பணிகள் வரும் 14ம் தேதி முதல் 45 தினங்களுக்கு தொடர்ந்து நடக்கவுள்ளன.

இந்த பணிகளின் போது பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் என்பதால் இந்த வழியாக கனரக வாகனங்கள் செல்ல தடை விதித்து போக்குவரத்து மாற்றம் செய்யப்பட உள்ளது. இதனால் ஏற்படும் சிரமத்தை பொதுமக்கள் பொறுத்துக் கொண்டு திட்ட பணிகளை விரைவில் முடிக்க ஒத்துழைக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு கமிஷனர் சிவக்குமார் தெரிவித்துள்ளார்.