Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மேட்டுப்பாளையம் ரோடு பஸ் ஸ்டாண்ட் கவுண்டம்பாளையம் குடிநீர் திட்டம்

Print PDF

தினகரன் 15.06.2010

மேட்டுப்பாளையம் ரோடு பஸ் ஸ்டாண்ட் கவுண்டம்பாளையம் குடிநீர் திட்டம்

கோவை, ஜூன் 15: கவுண்டம்பாளையம் குடிநீர் திட்டம், மேட்டுப்பாளையம் ரோடு பஸ் ஸ்டாண்ட் திறப்பு விழா இன்று நடக்கிறது. துணை முதல்வர் துவக்கி வைக்கிறார்.

தமிழக துணை முதல்வர் மு..ஸ்டாலின் இன்று கோவை வருகிறார். காலை 9 மணிக்கு மேட்டுப்பாளையம் ரோடு புதிய பஸ் ஸ்டாண்டை துவக்கி வைக்கிறார். இந்த பஸ் ஸ்டாண்டிற்கு உலக தமிழ் செம்மொழி மாநாடு பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதில் தமிழக ஊரக தொழில் துறை அமைச்சர் பொங்கலூர் பழனிசாமி, மேயர் வெங்கடாசலம், துணை மேயர் கார்த்திக் உட்பட பலர் கலந்து கொள்கின்றனர். புதிய பஸ் ஸ்டாண்ட், மாநகராட்சி பொது நிதி மூலமாக 7 கோடி ரூபாய் செலவில் நவீன தொழில்நுட்பத்தில் கட்டப்பட்டுள்ளது. பஸ் நிறுத்துமிடம், பயணிகள் தங்கும் கூடம், ஓய்வறை, முதியோர் தங்கும் அறை, தாய்மார் பாலூட்டும் அறை, சாய்தளம், லிப்ட், வாகன நிறுத்துமிடம் என 24 அறை அமைக்கப்பட்டுள்ளது. போலீஸ் கட்டுபாட்டு அறையும், 8 இடத்தில் நவீன ரக கேமராவும் அமைக்கப்பட்டுள்ளது.

துணை முதல்வர் இன்று துவக்குகிறார்

தமிழக துணை முதல்வர் மு..ஸ்டாலின் இன்று கோவை வருகிறார். காலை 9 மணிக்கு மேட்டுப்பாளையம் ரோடு புதிய பஸ் ஸ்டாண்டை துவக்கி வைக்கிறார். இந்த பஸ் ஸ்டாண்டிற்கு உலக தமிழ் செம்மொழி மாநாடு பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதில் தமிழக ஊரக தொழில் துறை அமைச்சர் பொங்கலூர் பழனிசாமி, மேயர் வெங்கடாசலம், துணை மேயர் கார்த்திக் உட்பட பலர் கலந்து கொள்கின்றனர். புதிய பஸ் ஸ்டாண்ட், மாநகராட்சி பொது நிதி மூலமாக 7 கோடி ரூபாய் செலவில் நவீன தொழில்நுட்பத்தில் கட்டப்பட்டுள்ளது. பஸ் நிறுத்துமிடம், பயணிகள் தங்கும் கூடம், ஓய்வறை, முதியோர் தங்கும் அறை, தாய்மார் பாலூட்டும் அறை, சாய்தளம், லிப்ட், வாகன நிறுத்துமிடம் என 24 அறை அமைக்கப்பட்டுள்ளது. போலீஸ் கட்டுபாட்டு அறையும், 8 இடத்தில் நவீன ரக கேமராவும் அமைக்கப்பட்டுள்ளது.

பயணிகள், வாகனங்கள், வந்து செல்லும் பஸ்கள் போன்றவற்றின் நடமாட்டத்தை கட்டுபாட்டு அறையிலிருந்து கண்காணிக்க முடியும். புகை காற்றை சுத்தம் செய்யும் வசதியும் செய்யப்பட்டுள்ளது. வாகன நிறுத்துமிடம், கழிப்பிடம், பஸ் ஸ்டாண்ட் பராமரிப்பு என அனைத்து பொறுப்புகளும் ஒரே ஒப்பந்த நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. பஸ் ஸ்டாண்ட் முகப்பு பகுதி வணிக வளாக தோற்றத்தில் காணப்படுகிறது. மேட்டுப்பாளையம் மார்க்கத்தில் செல்லும் அனைத்து பஸ்களும் இயக்கப்படும். ஊட்டி, கோத்தகிரி, குன்னூர், குந்தா, மேட்டுப்பாளையம், பத்ரகாளியம்மன் கோயில், காரமடை, பில்லூர், பெரியநாயக்கன்பாளையம், அன்னூர், மஞ்சூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு 200க்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்படும். காந்திபுரம், உக்கடம், சிங்காநல்லூர் பஸ் ஸ்டாண்ட்களிலிருந்து சுற்று பஸ்களும் இயக்கப்படும். காந்திபுரத்திலிருந்து மேட்டுப்பாளையம் மார்க்கத்தில் இயங்கிய பெரும்பாலான மேட்டுப்பாளையம் ரோடு... பஸ்கள் இனி, மேட்டுப்பாளையம் பஸ் ஸ்டாண்டிலிருந்து இயக்கப்படும்.

பஸ் ஸ்டாண்ட் திறப்பு விழாவை தொடர்ந்து, துணை முதல்வர் ஸ்டாலின், கவுண்டம்பாளையம் வடவள்ளி கூட்டு குடிநீர் திட்டத்தை துவக்கி வைக்கிறார்.

30.18 கோடி ரூபாய் செலவில் பவானி ஆற்றின் நீராதாரத்தில் இந்த குடிநீர் திட்டம் மேற்கொள்ளப்பட்டது. விரைவாக முடிக்கப்பட்ட, இந்த குடிநீர் திட்டம் இன்று பயன்பாட்டிற்கு வரவுள்ளது. பவானி ஆற்றிலிருந்து 37 கி.மீ தூரம், 600 மி.மீ விட்டம் கொண்ட குழாய் குடிநீர் கொண்டு வரப்படவுள்ளது. தினமும் 1.1 கோடி லிட்டர் குடிநீர் பெறப்படவுள்ளது.

கவுண்டம்பாளையம், வடவள்ளி பகுதியில் கூட்டு குடிநீர் கனவு பல ஆண்டுகளுக்கு பிறகு நிறைவேறவுள்ளது. இதர வழியோர கிராமங்கள் இந்த குடிநீர் திட்டத்தில் சேர்க்கப்படவில்லை.

அமைச்சர் பொங்கலூர் பழனிசாமி அறிக்கை:

கோவை மேட்டுப்பாளையம் ரோட்டில் கட்டப்பட்டுள்ள பஸ் ஸ்டாண்ட், கவுண்டம்பாளையம்& வட வள்ளி கூட்டு குடிநீர் திட்டம் துவக்க விழாவில் பங்கேற்க துணை முதல்வர் ஸ்டாலின் இன்று காலை 7 மணிக்கு விமானத்தில் கோவை வருகிறார். அவரை வரவேற்கவும், விழாவில் பங்கேற்கவும் திமுக அனைத்து பிரிவு நிர்வாகிகள் தவறாது கலந்து கொள்ள வேண்டுகிறேன்.

அதிகாரிகள் தீவிர ஆய்வு

கவுண்டம்பாளையம் குடிநீர் திட்ட பணிகளை குடிநீர் வடிகால் வாரிய மேலாண் இயக்குநர் ககன்தீப்சிங்பேடி நேற்று ஆய்வு செய்தார். குடிநீர் குழாய், நீரேற்று நிலையம், சுத்திகரிப்பு நிலையத்தை பார்வையிட்டார். குடிநீர் தடையின்றி விநியோகிக்க முடியுமா என ஆய்வு செய்தார். இதேபோல் மாநகராட்சி கமிஷனர் அன்சுல் மிஸ்ரா மற்றும் பொறியாளர்கள் மேட்டுப்பாளையம் புதிய பஸ் ஸ்டாண்ட் இறுதி கட்ட பணிகளை நேற்று பார்வையிட்டனர். பணிகளை விரைவாக முடித்து திறப்பு விழாவிற்கு தயார் செய்ய உத்தரவிட்டனர்.

கோவை மேட்டுப்பாளையம் ரோட்டில் கட்டப்பட்டுள்ள பஸ் ஸ்டாண்ட், கவுண்டம்பாளையம்& வட வள்ளி கூட்டு குடிநீர் திட்டம் துவக்க விழாவில் பங்கேற்க துணை முதல்வர் ஸ்டாலின் இன்று காலை 7 மணிக்கு விமானத்தில் கோவை வருகிறார். அவரை வரவேற்கவும், விழாவில் பங்கேற்கவும் திமுக அனைத்து பிரிவு நிர்வாகிகள் தவறாது கலந்து கொள்ள வேண்டுகிறேன்.