தினமணி 18.06.2010
மேட்டுப்பாளையம் சாலை புதிய பஸ் நிலையம் செயல்பட துவங்கியது
கோவை, ஜூன் 17: கோவை - மேட்டுப்பாளையம் சாலையில் அமைக்கப்பட்ட புதிய பஸ் நிலையம் வியாழக்கிழமை முதல் செயல்படத் துவங்கியது.
கோவை- மேட்டுப்பாளையம் சாலை பஸ் நிலையத்தை துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை திறந்து வைத்தார். இந்தப் பஸ் நிலையத்தில் இருந்து மேட்டுப்பாளையம் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதுகுறித்து போக்குவரத்துக் கழக அதிகாரிகள் கூறியது:
கோவை - மேட்டுப்பாளையம் இடையே 65 அரசு பஸ்களும், 23 தனியார் பஸ்களும் இயக்கப்படுகின்றன. இந்தப் பஸ்கள் அனைத்தும் வியாழக்கிழமை முதல் மேட்டுப்பாளையம் சாலை பஸ் நிலையத்தில் இருந்து இயங்கி துவங்கியுள்ளன. பஸ் நிலையத்தில் இருந்து உதகை செல்லும் பஸ்கள் வெள்ளிக்கிழமை முதல் இயக்கப்படும்.
உக்கடம், காந்திபுரம், சிங்காநல்லூர் பஸ் நிலையங்களில் இருந்து புதிய பஸ் நிலையத்துக்கு 20 இணைப்பு நகர பஸ்கள் இயக்கப்படுகின்றன. இந்தப் பஸ்களின் எண்ணிக்கையை அதிகரிக்கத் திட்டமிள்ளோம், என்றனர்.