Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

சேவையை மேம்படுத்த மாநகராட்சி போக்குவரத்து நிர்வாக முறையில் மாற்றம்

Print PDF

தினகரன் 21.06.2010

சேவையை மேம்படுத்த மாநகராட்சி போக்குவரத்து நிர்வாக முறையில் மாற்றம்

பெங்களூர், ஜூன் 21:சேவையை மேம்படுத்துவதற்காக மூன்றடுக்கு நிர்வாகமுறையை கொண்டுவர பெங்களூர் மாநகர போக்குவரத்து கழகம் திட்டமிட் டுள்ளது.

மழைவந்தால் போதும் சில பஸ்களில் ஒழுகும். சில பஸ்கள் துருப்பிடித்துவிடும். இது பயணிகளுக்கு தொந்தரவாக இருந்துவருகிறது. மோசமான பஸ் பராமரிப்பே இதற்கு முக்கிய காரணம். பஸ் மேலாண்மையை மேம்படுத்த நிர்வாகமுறையில் மாற்றத்தை கொண்டு வர பெங்களூர் மாநகர போக்குவரத்து கழகம்(பி.எம்.டி.சி.) திட்டமிட்டுள்ளது.

கே.எஸ்.ஆர்.டி.சி., என்..கே.ஆர்.டி.சி., என்.டபிள்யூ.கே.ஆர்.எஸ்.டி.சி. ஆகிய நிறுவனங்களில் இருப்பது போன்ற மூன்றடுக்கு நிர்வாகமுறையை கொண்டுவர பி.எம்.டி.சி. திட்டமிட்டுள்ளது. தற்போ தைய நிர்வாக கட்டமைப் பில், பி.எம்.டி.சி.யின் மத்திய அலுவலகமே பணிமனை யின் செயல்பாட்டை நேரடி யாக கண்காணித்து வருகி றது. இதனால் பஸ்களைசரிவர பராமரிக்க இயலாத சூழ்நிலை உருவாகிவிடுகிறது. 1997ல் பி.எம்.டி.சி. ஆரம்பித்தபோது 2500 பஸ்கள் இருந்தன. இப்போது 6 ஆயிரம் பஸ்கள் இருக்கின்றன. 13 பணிமனைகள் இன்று 34 ஆகியுள்ளது. டிசம்பருக்குள் இது 40 ஆகும்.பணிமனையை நிர்வகிக்க மத்திய அலுவலகத்திற்கு அடுத்தப் படியாக மண்டல அலுவலகத்தை கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது. இது குறித்து பி.எம் .டி.சி. மேலாண் இயக்குநர் சை யத் ஜமீர்பாஷா கூறுகை யில்,‘பஸ் பராமரிப்பு சரிவர கவனிக்கப்படவில்லை என்பதை அறிவோம். எனவே, மத்திய அலுவலகம் மற்றும் பணிமனைகளுக்கு இடையே மண்டல அலுவலகத்தை கொண்டுவந்தால், முடிவுகளை விரைவாக மேற்கொள்ளப்படும். பஸ் பராமரிப்பு மற்றும் உரிய சேவை வழங்க தொடர்கண்காணிப்பு அவசியம்.’ என்றார்.