தினமணி 22.06.2010
ஒசூர் புதிய பஸ் நிலையம் விரைவில் திறப்பு
'ஒசூர்
, ஜூன் 21: ஒசூரில் ரூ.11 கோடியில் கட்டி முடிக்கப்பட்ட புதிய நவீன பஸ் நிலையம் விரைவில் திறக்கப்படும் என்று உள்ளாட்சித் துறை செயலர் நிரஞ்சன் மார்டி கூறினார்.இந்த பஸ் நிலையத்தை திங்கள்கிழமை இரவு நிரஞ்சன் மார்ட்டி பார்வையிட்டார்
. பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியது:ஒசூர் புதிய நவீன் பஸ் நிலையம் மிக பிரம்மாண்டமாகவும்
, அழகாகவும் உள்ளது. உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு முடிந்தவுடன், விரைவில் பஸ் நிலையம் திறக்கப்படும். திறப்பு விழா தேதியை துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பார் என்றார் அவர்.தமிழக குடிநீர் வடிகால் வாரியத் தலைவர் ககன்தீப்சிங் பேடி
, நகராட்சி நிர்வாக இயக்குநர் செந்தில் குமார், தலைமை பொறியாளர் ரகுநாதன், நகராட்சி ஆணையர் பன்னீர்செல்வம், நகர்மன்றத் தலைவர் எஸ்.ஏ.சத்யா, துணைத் தலைவர் என்.எஸ்.மாதேஸ்வரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.