Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

ஒசூர் புதிய பஸ் நிலையம் விரைவில் திறப்பு'

Print PDF

தினமணி 22.06.2010

ஒசூர் புதிய பஸ் நிலையம் விரைவில் திறப்பு'

ஒசூர், ஜூன் 21: ஒசூரில் ரூ.11 கோடியில் கட்டி முடிக்கப்பட்ட புதிய நவீன பஸ் நிலையம் விரைவில் திறக்கப்படும் என்று உள்ளாட்சித் துறை செயலர் நிரஞ்சன் மார்டி கூறினார்.

இந்த பஸ் நிலையத்தை திங்கள்கிழமை இரவு நிரஞ்சன் மார்ட்டி பார்வையிட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியது:

ஒசூர் புதிய நவீன் பஸ் நிலையம் மிக பிரம்மாண்டமாகவும், அழகாகவும் உள்ளது. உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு முடிந்தவுடன், விரைவில் பஸ் நிலையம் திறக்கப்படும். திறப்பு விழா தேதியை துணை முதல்வர் மு..ஸ்டாலின் அறிவிப்பார் என்றார் அவர்.

தமிழக குடிநீர் வடிகால் வாரியத் தலைவர் ககன்தீப்சிங் பேடி, நகராட்சி நிர்வாக இயக்குநர் செந்தில் குமார், தலைமை பொறியாளர் ரகுநாதன், நகராட்சி ஆணையர் பன்னீர்செல்வம், நகர்மன்றத் தலைவர் எஸ்..சத்யா, துணைத் தலைவர் என்.எஸ்.மாதேஸ்வரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.