தினகரன் 28.07.2010
வாலாஜாபாத் பஸ் நிலையத்தில் கூரை அமைக்க தீர்மானம்
வாலாஜாபாத், ஜூலை 28: வாலாஜாபாத் பஸ் நிலையத்துக்கு மேற்கூரை அமைப்பது என்று பேரூராட்சி மன்றக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
வாலாஜாபாத் பேரூராட்சி மன்றக் கூட்டம் நேற்று நடந்தது. தலைவர் சேகர் தலைமை வகித்தார். துணைத் தலைவர் தியாகராஜன், செயல் அலுவலர் செல்வராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் எம்பி, எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து வாலாஜாபாத் பஸ் நிலையத்துக்கு மேற்கூரை அமைப்பது, 6வது வார்டு கன்னிகாபுரம் சாலையை சிமென்ட் சாலையாக மாற்றுவது என்பது உள்ளிட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.