தினகரன் 20.08.2010
மாநகரில் 100 இடங்களில் அமைகிறது ரூ 1 கோடியில் நவீன பஸ் ஸ்டாப் ஆட்டோ டிரைவர்களுக்கு
லைசென்சு டிஸ்பிளே சிஸ்டம்
திருப்பூர் மாநகரில் சுமார் 1000 ஆட்டோக்கள் இயங்கி வருகிறது. பொதுமக்கள் பயன்படுத்தும் முக்கிய போக்குவரத்து சாதனமாக ஆட்டோ உள்ள நிலையில், பொதுமக்கள் உள்ளிட்டோருக்கு ஆட்டோ டிரைவரின் முழுவிவரங்கள் தெரியும் வகையில் ஆட்டோ டிரைவர்களுக்கு லைசென்சு டிஸ்பிளே சிஸ்டம் எனும் முறையை போலீசார் அமல்படுத்த உள்ளனர். இதன்படி, ஆட்டோவில் ஆட்டோ டிரை வரின் பெயர், முகவரி, லைசென்சு எண், ஆட்டோ எண், வயது உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் குறிப்பிட்டு போலீசாரிடம் ஒப்புதல் பெறப்பட்ட சிறப்பு உரி மத்தை ஆட்டோவில் பொதுமக்கள் பார்வையிடும் வகையில் ஒட்டி வைக்க வேண்டும். இதன் மூலம் ஆட்டோ டிரைவர்கள் விதிமீறலில் ஈடுபடுவது தடுக்கப்படுவதுடன், பொதுமக்களுக்கும் பயனளிக்கும் என போலீசார் தெரிவித்தனர்.
திருப்பூர், ஆக. 20: திருப்பூர் மாநகரில் சுமார் 100 இடங்களில் `1 கோடியில் நவீன பஸ் ஸ்டாப்களை அமைக்க போக்குவரத்து போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
திருப்பூர் மாநகரில் போக் குவரத்து நெரிசல் அதிகரிப்பதற்கான காரணங்களில் ஒன்று பஸ் ஸ்டாப்கள் முறை யாக இல்லாதது. சாலையி லேயே நின்று செல்லும் பேருந்துகளால் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வரு கிறது.
இதனை தவிர்க்கும் வகையில் சாலையோரத்தில் நெரிசல் ஏற்படாத இடத்தில் பேருந்து நிறுத்தங்களை மாற்றி அமைக்க போலீசார் திட்டமிட்டனர். இதன் முதல் கட்டமாக அவிநாசி ரோட் டில் பேருந்து நிறுத்தங்கள் முறைப்படுத்தப்பட்டன.
இதன் தொடர்ச்சியாக மாநகர் முழுவதும் சுமார் 100 இடங்களில் பேருந்து நிறுத்தத்தை நெரிசல் ஏற்படாத வகையில் அமைக்க போலீ சார் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இந்த இடங்களில் பொதுமக்கள் நின்று செல்ல வசதியாக நவீன வசதிகளு டன் கூடிய பேருந்து நிறுத்த நிழற்குடைகளை அமைக்கவும் போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
திருப்பூர் வடக்கு காவல்நிலைய பகுதியில் சுமார் 60 இடங்களிலும் திருப்பூர் தெற்கு காவல்நிலையத்துக்குட் பட்ட பகுதியில் 42 இடங்க ளிலும் என 100க்கும் அதிக மான இடங்களில் பேருந்து நிறுத்தம் சீரமைக்கப்பட்டு, நவீன வசதிகளுடன் அமைக்கப்படும் என கூறப்படுகிறது.
இது தொடர்பாக போலீ சார் கூறுகையில், "திருப்பூ ரில் நெரிசலை தவிர்க்க பல் வேறு திட்டங்கள் செயலாக்கப்பட்டு வருகின்றன. இதன் தொடர்ச்சியாக தற்போது பஸ் ஸ்டாப்கள் நவீனப்படுத்தப்பட உள்ளன. மும்பையில் உள்ளதை மாதிரியாக கொ ண்டு இந்த பேருந்து நிறுத்தங்கள் அமைக்கப்பட உள் ளன.
தலா ரூ 1 லட்சம் என்ற அடிப்படையில், 100 பஸ் ஸ்டாப்கள் ரூ 1 கோடியில் மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஸ்பான்சர் அடிப்படையில் இந்த பணிகள் விரைவில் மேற்கொள்ளப் பட உள்ளன," என்றார்.
புதியதாக அமைக்க திட்டமிடப்பட்டுள்ள இந்த நவீன பஸ் ஸ்டாப்களில், டிஜிட் டல் ஸ்கிரீனில் எந்தெந்த பகுதிகளுக்கு செல்ல வேண் டிய பஸ்கள், அதன் வழித் தட எண் ஆகியவை தெரியும்.
போக்குவரத்து போலீசார் திட்டம் புதியதாக அமைக்க திட்டமிடப்பட்டுள்ள இந்த நவீன பஸ் ஸ்டாப்களில், டிஜிட் டல் ஸ்கிரீனில் எந்தெந்த பகுதிகளுக்கு செல்ல வேண் டிய பஸ்கள், அதன் வழித் தட எண் ஆகியவை தெரியும்.
அதேபோன்று நேரத்தை காட்டும் கடிகாரம், பயணி கள் அமர இருக்கைகள் உள்ளிட்டவையும் இதில் இருக்கும் என போலீசார் தெரிவித்தனர். இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால் மாநகரம் சற்று பளிச் என காட்சியளிக்கும் என்பதில் சந்தேகமில்லை.