Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

ரூ23 லட்சம் செலவில் வாலாஜாபாத் பஸ் நிலையத்தில் கூரை

Print PDF

தினகரன் 27.08.2010

ரூ23 லட்சம் செலவில் வாலாஜாபாத் பஸ் நிலையத்தில் கூரை

வாலாஜாபாத், ஆக.27: வாலாஜாபாத் பஸ் நிலையத்தில் ரூ23 லட்சம் செலவில் கூரை அமைக்கும் பணி தொடங்கியுள்ளது. காஞ்சிபுரத்தில் இருந்து சென்னை செல்லும் சாலையில் வாலாஜாபாத் பஸ் நிலையம் உள்ளது. இங்கிருந்து சென்னை, செங்கல்பட்டு, ஸ்ரீபெரும்புதூர், மாமல்லபுரம், தாம்பரம் உட்பட பல பகுதிகளுக்கு தினமும் ஏராளமான பஸ்கள் சென்று வருகின்றன. இந்த பஸ் நிலையத்தில் பஸ்கள் நிற்கும் இடத்தில் கூரை அமைக்க பேரூராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதற்காக, காஞ்சிபுரம் எம்பி தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ13 லட்சம், உத்திரமேரூர் எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.10 லட்சம் ஒதுக்கப்பட்டது. இதையடுத்து பஸ் நிலையத்தில் கூரை அமைக்கும் பணி நேற்று முன்தினம் தொடங்கியது. இந்தப் பணிகள் 2 மாதத்தில் முடியும் என பேரூராட்சி செயல் அலுவலர் செல்வராசன் தெரிவித்துள்ளார். பணி தொடங்கியது