தினகரன் 23.09.2010
350 வெளியூர் துப்புரவு பணியாளர் தூய்மை பணி
தஞ்சை, செப்.23: தஞ்சை பெரியகோயில் ஆயிரமா வது ஆண்டு நிறைவு விழாவையொட்டி நகரை தூய் மையாக வைத்திருக்க வெளிமாவட்டம் மற்றும் குடந்தை, பட்டுக்கோட்டை நகராட்சிகளிலிருந்து 350 துப்புரவு பணியாளர்கள் நேற்று தஞ்சைக்கு வந் தனர்.
தஞ்சை பெரியகோயில் ஆயிரமாவது ஆண்டு நிறைவுவிழா நேற்று முதல் துவங்கி வரும் 26ம்தேதி வரை நடைபெறுகிறது. இதனையொட்டி பெரியகோயில், ஆயுதப்படை மைதானம், திலகர் திடல், அரண்மனை வளாகம், தொல்காப்பியர் சதுக்கம், மணிமண்டபம், கரந்தை ஆகிய இடங்களில் விழா நிகழ்ச்சிகளும், சங¢கமம் கலை நிகழ்ச்சிகளும் நடைபெறுகிறது. இந்த இடங்களில் ஆயிரக்கணக்கில் பொதுமக்கள் கூடுவர். எனவே சுகாதார வசதியை பேணுவதற்காக தஞ்சை நகராட்சி விரிவான ஏற்பாடுகளை செய்து வருகிறது. அதன்படி மொபைல் கழிவறைகளும், குப்பை தொட்டிகளும் வைக்கப்பட்டுள்ளது. நகரில் குவியும் குப்பைகளை உடனுக்குடன் அப்புறப்படுத்தும் விதமாக பிற நகராட்சிகளிலிருந்து துப்புரவு பணியாளர்கள், கண்காணிப்பாளர்கள் 300 பேர் வரவழைக்கப்பட்டுள்ளனர். நேற்று வந்த துப்புரவு பணியாளர்கள் தஞ்சை கீழராஜவீதியில் துப்புரவு பண¤ செய்தனர்.