Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

ஆட்சியர் அலுவலக வளாகத்தில் 5 ஏக்கரில் புதிய பஸ் நிலையம்

Print PDF

தினமணி 13.10.2010

ஆட்சியர் அலுவலக வளாகத்தில் 5 ஏக்கரில் புதிய பஸ் நிலையம்

திருவள்ளூர், அக். 12: மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் 5 ஏக்கரில் புதிய பஸ் நிலையம் அமைக்க திருவள்ளூர் நகர்மன்ற அவசரக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

திருவள்ளூர் நகராட்சியின் நகர்மன்ற அவசரக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நகர்மன்ற தலைவர் பாண்டியன் தலைமையில் நடைபெற்றது. நகராட்சி ஆணையர் முத்துராமேஸ்வரன் வரவேற்றார்.

இதில், புதை சாக்கடைப் பணிகள் முடிவடைந்த பெரும்பாக்கம், எடப்பாளையம், சத்தியமூர்த்தி தெரு, வள்ளூவர்புரம், முகமதலி தெரு, ஜெயாநகர், வி.எம்.நகர் ஆகிய பகுதிகளில் 14.30 லட்சத்தில் சிமென்ட் சாலைகள் அமைத்தல், 1-ம் வார்டு முதல் 27-ம் வார்டு வரை நகராட்சிக்கு உள்பட்ட தாழ்வான பகுதிகளில் தேங்கியுள்ள மழை நீரை அகற்றி சீரமைப்பதற்கு 1 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் பணி உத்தரவு வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும் மாவட்டத்தின் தலைநகராக உள்ள திருவள்ளூரில் இருந்து தினசரி 60-க்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்படுகின்றது. வெளியூரில் இருந்தும் ஏராளமான பஸ்கள் வந்து செல்வதால் தற்போதுள்ள பஸ் நிலையம் இட நெருக்கடியாக உள்ளதாலும், அப்பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துக்கள் ஏற்படுவதாலும் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் 5 ஏக்கரில் புதிய பஸ் நிலையம் அமைத்தல் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நகர்மன்ற துணைத் தலைவர் ரவிச்சந்திரன் நன்றி கூறினார்.