தினமணி 13.10.2010
ஆட்சியர் அலுவலக வளாகத்தில் 5 ஏக்கரில் புதிய பஸ் நிலையம்திருவள்ளூர்
, அக். 12: மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் 5 ஏக்கரில் புதிய பஸ் நிலையம் அமைக்க திருவள்ளூர் நகர்மன்ற அவசரக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.திருவள்ளூர் நகராட்சியின் நகர்மன்ற அவசரக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நகர்மன்ற தலைவர் பாண்டியன் தலைமையில் நடைபெற்றது
. நகராட்சி ஆணையர் முத்துராமேஸ்வரன் வரவேற்றார்.இதில்
, புதை சாக்கடைப் பணிகள் முடிவடைந்த பெரும்பாக்கம், எடப்பாளையம், சத்தியமூர்த்தி தெரு, வள்ளூவர்புரம், முகமதலி தெரு, ஜெயாநகர், வி.எம்.நகர் ஆகிய பகுதிகளில் 14.30 லட்சத்தில் சிமென்ட் சாலைகள் அமைத்தல், 1-ம் வார்டு முதல் 27-ம் வார்டு வரை நகராட்சிக்கு உள்பட்ட தாழ்வான பகுதிகளில் தேங்கியுள்ள மழை நீரை அகற்றி சீரமைப்பதற்கு 1 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் பணி உத்தரவு வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.மேலும் மாவட்டத்தின் தலைநகராக உள்ள திருவள்ளூரில் இருந்து தினசரி
60-க்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்படுகின்றது. வெளியூரில் இருந்தும் ஏராளமான பஸ்கள் வந்து செல்வதால் தற்போதுள்ள பஸ் நிலையம் இட நெருக்கடியாக உள்ளதாலும், அப்பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துக்கள் ஏற்படுவதாலும் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் 5 ஏக்கரில் புதிய பஸ் நிலையம் அமைத்தல் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நகர்மன்ற துணைத் தலைவர் ரவிச்சந்திரன் நன்றி கூறினார்.