தினமணி 02.11.2010
வீரவநல்லூரில் பயணிகள் நிழற்குடை திறப்பு
அம்பாசமுத்திரம், நவ. 1: வீரவநல்லூரில் பயணிகள் நிழற்குடை திறப்பு விழா, உள்ளாட்சி தின விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
வீரவநல்லூர் பஸ் நிலையத்தில் பேரவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ. 4 லட்சம் மதிப்பில் பயணிகள் நிழற்குடை கட்டப்பட்டுள்ளது.
இதன் திறப்பு விழா, உள்ளாட்சி தினவிழா பேரூராட்சித் தலைவர் வி.எஸ். ராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. துணைத் தலைவர் ரா. கோகிலா முன்னிலை வகித்தார்.
விழாவில் பா. வேல்துரை எம்.எல்.ஏ. பயணிகள் நிழற்குடையை திறந்துவைத்து பேசினார்.
பேரூராட்சி உறுப்பினர்கள் பி. ரவிச்சந்திரன், பி. குமார், எம்.ஏ. ரஹ்மான், கே.எஸ். திருமலையப்பன், நடராஜன், பூமிநாதசுவாமி கோயில் அறங்காவலர் குழுத் தலைவர் லட்சுமணன் உள்ளிட்டோர் வாழ்த்திப் பேசினர். முடிவில் நிர்வாக அதிகாரி சங்கரன் நன்றி கூறினார்.