Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

ரூ. 24 லட்சத்தில் பஸ் நிறுத்தம்

Print PDF

தினமணி           07.12.2010

ரூ. 24 லட்சத்தில் பஸ் நிறுத்தம்

விழுப்புரம், டிச. 6: விழுப்புரம் நான்குமுனை சந்திப்பில் ரூ.24 லட்சத்தில் கட்டப்பட்ட பஸ் நிறுத்தத்தை துணை முதல்வர் மு..ஸ்டாலின் திங்கள்கிழமை திறந்துவைத்தார்.

சட்டப்பேரவை உறுப்பினர் தொகுதி வளர்ச்சி நிதியில் கட்டப்பட்ட இந்த பஸ் நிறுத்தத்தை திறந்து வைத்த துணை முதல்வர், கே.கே.சாலையில் நகராட்சி மற்றும் ரோட்டரி சங்கம் இணைந்து ரூ.1 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள மின்மயானத்தை பார்வையிட்டார்.

அங்கு கந்தசாமி மரகதம்மாள் அறக்கட்டளை சார்பில் வழங்கப்பட்ட அமரர் ஊர்திக்கான சாவியை மின் மயான திட்ட பொறுப்பாளர் ரோட்டரி ராமகிருஷ்ணனிடம் ஒப்படைத்தார்.

இந்நிகழ்ச்சிகளில் உயர்கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடி, மாவட்ட ஆட்சியர் ஆர். பழனிச்சாமி, மாவட்ட வருவாய் அலுவலர் ந.வெங்கடாசலம், விசாலாட்சி பொன்முடி, சட்டபேரவை உறுப்பினர் செ.புஷ்பராஜ், நகர்மன்றத் தலைவர் இரா.ஜனகராஜ், நகராட்சி ஆணையர் அ..சிவக்குமார், பொறியாளர் கோ.பார்த்திபன், தளபதி நற்பணி மன்ற தலைவர் பொன்.கெüதமசிகாமணி, செயலர் சி.செல்வராஜ், நகரச் செயலர் பாலாஜி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதைத் தொடர்ந்து கலைஞர் அறிவாலயம் அருகில் அவருக்கு திமுக சார்பில் பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில் மாவட்ட அவைத் தலைவர் கே.எஸ். மஸ்தான், பொருளாளர் புகழேந்தி, வேளாண் விற்பனைக்குழுத் தலைவர் கு.ராதாமணி, மாவட்ட ஊராட்சிக் குழுத் துணைத் தலைவர் மைதிலி ராஜேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.